ஐயப்பனை தரிசித்ததாக பெண்கள் லிஸ்ட் – பொய் சொன்னதா கேரள அரசு?

சபரிமலை ஐயப்பனை தரிசித்ததாக உச்ச நீதிமன்றத்தில் கேரள அரசு கொடுத்த பட்டியலில் ஏக குளறுபடி என தகவல் வெளியாகி உள்ளது.

பெண்களின் வயதை குறைத்து காண்பித்துள்ளதும் அம்பலமாகி கேரள அரசு பொய் சொல்கிறது என காங்கிரஸ், பா.ஜ.க தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். அனைத்து வயது பெண்களும் சபரிமலை ஐயப்பனை தரிசிக்கலாம் என்ற தீர்ப்புக்குப் பின் 10 முதல் 50 வயதுக்குட்பட்ட 51 பெண்கள் தரிசனம் செய்ததாக உச்ச நீதிமன்றத்தில் கேரள அரசுத் தரப்பில் நேற்று தெரிவிக்கப்பட்டது.

கேரள அரசு தாக்கல் செய்த பட்டியலில் ஏக குளறுபடிகள் உள்ளது அம்பலமாகியுள்ளது. ஆந்திரா மாநிலம் குண்டூரைச் சேர்ந்த பத்மாவதி தாசரி என்ற பெண்ணின் உண்மையான வயது 55. ஆனால் கேரள அரசின் பட்டியலில் 48 வயது என உள்ளது. அதே போல் தமிழகத்தின் தருமபுரியைச் சேர்ந்த கலாவதி என்ற 52 வயது பெண்ணின் வயது 43 எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இதேபோல் 50 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் பலரின் வயதை கேரள அரசு குறைத்துக் காண்பித்தது வெட்கக்கேடான செயல் என கேரள காங்கிரஸ் தலைவர் ரமேஷ் சென்னிதலா கண்டனம் தெரிவித்துள்ளார்.

கேரள பா.ஜ.க. தலைவர் ஸ்ரீதரன் பிள்ளையும் கேரள அரசு பொய் சொல்வதாக குற்றம் சாட்டியுள்ளார். ஐயப்பனை தரிசித்த 51 பெண்களின் பட்டியலில் கேரளாவைச் சேர்ந்த ஒருவர் பெயரும் இல்லை. அப்படியெனில் ஜனவரி 2-ந் தேதி பிந்து, கனகதுர்கா ஆகியோர் ஐயப்பனை தரிசித்ததாக கூறுவதும் பொய்யா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

இதற்கு பதிலளித்த கேரள தேவசம் போர்டு கடகம் பள்ளி சுரேந்திரன், ஆன்லைனில் பதிவு செய்து தரிசித்த பெண்களின் பட்டியல் தான் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. கனகதுர்கா, பிந்து தனியாக சென்று தரிசனம் செய்தவர்கள் என்று மழுப்பலாக தெரிவித்துள்ளதும் சர்ச்சையாகி உள்ளது.

எங்களுடைய தமிழ் செய்திகளை உங்கள் மெயில் இன்பாக்சில் பெறுவதற்கு இங்கே உங்கள் மெயில் ஐடியை பதிவு செய்யவும் : Tamil news RSS

OR You can install Google News on Android or iOS, and then access our edition https://news.google.com/publications/CAAqBwgKMP_rkQsw3YOnAw?oc=3&ceid=IN:ta through the app.

Advertisement
மேலும் செய்திகள்
guarantee-signature-required-mudra-loan-increase-to-20-lakhs-who-will-get-it
கியாரண்டி கையெழுத்தே தேவையில்... முத்ரா லோன்... 20 லட்சமாக உயர்வு... யார் யாருக்கு கிடைக்கும்?
a-trainee-ias-officer-a-thousand-lies-fortunately-people-escaped
ஒரு பயிற்சி ஐ.ஏ.எஸ் அதிகாரியும்... ஆயிரம் பொய்களும்... நல்ல வேளை மக்கள் தப்பிச்சாங்க!
students-who-did-not-wear-double-braids-teachers-who-took-scissors-in-hand-officials-who-suspended-them-in-action
இரட்டை ஜடை போடாத மாணவிகள்... கத்தரியை கையில் எடுத்த ஆசிரியர்கள்... அதிரடியாக சஸ்பெண்ட் செய்த அதிகாரிகள்
bir-mohammed-caught-in-pocso-panchayat-held-in-jamaat
போக்சோவில் சிக்கிய பீர் முகமது... ஜமாத்தில் நடந்த கட்டி வைத்து நடந்த பஞ்சாயத்து
gitari-film-actress-who-entered-wayanad-landslide
வயநாடு நிலச்சரிவு... பரபரவென களத்தில் இறங்கிய கிடாரி பட நடிகை... நீளும் உதவிக்கரங்கள்...
can-nirmala-sitharaman-be-mocked-turbulent-weather-in-coimbatore
தயாநிதி மாறனின் பிராமணர்கள் மொழி.. நிர்மலா சீதாராமனை கேலி செய்யலாமா? கோவையில் கொந்தளித்த வானதி
india-accounts-for-46-of-world-s-new-covid-19-cases-quarter-of-deaths
ஒட்டுமொத்த கொரோனா பாதிப்பில் 46% இந்தியாவில் பதிவாகியுள்ளது – உலக சுகாதார நிறுவனம்
covid-deaths-due-to-oxygen-shortage-no-less-than-genocide-says-allahabad-high-court
ஆக்ஸிஷஜன் இல்லாமல் இறப்பது இனப்படுகொலைக்கு ஒப்பானது – நீதிமன்றம் காட்டம்!
rahul-gandhi-slams-modi
ஆக்சிஜன் இல்லாமல் இறக்கிறார்கள் உங்களுக்கு வீடு கேக்குதா? – மோடியை சாடிய ராகுல்!
woman-in-an-auto-rickshaw-carried-the-body-of-her-corona-dead-husband-in-uttar-pradesh
ஆம்புலன்சுக்கு அதிக பணம் கேட்டதால்.. கணவரின் சடலத்தை ஆட்டோவில் எடுத்துச் சென்ற மனைவி
Tag Clouds