மே 23க்குப் பிறகுதான் அடுத்தகட்ட நடவடிக்கை! மாயாவதி, அகிலேஷ் அறிவிப்பு!

தேர்தல் முடிவுகள் வரும் வரை காங்கிரஸ் பக்கம் சாயாமல் காத்திருக்க மாயாவதியும், அகிலேஷும் முடிவு செய்திருக்கிறார்கள்.

நாடாளுமன்றத் தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகளில் பா.ஜ.க. அணி 300 தொகுதிகளை கைப்பற்றி, மோடி தலைமையில் மீண்டும் ஆட்சி அமைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இது நாட்டில் உள்ள அனைத்து எதிர்க்கட்சித் தலைவர்களையும் அதிர்ச்சியடைய வைத்திருக்கிறது. காரணம், பொதுவாகவே மோடி எதிர்ப்பு அலை வீசுவதாகவும், குறிப்பாக தென்மாநிலங்களில் அது வெளிப்படையாக தெரிகிறது என்றும் அவர்கள் நினைத்திருந்தார்கள். மேலும், பா.ஜ.க. 200க்கும் மேற்பட்ட இடங்களை பிடித்தால் கூட அதை ஆட்சியமைக்க விடக் கூடாது என்பதில் உறுதியாக இருந்தார்கள். அதனால், தெலுங்கு தேசம் தலைவர் சந்திரபாபு நாயுடு, காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி, சோனியா காந்தி ஆகியோரை சந்தித்து விட்டு ஒவ்வொரு கட்சித்தலைவர்களையும் சந்தித்தார்.

உத்தரப்பிரதேசத்தில் அதிக இடங்களை கைப்பற்றக் கூடிய பகுஜன் சமாஜ்-சமாஜ்வாடி கூட்டணி தலைவர்களான மாயாவதி, அகிலேஷ் ஆகியோரையும் சந்தித்து பேசினார். இதன்பின், மாயாவதி டெல்லி வந்து மே 20ம் தேதி சோனியாவை சந்திப்பதாக இருந்தது. ஆனால், அதற்கு முன்பாக பா.ஜ.க. பெரும்பான்மை பெறும் என்று கருத்து கணிப்புகள் வரவே, மாயாவதி தனது டெல்லி புரோக்ராமை கேன்சல் செய்து விட்டார்.

இந்த நிலையில், நேற்று(மே20) மாயாவதியை லக்னோவில் மால் அவின்யூவில் உள்ள அவரது வீட்டில் அகிலேஷ் சந்தித்து பேசினார். சுமார் ஒரு மணி நேரம் இருவரும் ஆலோசித்தனர். அவசரப்பட்டு காங்கிரஸ் பக்கம் சாய்ந்தால், அது மீண்டும் பா.ஜ.க. ஆட்சி அமையும்பட்சத்தில் தொல்லையாக இருக்கும் என்று இருவரும் ஆலோசித்தனர். பா.ஜ.க. அறுதி பெரும்பான்மை கிடைக்காமல் தனிப்பெரும் கட்சியாக வந்தால், அதற்கு வெளியில் இருந்து ஆதரவு தரலாமா, கூட்டணி அரசு அமைப்பதா அல்லது தொடர்ந்து எதிர்க்கட்சியாக இருப்பதா என்பது குறித்தெல்லாம் அவர்கள் ஆலோசித்தனர். கடைசியில், மே 23ம் தேதி வரை எந்த சைடும் எடுக்காமல் மவுனம் காக்க முடிவெடுத்தனர்.

இதன்பின், இந்த சந்திப்பு குறித்த படத்தை ட்விட் செய்துள்ள அகிலேஷ், ‘‘அடுத்த கட்டத்திற்கு தயாராகி வருகிறோம்’’ என்று மட்டும் குறிப்பிட்டிருக்கிறார். மேலும், கருத்து கணிப்பில் உ.பி.யில் மொத்தம் உள்ள 80 இடங்களில் பா.ஜ.க. அணி 49 வரை கைப்பற்றும் என்றும் பகுஜன் சமாஜ், சமாஜ்வாடி கூட்டணி 29 இடங்களையும், காங்கிரஸ் 2 இடங்களையும் மட்டுமே கைப்பற்றும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், இதை மறுத்துள்ள அகிலேஷ், தங்கள் அணி நிச்சயம் 56 இடங்களை பிடிக்கும் என்றும் கூறியிருக்கிறார்.

மு.க.ஸ்டாலினை சந்திக்கும் தெலுங்கானா முதல்வர்.! பிடி கொடுக்குமா திமுக?

எங்களுடைய தமிழ் செய்திகளை உங்கள் மெயில் இன்பாக்சில் பெறுவதற்கு இங்கே உங்கள் மெயில் ஐடியை பதிவு செய்யவும் : Tamil news RSS

OR You can install Google News on Android or iOS, and then access our edition https://news.google.com/publications/CAAqBwgKMP_rkQsw3YOnAw?oc=3&ceid=IN:ta through the app.

Advertisement
மேலும் செய்திகள்
india-accounts-for-46-of-world-s-new-covid-19-cases-quarter-of-deaths
ஒட்டுமொத்த கொரோனா பாதிப்பில் 46% இந்தியாவில் பதிவாகியுள்ளது – உலக சுகாதார நிறுவனம்
covid-deaths-due-to-oxygen-shortage-no-less-than-genocide-says-allahabad-high-court
ஆக்ஸிஷஜன் இல்லாமல் இறப்பது இனப்படுகொலைக்கு ஒப்பானது – நீதிமன்றம் காட்டம்!
rahul-gandhi-slams-modi
ஆக்சிஜன் இல்லாமல் இறக்கிறார்கள் உங்களுக்கு வீடு கேக்குதா? – மோடியை சாடிய ராகுல்!
woman-in-an-auto-rickshaw-carried-the-body-of-her-corona-dead-husband-in-uttar-pradesh
ஆம்புலன்சுக்கு அதிக பணம் கேட்டதால்.. கணவரின் சடலத்தை ஆட்டோவில் எடுத்துச் சென்ற மனைவி
corona-infection-confirmed-8-lions-hyderabad-zoo
இந்தியாவில் முதன்முறையாக 8 சிங்கங்களுக்கு கொரோனா!
pinarayi-son-in-law-will-get-a-chance-in-kerala-ministry
மருமகனுக்கு அமைச்சர் பதவி கொடுக்கும் பினராயி விஜயன்?!
bihar-extends-lockdown-until-may-2021
பீகாரில் மே 15 வரை ஊரடங்கு நீட்டிப்பு.. மந்திரி நிதிஷ்குமார் அறிவிப்பு..
rahul-gandhi-says-to-put-lockdown-all-over-india
கொரோனாவை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அவசியம்.. ராகுல் காந்தி அறிவிக்கை..
dont-do-ct-scan-says-by-aiims-director
லேசான அறிகுறி இருந்தால் சி.டி ஸ்கேன் செய்ய தேவையில்லை.. எய்ம்ஸ் இயக்குனர் தகவல்..
sonu-sood-gets-critically-ill-covid-patient-airlifted
விமான ஆம்புலன்ஸ் அனுப்பி கொரோனா நோயாளியின் உயிரை மீட்ட சோனுசூட்!
Tag Clouds