காஷ்மீரின் குப்வாராவில் 3 நாட்களாக தொடரும் துப்பாக்கிச் சண்டை - 2 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை!

Kupwara encounter 2 terrorists killed

Mar 3, 2019, 13:34 PM IST

காஷ்மீரின் குப்வாரா மாவட்டத்தில் பதுங்கியுள்ள தீவிரவாதிகளுடன் 3-வது நாளாக துப்பாக்கிச் சண்டை நீடிக்கிறது. இன்று இரு தீவிரவாதிகள் கொல்லப்பட்ட நிலையில் இந்தியப் படை தரப்பில் 5 பேரும், கிராமவாசி ஒருவரும் பலியாகியுள்ளனர்.

காஷ்மீரின் குப்வாராவில் உள்ள கிராமம் ஒன்றில் தீவிரவாதிகள் சிலர் பதுங்கியுள்ள நிலையில், கடந்த வெள்ளிக்கிழமை இந்தியப் படையினர் அவர்களுடன் துப்பாக்கிச் சண்டை நடத்தி வருகின்றனர். கிராம மக்களை கேடயமாக பயன்படுத்தி தீவிரவாதிகள் வேறு வேறு இடங்களுக்கு தப்பித்து வருவதால் தொடர்ந்து 3 நாட்களாக சண்டை நீடித்து வருகிறது.

இந்நிலையில் இன்று காலை 2 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். இந்த சண்டையில் 3 சிஆர்பிஎப் படை வீரர்களும், 2 போலீசாரும், கிராமவாசி ஒருவரும் தீவிரவாதிகளின் குண்டுகளுக்கு இரையான நிலையில், துப்பாக்கிச் சண்டை தொடர்கிறது .

You'r reading காஷ்மீரின் குப்வாராவில் 3 நாட்களாக தொடரும் துப்பாக்கிச் சண்டை - 2 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை! Originally posted on The Subeditor Tamil

More India News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை