மதுரை வந்துள்ள அனைவருக்கும் வணக்கம்-தமிழில் பேச்சை தொடங்கிய பிரதமர் மோடி!

Modi starts speech in Tamil

by Nagaraj, Jan 27, 2019, 13:25 PM IST

மதுரை எய்ம்ஸ் அடிக்கல் நாட்டு விழாவில் மதுரைக்கு வந்துள்ள அனைவருக்கும் வணக்கம் என்று கூறி பேச்சைத் தொடங்கினார் பிரதமர் மோடி.

சுமார் 10 நிமிடங்கள் ஆங்கிலத்தில் பேசிய மோடி, நன்றி வணக்கம் என்று தமிழில் கூறி பேச்சை நிறைவு செய்தார்.

விழாவில் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆங்கிலத்தில் எழுதி வைத்த உரையைப் படித்தார். முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தமிழில் பேசினார்.

விழாவில் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித்,மத்திய அமைச்சர்கள் நட்டா, பியூஸ் கோயல், பொன்.ராதாகிருஷ்ணன் மற்றும் தமிழக அமைச்சர்கள் பலரும் பங்கேற்றனர்.

விழா மேடையில் எய்ம்ஸ் மருத்துவமனையில் என்னென்ன சிறப்பம்சங்கள் இடம் பெறும் என்பது குறித்த மாதிரிக் காட்சிகளுடன் வீடியோ ஒளிபரப்பப்பட்டது.

You'r reading மதுரை வந்துள்ள அனைவருக்கும் வணக்கம்-தமிழில் பேச்சை தொடங்கிய பிரதமர் மோடி! Originally posted on The Subeditor Tamil

More India News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை