திருச்சியில் வேலைவாய்ப்பு...செப்டம்பர் 18 கடைசி தேதி...!

Trichy Gov Job Notification

by Loganathan, Sep 9, 2020, 14:47 PM IST

மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தில் சமையலர் பணியிடங்கள்.தமிழக அரசின் கீழுள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகம், திருச்சியில் சமையலருக்கான வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.

காலியிட விபரங்கள் :
ஆண் சமையலர் – 25; பெண் சமையலர் – 15

தகுதி : விண்ணப்பதாரர் தமிழில் எழுதப் படிக்கத் தெரிந்திருக்க வேண்டும்.
கூடுதல் தகுதி : சைவ மற்றும் அசைய உணவு வகைகள் தரமாகவும், சுவையாகவும் சமைக்கத் தெரிந்திருக்க வேண்டும்.

வயது: 1.07.2020 தேதியின்படி வயது வரம்பு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி, எஸ்.சி, எஸ்.டி விண்ணப்பதாரர் 18 முதல் 35 வயதிற்கு உட்பட்டும், இதர விண்ணப்பதாரர் 30 வயதிற்கு உட்பட்டும் இருக்க வேண்டும்.

ஊதியம் : ரூ.15,700 மாதம்

விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன் வழியாக https://tiruchirappalli.nic.in/ என்ற இணையதளம் மூலம் 18.09.2020 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

தேர்வு முறை : குறுகிய பட்டியல் மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

You'r reading திருச்சியில் வேலைவாய்ப்பு...செப்டம்பர் 18 கடைசி தேதி...! Originally posted on The Subeditor Tamil

More Special article News

READ MORE ABOUT :

அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை