ஐந்து பர்சன்ட் தெரியுமா? ப.சிதம்பரம் கமென்ட் : பதிலுக்கு சாமி அடித்த கிண்டல்

சி.பி.ஐ. காவலில் வைக்கப்பட்டுள்ள ப.சிதம்பரம் இன்று(செப்.3) நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட போது பத்திரிகையாளர்களிடம், ஐந்து சதவீதம் தெரியுமா? என்று பொருளாதார சரிவை சுட்டிக்காட்டி மத்திய அரசை கமென்ட் அடித்தார். அதற்கு சுப்பிரமணிய சாமி பதிலடி கொடுத்துள்ளார்.

ஐ.என்.எக்ஸ் மீடியாவுக்கு ரூ.305 கோடி அந்நிய முதலீடு வந்ததற்கு அனுமதி வழங்கியதில் முறைகேடு செய்ததாக முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் கைது செய்யப்பட்டார். சி.பி.ஐ. காவலில் வைக்கப்பட்டுள்ள அவர், இன்று டெல்லி சி.பி.ஐ. நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது அவரது காவலை ஒரு நாளைக்கு நீட்டித்த நீதிபதி, அவர் தாக்கல் செய்த இடைக்கால ஜாமீன் மனு விசாரணையை நாளை பிற்பகல் விசாரிப்பதாக கூறினார்.

இதற்கிடையே, சி.பி.ஐ. காவலை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் சிதம்பரம் தாக்கல் செய்த மனு இன்று விசாரணைக்கு வந்தது. நீதிபதி பானுமதி அதை விசாரித்து செப்டம்பர் 5ம் தேதிக்கு தள்ளி வைத்தார். மேலும், அது வரை சிதம்பரத்தை திகார் சிறைக்கு அனுப்பாமல், சி.பி.ஐ. காவலில் வைத்திருக்கவும் உத்தரவிட்டார்.

இந்நிலையில், சி.பி.ஐ. நீதிமன்றத்தில் ஆஜராகி விட்டு வெளியே வந்த சிதம்பரத்திடம், இத்தனை நாட்களாக சி.பி.ஐ. காவலில் இருப்பது பற்றி நிருபர்கள் கருத்து கேட்டனர். அவர்களின் கேள்விக்கு சிதம்பரம் சிரித்து கொண்டே ஐந்து பர்சன்ட் தெரியுமா? என்று கேட்டார். உடனே அவர் எதை கிண்டலடிக்கிறார் என்பதை புரிந்து கொண்ட புத்திசாலி நிருபர்கள், ஜி.டி.பி சரிவைத்தானே சொல்கிறீர்கள் என்று கேட்டனர். அதற்கு சிதம்பரம், ஐந்து விரல்களை காட்டி, ஐந்து பர்சன்ட், ஜி.டிபி... என்று கூறி விட்டு நகர்ந்தார்.

அதாவது, ஜி.டி.பி. என்பது உள்நாட்டு உற்பத்தி விகிதம். இது கடந்த 6 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு, ஏப்ரல்-ஜூன் காலாண்டில் வெறும் 5 சதவீதமாக சரிந்து விட்டது. இந்த அளவுக்கு பொருளாதார சரிவுக்கு மத்திய அரசுதான் காரணம், அதை மறைக்கவே என்னை கைது செய்திருக்கிறார்கள் என்ற ரீதியில் சிதம்பரம் பேசியிருக்கிறார்.

இதற்கு பின்னர், டைம்ஸ் நவ் டி.வி. நிருபர் இது பற்றி சுப்பிரமணிய சாமியிடம் கேள்வி கேட்டார். அதற்கு சாமி, சிதம்பரம் எந்த 5 பர்சன்ட்டை கூறுகிறார்? பொருளாதார சரிவு 5 சதவீதம் என்று கூறுகிறாரா? அல்லது அன்னிய முதலீடுகளி்ல் 5 சதவீத கமிஷன் வாங்கியதை கூறுகிறாரா? என்று கிண்டலடித்தார்.

எங்களுடைய தமிழ் செய்திகளை உங்கள் மெயில் இன்பாக்சில் பெறுவதற்கு இங்கே உங்கள் மெயில் ஐடியை பதிவு செய்யவும் : Tamil news RSS

OR You can install Google News on Android or iOS, and then access our edition https://news.google.com/publications/CAAqBwgKMP_rkQsw3YOnAw?oc=3&ceid=IN:ta through the app.

Advertisement
மேலும் செய்திகள்
guarantee-signature-required-mudra-loan-increase-to-20-lakhs-who-will-get-it
கியாரண்டி கையெழுத்தே தேவையில்... முத்ரா லோன்... 20 லட்சமாக உயர்வு... யார் யாருக்கு கிடைக்கும்?
a-trainee-ias-officer-a-thousand-lies-fortunately-people-escaped
ஒரு பயிற்சி ஐ.ஏ.எஸ் அதிகாரியும்... ஆயிரம் பொய்களும்... நல்ல வேளை மக்கள் தப்பிச்சாங்க!
students-who-did-not-wear-double-braids-teachers-who-took-scissors-in-hand-officials-who-suspended-them-in-action
இரட்டை ஜடை போடாத மாணவிகள்... கத்தரியை கையில் எடுத்த ஆசிரியர்கள்... அதிரடியாக சஸ்பெண்ட் செய்த அதிகாரிகள்
bir-mohammed-caught-in-pocso-panchayat-held-in-jamaat
போக்சோவில் சிக்கிய பீர் முகமது... ஜமாத்தில் நடந்த கட்டி வைத்து நடந்த பஞ்சாயத்து
gitari-film-actress-who-entered-wayanad-landslide
வயநாடு நிலச்சரிவு... பரபரவென களத்தில் இறங்கிய கிடாரி பட நடிகை... நீளும் உதவிக்கரங்கள்...
can-nirmala-sitharaman-be-mocked-turbulent-weather-in-coimbatore
தயாநிதி மாறனின் பிராமணர்கள் மொழி.. நிர்மலா சீதாராமனை கேலி செய்யலாமா? கோவையில் கொந்தளித்த வானதி
india-accounts-for-46-of-world-s-new-covid-19-cases-quarter-of-deaths
ஒட்டுமொத்த கொரோனா பாதிப்பில் 46% இந்தியாவில் பதிவாகியுள்ளது – உலக சுகாதார நிறுவனம்
covid-deaths-due-to-oxygen-shortage-no-less-than-genocide-says-allahabad-high-court
ஆக்ஸிஷஜன் இல்லாமல் இறப்பது இனப்படுகொலைக்கு ஒப்பானது – நீதிமன்றம் காட்டம்!
rahul-gandhi-slams-modi
ஆக்சிஜன் இல்லாமல் இறக்கிறார்கள் உங்களுக்கு வீடு கேக்குதா? – மோடியை சாடிய ராகுல்!
woman-in-an-auto-rickshaw-carried-the-body-of-her-corona-dead-husband-in-uttar-pradesh
ஆம்புலன்சுக்கு அதிக பணம் கேட்டதால்.. கணவரின் சடலத்தை ஆட்டோவில் எடுத்துச் சென்ற மனைவி
Tag Clouds