திருப்பதி கோவிலில் ரணில் விக்கிரமசிங்கே வழிபாடு
Ranil Wickremesinghe Offers Prayers At Lord Balaji Temple
இலங்கை பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வழிபாடு நடத்தினார்.
கொழும்பில் இருந்து சனிக்கிழமை மாலை மனைவியுடன் திருப்பதி வந்தார் ரணில் விக்கிரமசிங்கே. ஆந்திரா அமைச்சர் அமர்நாத் ரெட்டி மற்றும் திருப்பதி தேவஸ்தானம் சார்பில் ரணிலுக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது.
திருப்பதியில் இரவு தங்கிய ரணில் காலையில் ஏழுமலையானை தரிசித்து வழிபட்டார். பின்னர் துலாபாரம் சேவையில் எடைக்கு எடை காணிக்கை செலுத்தினார்.
திருமலையில் இருந்து ரேணிகுண்டா சென்று அங்கிருந்து விமானம் மூலம் சென்னை வழியாக கொழும்பு சென்றடைந்தனர்.
You'r reading திருப்பதி கோவிலில் ரணில் விக்கிரமசிங்கே வழிபாடு Originally posted on The Subeditor Tamil
More India News
READ MORE ABOUT :