சபரிமலை சென்ற கேரள பெண்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் - உச்சநீதிமன்றம் உத்தரவு!
SC orders for Protection to Kerala Women on Sabarimala Issue
சபரிமலையில் ஐயப்பனை தரிசனம் செய்து திரும்பிய கேரள பெண்கள் பிந்து, கனகதுர்கா இருவருக்கும் போதிய பாதுகாப்பு வழங்க கேரள அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
உச்ச நீதிமன்ற உத்தரவுக்குப் பின் முதன் முறையாக கடந்த 2-ந் தேதி இருவரும் ஐயப்பனை தரிசித்தனர். இதன் பின் தங்களுக்கு தொடர்ந்து மிரட்டல் வருவதாகவும், பொது வெளியில் தலை காட்ட முடியாத அளவுக்கு அச்சுறுத்தல் இருப்பதாகவும் கூறி பாதுகாப்பு கோரி உச்ச நீதிமன்றத்தில் நேற்று மனு செய்திருந்தனர்.
இருவரின் மனுவை அவசர வழக்காக உச்ச நீதிமன்றம் விசாரித்தது. இருவருக்கும் போதிய போலீஸ் பாதுகாப்பு வழங்குமாறு கேரள அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.
You'r reading சபரிமலை சென்ற கேரள பெண்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் - உச்சநீதிமன்றம் உத்தரவு! Originally posted on The Subeditor Tamil
More India News