விபத்தில் காயம்பட்டோருக்கு உடனடி உதவி செய்தால் ரூ 5000 பரிசு புதுச்சேரி அரசு அறிவிப்பு

விபத்துகளில் சிக்கி காயம்பட்டோரை உடனடியாக மருத்துவமனையில் சேர்க்க உதவி செய்வோருக்கு ரூ.5 ஆயிரம் சன்மானமாக வழங்கப்படும் என புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி அறிவித்துள்ளார்.

நாட்டில் சாலை வசதி அதிகரித்து, வாகனப் போக்குவரத்தும் பன்மடங்கு பெருகி விட்டது. அதற்கேற்றாற்போல் சாலை விபத்துகளும் அதிகரிக்கவே செய்து விட்டது. சாலை விபத்துகளில் சிக்கி காயம்படுவோர் உடனடி மருத்துவ உதவி கிடைக்காமல் மரணத்தை தழுவும் அவலமும் நிகழ்கிறது. விபத்தில் எப்படிப் பட்ட காயம் பட்டாலும் கோல்டன் அவர் எனப்படும் அடுத்த ஒரு மணி நேரத்திற்குள் சிகிச்சை கிடைத்து விட்டால் காப்பாற்றி விடலாம் என மருத்துவர்கள் கூறுகின்றனர்.

ஆனால் சாலையில் அடிபட்டுக் கிடப்போரை காப்பாற்ற சிலருக்கு மனம் இருந்தாலும், அதைத் தொடர்ந்து வழக்கு, சாட்சி விசாரணை என்ற வம்பு, தும்புகளை சிலர் கண்டும் காணாமலே போய் விடுவது வாடிக்கையாக உள்ளது. இதனாலேயே பலர் உயிர் பிழைக்க வாய்ப்பிருந்தும் உடனடி உதவி கிடைக்காமல் மாண்டு போவது சகஜமாக உள்ளது.

இதனால் விபத்துகளில் அடிபட்டுக் கிடப்போரை காப்பாற்ற, பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தவும், ஊக்கப்படுத்தவும் புதுச்சேரி அரசு, பரிசு வழங்கும் புதிய திட்டத்தை அறிவித்துள்ளது.

இன்று புதுச்சேரி பட்டப் பேரவையில் முதல்வர் நாராயணசாமி பட்ஜெட் தாக்கல் செய்த போது இந்த திட்டத்தை அறிவித்துள்ளார். அதன்படி புதுச்சேரி மாநில எல்லையில் விபத்தில் சிக்கியவர்களை உடனே மருத்துவமனையில் சேர்ப்பவர்களுக்கு ரூ.5 ஆயிரம் சன்மானமாக வழங்கப்படும் என்று முதல்வர் நாராயணசாமி அறிவித்தார். மேலும் மீனவர்களுக்கான மீன்பிடி தடைக்கால நிவாரணம் மற்றும் மழைக்கால நிவாரண உதவித் தொகையையும் அதிகரித்து பட்ஜெட்டில் முதல்வர் நாராயணசாமி அறிவித்துள்ளார்.

வாஜ்பாய் வசித்த பங்களாவில் குடியேறினார் அமித்ஷா

எங்களுடைய தமிழ் செய்திகளை உங்கள் மெயில் இன்பாக்சில் பெறுவதற்கு இங்கே உங்கள் மெயில் ஐடியை பதிவு செய்யவும் : Tamil news RSS

OR You can install Google News on Android or iOS, and then access our edition https://news.google.com/publications/CAAqBwgKMP_rkQsw3YOnAw?oc=3&ceid=IN:ta through the app.

Advertisement
மேலும் செய்திகள்
guarantee-signature-required-mudra-loan-increase-to-20-lakhs-who-will-get-it
கியாரண்டி கையெழுத்தே தேவையில்... முத்ரா லோன்... 20 லட்சமாக உயர்வு... யார் யாருக்கு கிடைக்கும்?
a-trainee-ias-officer-a-thousand-lies-fortunately-people-escaped
ஒரு பயிற்சி ஐ.ஏ.எஸ் அதிகாரியும்... ஆயிரம் பொய்களும்... நல்ல வேளை மக்கள் தப்பிச்சாங்க!
students-who-did-not-wear-double-braids-teachers-who-took-scissors-in-hand-officials-who-suspended-them-in-action
இரட்டை ஜடை போடாத மாணவிகள்... கத்தரியை கையில் எடுத்த ஆசிரியர்கள்... அதிரடியாக சஸ்பெண்ட் செய்த அதிகாரிகள்
bir-mohammed-caught-in-pocso-panchayat-held-in-jamaat
போக்சோவில் சிக்கிய பீர் முகமது... ஜமாத்தில் நடந்த கட்டி வைத்து நடந்த பஞ்சாயத்து
gitari-film-actress-who-entered-wayanad-landslide
வயநாடு நிலச்சரிவு... பரபரவென களத்தில் இறங்கிய கிடாரி பட நடிகை... நீளும் உதவிக்கரங்கள்...
can-nirmala-sitharaman-be-mocked-turbulent-weather-in-coimbatore
தயாநிதி மாறனின் பிராமணர்கள் மொழி.. நிர்மலா சீதாராமனை கேலி செய்யலாமா? கோவையில் கொந்தளித்த வானதி
india-accounts-for-46-of-world-s-new-covid-19-cases-quarter-of-deaths
ஒட்டுமொத்த கொரோனா பாதிப்பில் 46% இந்தியாவில் பதிவாகியுள்ளது – உலக சுகாதார நிறுவனம்
covid-deaths-due-to-oxygen-shortage-no-less-than-genocide-says-allahabad-high-court
ஆக்ஸிஷஜன் இல்லாமல் இறப்பது இனப்படுகொலைக்கு ஒப்பானது – நீதிமன்றம் காட்டம்!
rahul-gandhi-slams-modi
ஆக்சிஜன் இல்லாமல் இறக்கிறார்கள் உங்களுக்கு வீடு கேக்குதா? – மோடியை சாடிய ராகுல்!
woman-in-an-auto-rickshaw-carried-the-body-of-her-corona-dead-husband-in-uttar-pradesh
ஆம்புலன்சுக்கு அதிக பணம் கேட்டதால்.. கணவரின் சடலத்தை ஆட்டோவில் எடுத்துச் சென்ற மனைவி
Tag Clouds