பெங்களூருவில் சாகச ஒத்திகையின் போது நடுவானில் மோதிக் கொண்ட போர் விமானங்கள் - ராணுவ அமைச்சர் கண் எதிரே நிகழ்ந்த பயங்கரம்!

two aircrafts clash in mid air in Bangalore

by Nagaraj, Feb 19, 2019, 15:16 PM IST

பெங்களூருவில் விமான சாகச ஒத்திகையின் இந்திய விமானப் படை போர் விமானங்கள் நடுவானில் மோதி தீப்பிடித்தன. ராணுவ அமைச்சர் நிர்மலா சீதாராமன் கண் எதிரே இந்த விபத்தில் ஒரு போர் விமானி பலியானார். இரு விமானிகள் காயங்களுடன் உயிர் தப்பினர்.

பெங்களூருவில் நாளை போர் விமான கண்காட்சி தொடங்க உள்ளது. கண்காட்சியை முன்னிட்டு இந்திய விமானப் படை போர் விமானங்களின் சாகச நிகழ்ச்சிகளும் நடத்தப் படவுள்ளது.

இதற்கான ஒத்திகை நிகழ்ச்சி யெலகங்கா விமானப்படை தளத்தில் இன்று நடைபெற்றது.இந்த ஒத்திகையை ராணுவ அமைச்சர் நிர்மலா சீதாராமனும் பார்வையிட்டார். விண்ணில் சீறிப் பாய்ந்து சாகசம் செய்த இந்திய விமானப் படையின் சூர்ய கிரண் விமானங்கள் நடுவானில் மோதி தீப்பிடித்தன. இதில் விமானி ஒருவர் இறந்தார். 2 விமானப் படை விமானிகள் மற்றும் பார்வையாளர் ஒருவரும் காயமடைந்தனர்.

 

'நிர்மூலம்’ சீதாராமனை தமிழக முதல்வராக்க மயிலாப்பூரில் ரகசிய யாகங்கள்.... ‘முரசொலி’ திடுக் தகவல்

You'r reading பெங்களூருவில் சாகச ஒத்திகையின் போது நடுவானில் மோதிக் கொண்ட போர் விமானங்கள் - ராணுவ அமைச்சர் கண் எதிரே நிகழ்ந்த பயங்கரம்! Originally posted on The Subeditor Tamil

More India News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை