கையில் ரூ.38,750 மட்டுமே உள்ளது..கார் இல்லை! –மோடி தகவல்

கையிருப்பு தொகை ரூ.38,750 மட்டுமே உள்ளதாக வேட்பு மனு பிரமாண பத்திரத்தில் குறிப்பிட்டு இருக்கிறார் பிரதமர் நரேந்திர மோடி.

ஏழு கட்டங்களாக நடக்கும் மக்களவைத் தேர்தலின், மூன்று கட்ட தேர்தல்கள் நடந்து முடிந்துள்ள நிலையில், கடைசிக் கட்ட தேர்தல் வரும் மே 19ம் தேதி நடக்கவுள்ளது. அதன்படி, உத்தர பிரதேசத்தில் நடைபெறும் கடைசிக் கட்ட தேர்தலில்,  பிரதமர் மோடி வாரணாசி தொகுதியில் போட்டியிடுகிறார். இரண்டாவது முறையாக வாரணாசியில் போட்டியிடுகிறார் மோடி. இதற்காக, நேற்று வாரணாசியில் பாஜக சார்பில் பிரமாண்ட பேரணி நடத்தப்பட்டது. இதில், பாஜக முக்கிய தலைவர்கள், மத்திய அமைச்சர்கள், தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் உட்பட பலரும் கலந்துகொண்டனர். இதனையடுத்து, வாரணாசியில் நடந்த பொதுக்கூட்டத்தில் பங்கேற்றுப் பேசிய மோடி, பின் கால பைரவர் கோயில் வழிபாடு செய்தார். அதன் பிறகு, இன்று காலை 11.30 மணியளவில் தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார் பிரதமர் மோடி.

பிரதமர் மோடி தாக்கல் செய்த வேட்பு மனு பிரமாண பத்திரத்தில், கையிருப்பு தொகை ரூ.38,750  மட்டுமே உள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். மேலும், சொந்தமாக கார், இரு சக்கர வாகனம் என சொந்தமாக எதுவும் கிடையாது என்று குறிப்பிட்டுள்ளார். ரூ.1.41 கோடி மதிப்பில் அசையும் சொத்துகள், ரூ.1.10 கோடி அசையா சொத்துக்கள், வங்கி இருப்பு ரூ.4,143, எஸ்.பி.ஐ வங்கியில் நிரந்தர வைப்புத்தொகை ரூ.127 கோடி, ரூ.1,13,800 மதிப்பில் 4 கிராம் தங்க மோதிரம் இருப்பதாகப் பிரமாண பத்திரத்தில் தெரிவித்து இருக்கிறார்.

வேட்பு மனு பிரமாண பத்திரத்தில் மோடி குறிப்பிட்டுள்ள தகவல்களை தற்போது, சமூக ஊடகங்களில் வெளியிட்டு விவாதிக்கத் தொடங்கியுள்ளனர் நெட்டிசங்கள்.

வாரணாசியில் பிரதமர் மோடி வேட்பு மனுத்தாக்கல் - கூட்டணி கட்சித் தலைவர்கள் பங்கேற்பு

எங்களுடைய தமிழ் செய்திகளை உங்கள் மெயில் இன்பாக்சில் பெறுவதற்கு இங்கே உங்கள் மெயில் ஐடியை பதிவு செய்யவும் : Tamil news RSS

OR You can install Google News on Android or iOS, and then access our edition https://news.google.com/publications/CAAqBwgKMP_rkQsw3YOnAw?oc=3&ceid=IN:ta through the app.

Advertisement
மேலும் செய்திகள்
india-accounts-for-46-of-world-s-new-covid-19-cases-quarter-of-deaths
ஒட்டுமொத்த கொரோனா பாதிப்பில் 46% இந்தியாவில் பதிவாகியுள்ளது – உலக சுகாதார நிறுவனம்
covid-deaths-due-to-oxygen-shortage-no-less-than-genocide-says-allahabad-high-court
ஆக்ஸிஷஜன் இல்லாமல் இறப்பது இனப்படுகொலைக்கு ஒப்பானது – நீதிமன்றம் காட்டம்!
rahul-gandhi-slams-modi
ஆக்சிஜன் இல்லாமல் இறக்கிறார்கள் உங்களுக்கு வீடு கேக்குதா? – மோடியை சாடிய ராகுல்!
woman-in-an-auto-rickshaw-carried-the-body-of-her-corona-dead-husband-in-uttar-pradesh
ஆம்புலன்சுக்கு அதிக பணம் கேட்டதால்.. கணவரின் சடலத்தை ஆட்டோவில் எடுத்துச் சென்ற மனைவி
corona-infection-confirmed-8-lions-hyderabad-zoo
இந்தியாவில் முதன்முறையாக 8 சிங்கங்களுக்கு கொரோனா!
pinarayi-son-in-law-will-get-a-chance-in-kerala-ministry
மருமகனுக்கு அமைச்சர் பதவி கொடுக்கும் பினராயி விஜயன்?!
bihar-extends-lockdown-until-may-2021
பீகாரில் மே 15 வரை ஊரடங்கு நீட்டிப்பு.. மந்திரி நிதிஷ்குமார் அறிவிப்பு..
rahul-gandhi-says-to-put-lockdown-all-over-india
கொரோனாவை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அவசியம்.. ராகுல் காந்தி அறிவிக்கை..
dont-do-ct-scan-says-by-aiims-director
லேசான அறிகுறி இருந்தால் சி.டி ஸ்கேன் செய்ய தேவையில்லை.. எய்ம்ஸ் இயக்குனர் தகவல்..
sonu-sood-gets-critically-ill-covid-patient-airlifted
விமான ஆம்புலன்ஸ் அனுப்பி கொரோனா நோயாளியின் உயிரை மீட்ட சோனுசூட்!
Tag Clouds