அல்கொய்தாவுடன் தொடர்பு.. திருச்சியில் 2 பேர் கைது.. என்.ஐ.ஏ. அதிரடி நடவடிக்கை

திருச்சியில், அல்கொய்தா தீவிரவாத அமைப்புடன் சமூக வலைதளங்களில் தொடர்பு வைத்திருந்த 2 பேரை என்.ஐ.ஏ. அதிகாரிகள் கண்டுபிடித்து கைது செய்தனர். அவர்களின் வீட்டில் இன்று அதிகாலையில் நடத்தப்பட்ட சோதனையில் பல்வேறு ஆவணங்கள் கைப்பற்றப்பட்டது.

திருச்சி எடமலைப்பட்டிபுதூர் கே.ஆர்.எஸ். நகரில் வசித்து வரும் சர்புதீன் என்பவர் அவ்வப்போது அரபு நாடுகளுக்கு சென்று பணியாற்றி வந்தார். இவர் தீவிரவாத அமைப்பான அல்-கொய்தா அமைப்பின் முகநூல் கணக்கில் இணைந்து அல்கொய்தா அமைப்பினர் வெளியிடும் கருத்துக்களுக்கு பதில் அளிப்பதும், ஆவணங்களை டவுன்லோட் செய்வது மற்றும் லைக் செய்து வந்ததாக தெரிகிறது.

தீவிரவாத அமைப்புகளின் சமூக வலைதளங்கள், முகநூல், வாட்ஸ்அப் தகவல் பரிமாற்றங்களை கண்காணிப்பதற்காக தேசிய புலனாய்வு அமைப்பில்(என்.ஐ.ஏ) ஒரு தனிப்பிரிவு(எஸ்.ஐ.யு) இயங்கி வருகிறது. இந்த பிரிவைச் சேர்ந்த அதிகாரிகள், கடந்த ஒரு மாதமாக திருச்சி சர்புதீன் முகநூல் கணக்கை கண்காணித்து வந்திருக்கிறார்கள்.

இந்நிலையில், கோவையில் இருந்து தேசிய புலனாய்வு முகமை அமைப்பின் கேரள டிஎஸ்பி ஜார்ஜ் தலைமையில் 10க்கும் மேற்பட்ட போலீசார் மற்றும் திருச்சி மாநகர போலீசார் துணையுடன் இன்று அதிகாலை 5 மணிக்கு சர்புதீன் வீட்டிற்கு வந்தனர். அவர்கள், சர்புதீன் வீட்டில் சில மணி நேரம் தொடர் சோதனையில் ஈடுபட்டதுடன், குடும்ப உறுப்பினர்களிடம் விசாரணை நடத்தினர்.

இதில், சர்புதீனும் அவரது மைத்துனர் ஜாபரும் அல்கொய்தா முகநூலை பின்பற்றி வந்ததும், வாட்ஸ் அப் மூலம் சில தகவல் பரிமாற்றங்கள் செய்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து, வீட்டிலிருந்து செல்போன், பென் ட்ரைவ் மற்றும் பல்வேறு ஆவணங்களையும் என்ஐஏ அமைப்பினர் கைப்பற்றியதுடன், தீவிரவாத அமைப்புடன் தொடர்பு வைத்திருந்த இருவரையும் கைது செய்து அழைத்து சென்றனர். என்ஐஏ அமைப்பினரின் இந்த திடீர் சோதனையால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு காணப்பட்டது.

இதே போல், தஞ்சையிலும் ஒரு வீட்டில் திடீர் சோதனை நடத்தப்பட்டது. தஞ்சை கீழவாசலை சேர்ந்தவர் சேக் அலாவுதீன். இவர் வீட்டின் முன்பாக செருப்பு கடை வைத்துள்ளார். இவரது வீட்டில் டிஎஸ்பி விஜயகுமார் தலைமையில் என்ஐஏ அதிகாரிகள் 5 பேர் இன்று காலை சோதனை நடத்தினர். இவர் ஏற்கனவே சிமி தீவிரவாத அமைப்பில் இருந்ததாக கூறப்படுகிறது. தற்போது அவர் மீண்டும் தீவிரவாத அமைப்புகளுடன் தொடர்பு வைத்திருக்கிறாரா என்ற விசாரணை நடத்தப்பட்டது.

எங்களுடைய தமிழ் செய்திகளை உங்கள் மெயில் இன்பாக்சில் பெறுவதற்கு இங்கே உங்கள் மெயில் ஐடியை பதிவு செய்யவும் : Tamil news RSS

OR You can install Google News on Android or iOS, and then access our edition https://news.google.com/publications/CAAqBwgKMP_rkQsw3YOnAw?oc=3&ceid=IN:ta through the app.

Advertisement
மேலும் செய்திகள்
elder-brother-who-killed-younger-brother-in-family-dispute
தம்பியை கொன்ற அண்ணன் – அதிர்ச்சி காரணம்…!
trichy-university-assistant-professor-appointment-notice-canceled-high-court-order
திருச்சி பல்கலைக்கழக உதவி பேராசிரியர் பணி நியமன அறிவிப்பாணை ரத்து: உயர் நீதிமன்றம் உத்தரவு
high-court-urges-implementation-of-anti-land-grab-law-in-tamil-nadu-before-elections
தமிழகத்தில் தேர்தலுக்கு முன் நில அபகரிப்பு தடை சட்டம் நிறைவேற்ற உயர் நீதிமன்றம் வலியுறுத்தல்
tn-govt-job-latest-notification
திருச்சியில் அரசு வேலைவாய்ப்பு... தமிழில் எழுதப் படிக்க தெரிந்தால் போதும்..!
trichy-gov-job-notification
திருச்சியில் வேலைவாய்ப்பு...செப்டம்பர் 18 கடைசி தேதி...!
nia-arrested-2-persons-in-trichi-whom-had-links-with-al-qaeda
அல்கொய்தாவுடன் தொடர்பு.. திருச்சியில் 2 பேர் கைது.. என்.ஐ.ஏ. அதிரடி நடவடிக்கை
radhakrishnan-explained-child-sujith-death-situation
மீட்கப்பட்ட சுஜித் உடலை வெளியே காட்டாதது ஏன்? வருவாய் நிர்வாக ஆணையர் பதில்..
mk-stalin-charged-admk-government-on-the-lapses-in-child-rescue-operations
சுஜித்தை மீட்க முடியாதது ஏன்? அரசின் குறைபாடுகளை பட்டியலிடும் ஸ்டாலின்..
actor-raghava-lawrence-ready-to-adopt-child-for-sujeeth-mother
ஆழ்துளை கிணற்றில் விழுந்து இறந்த சுஜீத் ஞாபகார்த்தமாக  தத்து குழந்தை... தாய்க்கு, ராகாவா லாரன்ஸ் ஆறுதல்...
tamilfilm-industry-emotional-farewell-to-sujith
ஆழ்துளை கிணற்றில் விழுந்து இறந்த குழந்தைக்கு தமிழ் திரையுலகினர் அஞ்சலி.. வைரமுத்து, விமல், விவேக் கண்ணீர்...
Tag Clouds

READ MORE ABOUT :