தீவிரவாத தாக்குதல் அபாயம்?- நாடு முழுவதும் விமான நிலையங்களுக்கு ரெட் அலர்ட்!
India Pakistan tension, all airports in India are high alert
விமான நிலையங்களை குறிவைத்து தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தக் கூடும் என்ற ஊளவுத்துறை எச்சரிக்கையை அடுத்து நாடு முழுவதும் விமான நிலையங்களுக்கு ரெட் அலர்ட் விடப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது
பாக்.ஆதரவு தீவிரவாதிகளை குறிவைத்து இந்தியா நடத்திய தாக்குதலுக்கு பதிலடியாக தீவிரவாதிகள் இந்தியாவில் சதி வேலைகளில் ஈடுபட திட்டமிட்டுள்ளதாக உளவுத் துறைக்கு தகவல் கிடைத்துள்ளது.
குறிப்பாக விமான நிலையங்களை குறிவைத்து தாக்குதல் நடத்தப்படலாம் என்ற எச்சரிக்கையைத் தொடர்ந்து நாடு முழுவதும் உள்ள விமான நிலையங்களுக்கு ரெட் அலர்ட் விடப்பட்டு உஷார் படுத்தப்பட்டுள்ளது. இதையடுத்து விமான நிலையங்களில் கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மோப்ப நாய்கள் உதவியுடன் பயணிகளின் உடைமைகள் தீவிர சோதனை நடத்தப்படுகிறது.
சென்னை விமான நிலையத்தில் 7 அடுக்கு பாதுகாப்பு போடப் பட்டுள்ளது. பயணிகள் தீவிர சோதனைக்குப் பின்னரே அனுமதிக்கப்படுகின்றனர். பார்வையாளர்களுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது
You'r reading தீவிரவாத தாக்குதல் அபாயம்?- நாடு முழுவதும் விமான நிலையங்களுக்கு ரெட் அலர்ட்! Originally posted on The Subeditor Tamil
More India News