அரசு கவனமாக இருந்திருந்தால் சுஜித்தை உயிருடன் மீட்டிருக்கலாம்.. ஸ்டாலின் குற்றச்சாட்டு

ஆழ்துளை கிணற்றில் விழுந்த சிறுவன் சுஜித்தை மீட்கும் பணியில் தமிழக அரசு மெத்தனமாக செயல்பட்டது என்று திமுக தலைவர் ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார்.

திருச்சி மாவட்டம், நடுக்காட்டுப்பட்டியில் ஆழ்துளை கிணற்றில் விழுந்த சிறுவன் சுஜித் சடலமாக இன்று காலை மீட்கப்பட்டான். பாத்திமாபுதூரில் உள்ள கல்லறைத் தோட்டத்தில் சுஜித் உடல் அடக்கம் செய்யப்பட்டது. திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நேரில் வந்து அஞ்சலி செலுத்தினார். பின்னர் நடுக்காட்டுப்பட்டியில் சுஜித்தின் பெற்றோரை சந்தித்து ஆறுதல் கூறினார். அப்போது அவருடன் முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு, எம்.பி.க்கள் திருநாவுக்கரசர், திருச்சி சிவா, ஜோதிமணி ஆகியோரும் சென்றனர்.

சுஜித்தின் பெற்றோர் பிரிட்டோ ஆரோக்கியதாஸ், கலாமேரி ஆகியோரிடம் மு.க.ஸ்டாலின் ரூ.10 லட்சம் நிதியுதவி வழங்கினார். பின்னர், மு.க.ஸ்டாலின் நிருபர்களிடம் கூறியதாவது:


குழந்தை சுஜித் 36 அடி ஆழத்தில் இருந்த போதே, பேரிடர் மீட்பு படையை உடனடியாக அழைத்திருக்க வேண்டும். கவனமாக செயல்பட்டிருந்தால் குழந்தையை உயிருடன் மீட்டிருக்க முடியும். மீட்பு பணியில் அரசு மெத்தனமாக செயல்பட்டுள்ளது. இனிமேல் இதுபோன்று நடக்காமல் பார்க்க வேண்டும். குழந்தையை மீட்க ஏன் ராணுவ உதவியைப் பெறவில்லை? பேட்டி தருவதில் காட்டிய ஆர்வத்தை மீட்புப் பணியில் காட்டவில்லையோ என்ற ஆதங்கம் உள்ளது.

இவ்வாறு ஸ்டாலின் கூறினார்.

எங்களுடைய தமிழ் செய்திகளை உங்கள் மெயில் இன்பாக்சில் பெறுவதற்கு இங்கே உங்கள் மெயில் ஐடியை பதிவு செய்யவும் : Tamil news RSS

OR You can install Google News on Android or iOS, and then access our edition https://news.google.com/publications/CAAqBwgKMP_rkQsw3YOnAw?oc=3&ceid=IN:ta through the app.

Advertisement
மேலும் செய்திகள்
elder-brother-who-killed-younger-brother-in-family-dispute
தம்பியை கொன்ற அண்ணன் – அதிர்ச்சி காரணம்…!
trichy-university-assistant-professor-appointment-notice-canceled-high-court-order
திருச்சி பல்கலைக்கழக உதவி பேராசிரியர் பணி நியமன அறிவிப்பாணை ரத்து: உயர் நீதிமன்றம் உத்தரவு
high-court-urges-implementation-of-anti-land-grab-law-in-tamil-nadu-before-elections
தமிழகத்தில் தேர்தலுக்கு முன் நில அபகரிப்பு தடை சட்டம் நிறைவேற்ற உயர் நீதிமன்றம் வலியுறுத்தல்
tn-govt-job-latest-notification
திருச்சியில் அரசு வேலைவாய்ப்பு... தமிழில் எழுதப் படிக்க தெரிந்தால் போதும்..!
trichy-gov-job-notification
திருச்சியில் வேலைவாய்ப்பு...செப்டம்பர் 18 கடைசி தேதி...!
nia-arrested-2-persons-in-trichi-whom-had-links-with-al-qaeda
அல்கொய்தாவுடன் தொடர்பு.. திருச்சியில் 2 பேர் கைது.. என்.ஐ.ஏ. அதிரடி நடவடிக்கை
radhakrishnan-explained-child-sujith-death-situation
மீட்கப்பட்ட சுஜித் உடலை வெளியே காட்டாதது ஏன்? வருவாய் நிர்வாக ஆணையர் பதில்..
mk-stalin-charged-admk-government-on-the-lapses-in-child-rescue-operations
சுஜித்தை மீட்க முடியாதது ஏன்? அரசின் குறைபாடுகளை பட்டியலிடும் ஸ்டாலின்..
actor-raghava-lawrence-ready-to-adopt-child-for-sujeeth-mother
ஆழ்துளை கிணற்றில் விழுந்து இறந்த சுஜீத் ஞாபகார்த்தமாக  தத்து குழந்தை... தாய்க்கு, ராகாவா லாரன்ஸ் ஆறுதல்...
tamilfilm-industry-emotional-farewell-to-sujith
ஆழ்துளை கிணற்றில் விழுந்து இறந்த குழந்தைக்கு தமிழ் திரையுலகினர் அஞ்சலி.. வைரமுத்து, விமல், விவேக் கண்ணீர்...
Tag Clouds