பாகிஸ்தானுக்குள் தாக்குதல் நடத்திய போர் விமானிகளுக்கு ராகுல் காந்தி சல்யூட்

Rahul Gandhi salutes to IAF pilots

by Nagaraj, Feb 26, 2019, 11:37 AM IST

பாகிஸ்தான் எல்லைக்குள் ஊடுருவி துல்லிய தாக்குதல் நடத்தி பத்திரமாக திரும்பியுள்ள இந்திய விமானப்படையின் பைலட்டுகளுக்கு காங் கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, 'சல்யூட்'என்று வாழ்த்து தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தான் எல்லைக்குள் இன்று அதிகாலை இந்திய விமானப் படையின் போர் விமானங்கள் தாக்குதல் நடத்தி தீவிரவாதிகளின் முகாம்களை அழித்தது. இந்த தாக்குதல் குறித்த தகவல் 6 மணி நேரத்திற்குப் பின் தான் அதிகாரப்பூர்வமாக தெரிய வந்தது.

தகவல் வெளியானவுடன் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி டிவிட்டரில், தாக்குதல் நடத்திய இந்திய விமானப்படை பைலட்டுகளுக்கு சல்யூட் என்று வாழ்த்து தெரிவித்துள்ளார்.

 

You'r reading பாகிஸ்தானுக்குள் தாக்குதல் நடத்திய போர் விமானிகளுக்கு ராகுல் காந்தி சல்யூட் Originally posted on The Subeditor Tamil

More India News

READ MORE ABOUT :

அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை