மதுரை விமான நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபர் கைது

Man arrested for bomb blast threat to Madurai airport

by Subramanian, May 1, 2019, 08:48 AM IST

மதுரை விமான நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த இளைஞரை போலீசார் கைது செய்தனர்.

இலங்கை தொடர் குண்டு வெடிப்பு காரணமாக மதுரை விமான நிலையத்தில் பலத்த பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. இதனால் விமான நிலையத்தில் கடுமையான பாதுகாப்பு விதிமுறைகள் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் கடந்த 2 தினங்களுக்கு முன்பு மதுரை விமான நிலையத்தில் குண்டு வைக்கப் போவதாக மிரட்டல் கடிதம் வந்தது.
இதனையடுத்து பாதுகாப்பு அதிகாரிகள் மிரட்டல் கடிதம் தொடர்பாக தீவிர விசாரணை நடத்தினர். அதில் அந்த மிரட்டல் கடிதத்தை எழுதியது தஞ்சாவூரைச் சேர்ந்த பாஸ்கர், சந்திரசேகர் ஆகியோர் என தெரிந்தது.

இது தொடர்பான புகாரை வழக்குப்பதிவு செய்த பெருங்குடி போலீசார் தீவிர விசாரணை நடத்தி தஞ்சாவூர் அருகேயுள்ள அய்யம் பேட்டையை சேர்ந்த மோகன் என்பவனை கைது செய்தனர். முதற்கட்ட விசாரணையில் தனது எதிரிகளை சிக்க வைப்பதற்காக இவ்வாறு கடிதம் எழுதியிருப்பது தெரிய வந்துள்ளது.

நாடுமுழுவதும் 'புர்கா' அணிய தடை! -மோடியிடம் கோரிக்கை விடுத்த சிவசேனா

You'r reading மதுரை விமான நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபர் கைது Originally posted on The Subeditor Tamil

More Crime News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை