சாம்பார் ருசியாக இல்லை: வேதனையில் குழந்தைகளை கொன்று தாய் தற்கொலை

சாம்பார் ருசியாக இல்லை என்று கணவன் கூறி தகராறு செய்ததால், வேதனையில் தனது இரண்டு குழந்தைகளை கொன்றுவிட்டு தாய் தற்கொலை செய்துக் கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

ஆந்திரா மாநிலம், மேற்கு கோதாவரி மாவட்டம், நீலவரம் கிராமத்தை சேர்ந்தவர் சூரிபாபு (28). இவரது மனைவி தேவமணி (26). இவர்கள் இருவரும் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு காதலிதது திருமணம் செய்துக் கொண்டனர்.

இவர்களுக்கு, மல்லிகார்ஜூனா (3) என்ற மகனும், 7 மாத மகளும் இருந்தனர்.
இந்நிலையில், கடந்த 9ம் தேதி சூரி வேலைக்கு சென்றுவிட்டு வீடு திரும்பி உணவு சாப்பிட்டார். அப்போது, சாம்பார் ருசியாக இல்லை என்றுக்கூறி தகராறு செய்துள்ளார்.

இதனால், மனமுடைந்து போன தேவமணி இரவு முழுவதும் அழுதுள்ளார்.
இதன்பிறகு, மறுநாள் காலை சூரி வழக்கம்போல் வேலைக்கு சென்றார். பின்னர், தனது குழந்தைகளை அழைத்துச் சென்ற தேவமணி, கண்ணேறு மழைநீர் கால்வாயில் குழந்தைகளை வீசிவிட்டு தானும் அதில் குதித்து தற்கொலை செய்துக் கொண்டுள்ளார்.

இந்த சம்பவத்தில், மூன்று பேரும் பரிதாபமாக உயிரிழந்தனர். சம்பவம் குறித்து தகவல் அறிந்த போலீசார், சடலங்களை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும், இந்த சம்பவம் குறித்து சூரியிடம் போலீசார் மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

எங்களுடைய தமிழ் செய்திகளை உங்கள் மெயில் இன்பாக்சில் பெறுவதற்கு இங்கே உங்கள் மெயில் ஐடியை பதிவு செய்யவும் : Tamil news RSS

OR You can install Google News on Android or iOS, and then access our edition https://news.google.com/publications/CAAqBwgKMP_rkQsw3YOnAw?oc=3&ceid=IN:ta through the app.

Advertisement
மேலும் செய்திகள்
the-boy-who-spent-rs-12-lakh-on-an-online-game
ஒரு வருடத்தில் அப்பாவின் ரூ.12 லட்சம் செலவு – போலீசில் சிக்கிய சிறுவன்… என்ன நடந்தது தெரியுமா…?
elder-brother-who-killed-younger-brother-in-family-dispute
தம்பியை கொன்ற அண்ணன் – அதிர்ச்சி காரணம்…!
young-woman-killed-for-refusing-to-have-sex-near-ulundurpet
ஆசைக்கு இணங்க மறுத்த பெண் - குத்தகைதாரர் வெறிச்செயல்
karnadaka-chain-snatching-on-road-by-bikers
கர்நாடகாவில் தடுபூசி போட்ட பெண்ணிற்கு நிகழ்ந்த கொடுமை!
12-year-old-girl-rape-by-20-year-old-neighbor
பிறந்தநாள் விழாவிற்கு சென்ற 12 வயது சிறுமி… மொட்டைமாடியில் வைத்து இளைஞர் வெறிச்செயல்...
illegal-affair-krishnagiri-the-temple-priest-who-killed-his-wife-was-arrested-in-krishnagiri
மனைவியுடன் உல்லாசமாக இருந்த உதவியாளர்…! கோயிலுக்கு அழைத்துச்சென்று அர்ச்சனை செய்த பூசாரி
17years-old-girl-raped-many-times
17வயது சிறுமியை 2 ஆண்டுகளாக பலாத்காரம் செய்த பலர் – உறைய வைக்கும் தகவல்கள்!
illegal-affair-on-the-wife-s-sister-cruelty-to-the-condemned-wife
மனைவியின் தங்கைக்கூட உறவு… கண்டித்த கர்ப்பிணி பெண்ணிற்கு நிகழ்ந்த கொடூரம்!
1-21-crore-fine-for-cut-down-two-trees
இரண்டு மரங்களை வெட்டியவருக்கு ரூ.1.21 கோடி அபாரதமாம்!
nellai-illegal-affair-viral-video
இளம் பெண்ணை வசியப்படுத்திய தண்ணி கேன் சப்ளேயர் : குடும்பத்தினர்கள் விபரீதம்..
Tag Clouds