இந்தியாவில் பள்ளிகள் அதிகம்....ஆனால் கல்வியின் தரம் அடிமட்டம் -சர்வே ரிப்போர்ட்

சீனாவை விட மூன்று மடங்கு இந்தியாவில் பள்ளிகளின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. ஆனால், நம்நாட்டின் கல்வியின் தரம் பின்தங்கியுள்ளதாக சர்வேயில் தெரிய வந்துள்ளது.

இந்தியாவின் கல்வித் தரம் குறித்து நிதி ஆயோக் ஆய்வு செய்தது, தற்போது அறிக்கையை வெளியிட்டுள்ளது. இந்தியாவில் பள்ளிகளின் எண்ணிக்கை அதிகரித்திருந்தாலும், கல்வியின் தரம் அதிகரிக்கவில்லை என்ற திடுக்கிடும் தகவல் ஆய்வில் தெரியவந்துள்ளது.

அனைவருக்கும் இலவசக் கட்டாயக் கல்வி சட்டத்தின் படி, 6 முதல் 14 வயது  குழந்தைகளுக்குக்  கல்வி கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது. இந்த வயதுக்கு உட்பட்ட 71 சதவீத  மாணவர்கள் அரசுப் பள்ளிகளில் படிக்கிறார்கள். அரசுப் பள்ளிக்கு  எதிராகத்  தனியார்  பள்ளிகளின் விகிதம் 7:5 ஆக உள்ளது. இதில், தொடக்க நிலை மற்றும் இரண்டாம் நிலை மட்டத்தில் உள்ள தனியார் பள்ளிகளே அதிகம்.

சீனாவில் 5 லட்சம் பள்ளிகள் இருக்கின்றன. ஆனால், இந்தியாவில் 15 லட்சம் பள்ளிகள் உள்ளன. இது 3 மடங்கு அதிகமாகும். இருப்பினும், கல்வியின் தரத்தில் மிகவும் மோசமாக உள்ளதாகவும், பள்ளிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப ஆசிரியர் பற்றாக்குறை, தகுதியற்ற முறையில் இயங்கும் பள்ளிகள் தான் காரணம்  எனக்  குறிப்பிடப்பட்டுள்ளது.

மத்தியபிரதேசம், ஒடிசா, ராஜஸ்தான், ஜார்க்கண்ட் ஆகிய மாநிலங்களின் கிராமப்பகுதிகளில் செயல்படும் பள்ளிகளில் 100 மாணவர்களுக்கு 1 ஆசிரியர் எனும் நிலை உள்ளது. அதேபோல், ராஜஸ்தான் , கர்நாடகா, ஜம்மு காஷ்மீர், உத்தரகாண்ட் ஆகிய மாநிலங்களில் 70 ஆரம்ப பள்ளிகளில் 50-க்கும் குறைவான மாணவர்களே படிக்கின்றனர்.

இதில், வருந்தத்தக்க விஷயம் என்னவென்றால், 5-ம் வகுப்பு படிக்கும் மாணவர்களில்   பாதிப் பேருக்கு 2-ம் வகுப்பு பாடபுத்தகத்தை படிக்க முடியவில்லை என்பதுதான். இதற்கு, முக்கிய காரணம் ஆசிரியர் பற்றாக்குறை எனக் கூறப்பட்டுள்ளது.

இந்தியாவில் பள்ளிகளின் எண்ணிக்கை அதிகரித்தாலும், ஆரம்ப நிலையில் கல்வியின் தரம் உயராமல் இருப்பது, மாணவர்களின் எதிர்காலத்தைக் கேள்விக் குறியாக்கி உள்ளது.

எங்களுடைய தமிழ் செய்திகளை உங்கள் மெயில் இன்பாக்சில் பெறுவதற்கு இங்கே உங்கள் மெயில் ஐடியை பதிவு செய்யவும் : Tamil news RSS

OR You can install Google News on Android or iOS, and then access our edition https://news.google.com/publications/CAAqBwgKMP_rkQsw3YOnAw?oc=3&ceid=IN:ta through the app.

Advertisement
மேலும் செய்திகள்
india-accounts-for-46-of-world-s-new-covid-19-cases-quarter-of-deaths
ஒட்டுமொத்த கொரோனா பாதிப்பில் 46% இந்தியாவில் பதிவாகியுள்ளது – உலக சுகாதார நிறுவனம்
covid-deaths-due-to-oxygen-shortage-no-less-than-genocide-says-allahabad-high-court
ஆக்ஸிஷஜன் இல்லாமல் இறப்பது இனப்படுகொலைக்கு ஒப்பானது – நீதிமன்றம் காட்டம்!
rahul-gandhi-slams-modi
ஆக்சிஜன் இல்லாமல் இறக்கிறார்கள் உங்களுக்கு வீடு கேக்குதா? – மோடியை சாடிய ராகுல்!
woman-in-an-auto-rickshaw-carried-the-body-of-her-corona-dead-husband-in-uttar-pradesh
ஆம்புலன்சுக்கு அதிக பணம் கேட்டதால்.. கணவரின் சடலத்தை ஆட்டோவில் எடுத்துச் சென்ற மனைவி
corona-infection-confirmed-8-lions-hyderabad-zoo
இந்தியாவில் முதன்முறையாக 8 சிங்கங்களுக்கு கொரோனா!
pinarayi-son-in-law-will-get-a-chance-in-kerala-ministry
மருமகனுக்கு அமைச்சர் பதவி கொடுக்கும் பினராயி விஜயன்?!
bihar-extends-lockdown-until-may-2021
பீகாரில் மே 15 வரை ஊரடங்கு நீட்டிப்பு.. மந்திரி நிதிஷ்குமார் அறிவிப்பு..
rahul-gandhi-says-to-put-lockdown-all-over-india
கொரோனாவை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அவசியம்.. ராகுல் காந்தி அறிவிக்கை..
dont-do-ct-scan-says-by-aiims-director
லேசான அறிகுறி இருந்தால் சி.டி ஸ்கேன் செய்ய தேவையில்லை.. எய்ம்ஸ் இயக்குனர் தகவல்..
sonu-sood-gets-critically-ill-covid-patient-airlifted
விமான ஆம்புலன்ஸ் அனுப்பி கொரோனா நோயாளியின் உயிரை மீட்ட சோனுசூட்!
Tag Clouds