திருச்சியில் அரசு வேலைவாய்ப்பு... தமிழில் எழுதப் படிக்க தெரிந்தால் போதும்..!

TN Govt Job Latest Notification

by Loganathan, Sep 19, 2020, 19:06 PM IST

திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் வேலைவாய்ப்பு !

திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின்
காலிப்பணியிடங்கள்:

சமையலர் – 135

துப்புரவாளர் (முழு நேரம்) – 13

துப்புரவாளர் (பகுதி நேரம்) – 80

வயது:18 வயது முதல் 35 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். மேலும் திருச்சி மாவட்டத்தில் குடியிருப்பவராக இருக்க வேண்டும்.

தகுதி : விண்ணப்பதாரர் தமிழில் எழுதப் படிக்க தெரிந்திருக்க வேண்டும். ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் இனத்தைச் சார்ந்தவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.

சம்பளம்:

சமையலர் – ரூ.15700-50000

துப்புரவாளர் (முழு நேரம்) – ரூ.15,700/

துப்புரவாளர் (பகுதி நேரம்) – ரூ.7,700/-

தேர்வு செயல் முறை: விண்ணப்பத்தார்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை: தகுதியான நபர்கள் திருச்சி மாவட்டம், திருச்சி மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலகத்தில் விண்ணப்பங்களை பெற்று நேரடியாகவோ, பதிவஞ்சல் மூலமாகவோ மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலகத்திற்கு19.10.2020-க்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

You'r reading திருச்சியில் அரசு வேலைவாய்ப்பு... தமிழில் எழுதப் படிக்க தெரிந்தால் போதும்..! Originally posted on The Subeditor Tamil

More Tiruchirappalli News

READ MORE ABOUT :

அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை