ராகுல் பிரதமராக தமிழகத்தில் அமோக ஆதரவு - கருத்துக் கணிப்பில் பரபர தகவல்!

தமிழகத்தில் திமுக-காங்கிரஸ் தலைமையிலாக மகா கூட்டணிக்கு அமோக ஆதரவும், ராகுல் காந்தி பிரதமராவதற்கும் மக்களின் விருப்பமாக உள்ளது என்று புதிய கருத்துக் கணிப்பில் தகவல் வெளியாகி உள்ளது.

வரும் மக்களவைத் தேர்தல் குறித்து நியூஸ் 18 தமிழ் செய்தி சானலும், பர்ஸ்ட் போஸ்டும் இணைந்து நடத்திய மெகா சர்வே முடிவுகள் வெளியாகி உள்ளது. இதில் தமிழகத்தில் திமுக, காங்கிரஸ் அங்கம் வகிக்கும் மெகா கூட்டணி எடுபடுமா என்பதற்கு 52 சதவீதம் பேர் ஆம் என்றும், எடுபடாது என 38 சதவீதம் பேரும் கருத்து தெரிவித்துள்ளனர் பிரதமராக யாருக்கு ஆதரவு என்று கேட்டதற்கு, ராகுல் காந்தி என 69.7 சதவீதம் பேரும், மோடிக்கு 10.6 சதவீதம் பேரும் மட்டுமே ஆதரவாக கருத்து தெரிவித்துள்ளனர்.

மம்தாவுக்கு 2.1%, மாயாவதிக்கு 2.8% பேரும் ஆதரவு அளித்துள்ளனர். தேசிய அளவில் மகா கூட்டணி எடுபடுமா என்ற கேள்விக்கு ஆம் என்று 49.1% பேரும் இல்லை என 34.2%, உறுதியாக தெரியவில்லை என 16.7 சதவீதம் பேரும் கருத்து தெரிவித்துள்ளனர். தேசிய அளவில் பிரதமர் பதவிக்கு தகுதியான வேட்பாளர் என மோடிக்கு 52.8 சதவீதத்தினரும், ராகுலை 26.9% பேரும் ஆதரித்துள்ளனர்.

தேசிய அளவில் பிரதமர் வேட்பாளர் போட்டியில் மம்தா, மாயாவதிக்கு சொற்ப ஆதரவே உள்ளதாக கருத்துக் கணிப்பில் தெரிய வந்துள்ளது. நாட்டு நலனைக் காப்பதில் நம்பகத்தன்மை, வளர்ச்சித் திட்டங்களை செயல்படுத்துவது, ஊழலை ஒழிப்பது, நிதி நேர்மையல் நம்பகத்தன்மை, சர்வதேச அளவில் இந்தியாவின் மதிப்பை உயர்த்துவது போன்றவற்றில் யார் சிறப்பாகச் செயல்படுவார் என்ற கேள்விக்கும் தேசிய அளவில் மோடிக்கு 55% மேலானவர்கள் ஆதரவாகவும் 25 சதவீதம் பேர் மட்டுமே ராகுலை ஆதரித்துள்ளனர்.

நாடு முழுவதும் 23 மாநிலங்களில் 320 எம்.பி. தொகுதிகளில் 34 ஆயிரத்து 470 பேரிடம் கருத்துக் கேட்கப்பட்டதாகவும், அறிவியல்பூர்வமான கேள்விகள் அடிப்படையில் மக்களிடம் நடத்தப்பட்டதாக கருத்துக் கணிப்பை நடத்திய இப்சாஸ் நிறுவனத்தின் நிபுணர் பர்ஜா சக்ரவர்த்தி தெரிவித்துள்ளார்.

எங்களுடைய தமிழ் செய்திகளை உங்கள் மெயில் இன்பாக்சில் பெறுவதற்கு இங்கே உங்கள் மெயில் ஐடியை பதிவு செய்யவும் : Tamil news RSS

OR You can install Google News on Android or iOS, and then access our edition https://news.google.com/publications/CAAqBwgKMP_rkQsw3YOnAw?oc=3&ceid=IN:ta through the app.

Advertisement
மேலும் செய்திகள்
india-accounts-for-46-of-world-s-new-covid-19-cases-quarter-of-deaths
ஒட்டுமொத்த கொரோனா பாதிப்பில் 46% இந்தியாவில் பதிவாகியுள்ளது – உலக சுகாதார நிறுவனம்
covid-deaths-due-to-oxygen-shortage-no-less-than-genocide-says-allahabad-high-court
ஆக்ஸிஷஜன் இல்லாமல் இறப்பது இனப்படுகொலைக்கு ஒப்பானது – நீதிமன்றம் காட்டம்!
rahul-gandhi-slams-modi
ஆக்சிஜன் இல்லாமல் இறக்கிறார்கள் உங்களுக்கு வீடு கேக்குதா? – மோடியை சாடிய ராகுல்!
woman-in-an-auto-rickshaw-carried-the-body-of-her-corona-dead-husband-in-uttar-pradesh
ஆம்புலன்சுக்கு அதிக பணம் கேட்டதால்.. கணவரின் சடலத்தை ஆட்டோவில் எடுத்துச் சென்ற மனைவி
corona-infection-confirmed-8-lions-hyderabad-zoo
இந்தியாவில் முதன்முறையாக 8 சிங்கங்களுக்கு கொரோனா!
pinarayi-son-in-law-will-get-a-chance-in-kerala-ministry
மருமகனுக்கு அமைச்சர் பதவி கொடுக்கும் பினராயி விஜயன்?!
bihar-extends-lockdown-until-may-2021
பீகாரில் மே 15 வரை ஊரடங்கு நீட்டிப்பு.. மந்திரி நிதிஷ்குமார் அறிவிப்பு..
rahul-gandhi-says-to-put-lockdown-all-over-india
கொரோனாவை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அவசியம்.. ராகுல் காந்தி அறிவிக்கை..
dont-do-ct-scan-says-by-aiims-director
லேசான அறிகுறி இருந்தால் சி.டி ஸ்கேன் செய்ய தேவையில்லை.. எய்ம்ஸ் இயக்குனர் தகவல்..
sonu-sood-gets-critically-ill-covid-patient-airlifted
விமான ஆம்புலன்ஸ் அனுப்பி கொரோனா நோயாளியின் உயிரை மீட்ட சோனுசூட்!
Tag Clouds