இந்தியா, சவுதி உறவு கொள்கை ரீதியானது.. பிரதமர் மோடி பேட்டி..

சவுதி அரேபியாவுக்கு 2 நாள் பயணமாக சென்றுள்ள பிரதமர் மோடி, இருநாடுகளுக்கு இடையேயான வர்த்தக உறவு, கொள்கைரீதியாக முன்னேறி வருவதாக குறிப்பிட்டுள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடி 2 நாள் பயணமாக சவுதி அரேபியாவுக்கு நேற்று(அக்.28) சென்றார். அங்கு அவருக்கு நேற்றிரவு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. சவுதி மன்னா் சல்மான்பின் அப்துல்லாசிஸ், இளவரசா் முகமதுபின் சல்மான் ஆகியோரை பிரதமர் மோடி சந்தித்து பேசுகிறாா். இந்தியாவில் எண்ணெய், எரிவாயு, எரிசக்தி, விமானப் போக்குவரத்து உள்ளிட்ட துறைகளில் சவுதி அரேபியா முதலீடு செய்யவிருக்கிறது. இதையொட்டி, இந்தியா-சவூதி அரேபியா இடையே பல்வேறு முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாக இருக்கின்றன.

மேலும், சவூதி அரேபியா தலைநகா் ரியாத்தில் எதிா்கால முதலீடுகள் தொடர்பான சர்வதேச பொருளாதார மாநாடு நாளை(அக்.30) முதல் 3 நாட்களுக்கு நடைபெறவுள்ளது. இதில், இந்தியாவில் அடுத்தது என்ன? என்று தலைப்பில் பிரதமா் நரேந்திர மோடி பேசுகிறார்.

இந்நிலையில், அரபு நியூஸ் என்ற அந்நாட்டு ஊடகத்திற்கு பிரதமர் மோடி பேட்டியளித்தார்.

அப்போது அவர் கூறுகையில், இந்தியா, ஈராக்கிற்கு அடுத்தபடியாக சவுதி அரேபியாவில் இருந்துதான் அதிக அளவு கச்சா எண்ணெய் வாங்குகிறது. இந்தியா 2018-19ல் மொத்தம் 207 மில்லியன் டன் கச்சா எண்ணெய் இறக்குமதி செய்திருக்கிறது. இதில், 40 மில்லியன் டன் சவுதியில் இருந்துதான் இறக்குமதி செய்யப்பட்டது. தற்போது இந்தியாவும், சவுதியும் வாங்குபவர்-விற்பவர் என்ற உறவை கடந்து, பாதுகாப்பு உள்பட பல்வேறு கொள்கைரீதியிலான உறவை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கின்றன. இந்தியாவில் எண்ணெய், எரிவாயு துறைகளில் சவுதி நிறுவனங்கள் முதலீடு செய்ய முன்வந்துள்ளனஎன்று தெரிவித்தார்.

எங்களுடைய தமிழ் செய்திகளை உங்கள் மெயில் இன்பாக்சில் பெறுவதற்கு இங்கே உங்கள் மெயில் ஐடியை பதிவு செய்யவும் : Tamil news RSS

OR You can install Google News on Android or iOS, and then access our edition https://news.google.com/publications/CAAqBwgKMP_rkQsw3YOnAw?oc=3&ceid=IN:ta through the app.

Advertisement
மேலும் செய்திகள்
india-accounts-for-46-of-world-s-new-covid-19-cases-quarter-of-deaths
ஒட்டுமொத்த கொரோனா பாதிப்பில் 46% இந்தியாவில் பதிவாகியுள்ளது – உலக சுகாதார நிறுவனம்
covid-deaths-due-to-oxygen-shortage-no-less-than-genocide-says-allahabad-high-court
ஆக்ஸிஷஜன் இல்லாமல் இறப்பது இனப்படுகொலைக்கு ஒப்பானது – நீதிமன்றம் காட்டம்!
rahul-gandhi-slams-modi
ஆக்சிஜன் இல்லாமல் இறக்கிறார்கள் உங்களுக்கு வீடு கேக்குதா? – மோடியை சாடிய ராகுல்!
woman-in-an-auto-rickshaw-carried-the-body-of-her-corona-dead-husband-in-uttar-pradesh
ஆம்புலன்சுக்கு அதிக பணம் கேட்டதால்.. கணவரின் சடலத்தை ஆட்டோவில் எடுத்துச் சென்ற மனைவி
corona-infection-confirmed-8-lions-hyderabad-zoo
இந்தியாவில் முதன்முறையாக 8 சிங்கங்களுக்கு கொரோனா!
pinarayi-son-in-law-will-get-a-chance-in-kerala-ministry
மருமகனுக்கு அமைச்சர் பதவி கொடுக்கும் பினராயி விஜயன்?!
bihar-extends-lockdown-until-may-2021
பீகாரில் மே 15 வரை ஊரடங்கு நீட்டிப்பு.. மந்திரி நிதிஷ்குமார் அறிவிப்பு..
rahul-gandhi-says-to-put-lockdown-all-over-india
கொரோனாவை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அவசியம்.. ராகுல் காந்தி அறிவிக்கை..
dont-do-ct-scan-says-by-aiims-director
லேசான அறிகுறி இருந்தால் சி.டி ஸ்கேன் செய்ய தேவையில்லை.. எய்ம்ஸ் இயக்குனர் தகவல்..
sonu-sood-gets-critically-ill-covid-patient-airlifted
விமான ஆம்புலன்ஸ் அனுப்பி கொரோனா நோயாளியின் உயிரை மீட்ட சோனுசூட்!
Tag Clouds