மத்திய பிரதேசத்தில் ரயில் நிலைய கேண்டீனில் பயங்கர தீ விபத்து
A fire broke out in the madya pradesh gwalior railway station canteen
மத்திய பிரதேச மாநில ரயில் நிலைய கேன்டீனில் இன்று அதிகாலையில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.
மத்திய பிரதேச மாநிலத்தில் பிரபலமான ரயில் நிலையங்களில் ஒன்று குவாலியர் ரயில் நிலையம். தினமும் ஆயிரக்கணக்கான பயணிகள் இந்த ரயில் நிலையத்தை பயன்படுத்தி வருகின்றனர். குவாலியர் ரயில் நிலையத்தில் இன்று அதிகாலை கேன்டீனில் திடீரென தீப்பிடித்தது.
கேண்டீனில் ஏற்பட்ட தீ அருகிலிருந்த உணவகம், கடைகள் மற்றும் காத்திருப்பு அறைக்கும் வேகமாக பரவியது. தீ விபத்து குறித்து தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் கொடுக்கப்பட்டது. இதனையடுத்து தீயணைப்பு வாகனங்களுடன் விரைந்து வந்த வீரர்கள் சில மணி நேர போராட்டத்துக்கு பின் தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
தீ விபத்து நடந்து நேரம் அதிகாலை என்பதால் பயணிகள் கூட்டம் இல்லை. இதனால் இந்த தீ விபத்தில் உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை என ரயில்வே அதிகாரிகள் என தெரிவித்தனர். மேலும் தீ விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
சும்மா நின்ற ஏர்இந்தியா விமானம் திடீரென தீ்ப்பிடித்தது: மீண்டும் சர்ச்சையில் சிக்கிய போயிங் விமானம்
You'r reading மத்திய பிரதேசத்தில் ரயில் நிலைய கேண்டீனில் பயங்கர தீ விபத்து Originally posted on The Subeditor Tamil
More India News