சிவசேனாவை உடைக்கட்டும்.. மகாராஷ்டிரா தூங்காது.. உத்தவ் தாக்கரே ஆவேசம்

பாஜக ஆட்சியைக் காப்பாற்ற சிவசேனா எம்.எல்.ஏ.க்களை இழுத்தால், மகாராஷ்டிரா நிம்மதியாக தூங்க முடியாது என்று உத்தவ் தாக்கரே ஆவேசமாக கூறியுள்ளார்.

மகாராஷ்டிர அரசியலில் இன்று அதிகாலையில் திடீர் திருப்பம் ஏற்பட்டது. சரத்பவாரின் அண்ணன் ஆனந்தராவ் பவாரின் மகனும், என்.சி.பி. கட்சியின் சட்டசபைக் கட்சித் தலைவருமான அஜித்பவார், திடீரென பாஜக பக்கம் தாவினார். அவர் பாஜக அரசு அமைக்க ஆதரவு கடிதம் அளிக்க, பாஜகவை ஆட்சியமைக்குமாறு கோஷ்யாரி அழைத்தார். முதல்வராக தேவேந்திர பட்நாவிஸ் இன்று காலையில் அவசர, அவசரமாக பதவியேற்றார். அஜித்பவார் துணை முதல்வராக பதவியேற்றார்.

இதனால், இன்று(நவ.23) அதிகாலை முதல் அம்மாநில அரசியல் களம் மிகவும் பரபரப்பாக காணப்படுகிறது. சிவசேனா தலைமையில் என்.சி.பி, காங்கிரஸ் கூட்டணி ஆட்சி அமைக்கப்படும் என்றும் உத்தவ்தாக்கரே முதல்வராவார் என்றம் சரத்பவார் நேற்றுதான் வெளிப்படையாக தெரிவித்திருந்தாார்.

ஆனால், ராத்திரிக்குள் எல்லாமே மாறி விட்டது. அதிகாலையில் பாஜக ஆட்சி அமைந்தது எல்லோருக்குமே ஆச்சரியத்தை அளித்தது. இந்நிலையில், தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவாரும், சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரேவும் இன்று பகல் 12.30 மணிக்கு செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது சரத்பவார் கூறுகையில், அஜித்பவார் எடுத்த முடிவு அவரது தனிப்பட்ட முடிவு. அது எங்கள் கட்சியின் முடிவல்ல.

அவருடன் 10, 11 எம்.எல்.ஏ.க்கள்தான் சென்றிருக்கிறார்கள். அவர்களில் மூன்று பேர் இப்போது இங்கே வந்து விட்டார். அஜித்பவார் மீது கட்சியில் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார்.

தொடர்ந்து சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே கூறுகையில், பாஜகவினர் முதலில் வாக்கு இயந்திர விளையாட்டு விளையாடினர். (இப்பவாது ஒப்புக் கொண்டுள்ளாரே!) அவர்கள் இப்போது புதிய விளையாட்டு விளையாடுகிறார்கள்.
இனிமே மக்கள் ஓட்டு போட்டு தேர்தல் நடத்தவே வேண்டியதில்லை. அவர்களே எல்லாம் பார்த்து கொள்வார்கள்.

அடுத்து, அவர்கள் சிவசேனா எம்.எல்.ஏ.க்களை இழுக்க முயற்சி செய்வார்கள். சிவசேனாவை உடைக்கட்டும். அதற்கு பிறகு மகாராஷ்டிரா நிம்மதியாக தூங்க முடியாது.
சத்ரபதி சிவாஜி தனக்கு துரோகம் செய்தவர்களையும், முதுகில் குத்தியவர்களையும் என்ன செய்தார் என்பது எல்லோருக்கும் தெரியும் என்று ஆவேசமாகக் கூறினார்.

எங்களுடைய தமிழ் செய்திகளை உங்கள் மெயில் இன்பாக்சில் பெறுவதற்கு இங்கே உங்கள் மெயில் ஐடியை பதிவு செய்யவும் : Tamil news RSS

OR You can install Google News on Android or iOS, and then access our edition https://news.google.com/publications/CAAqBwgKMP_rkQsw3YOnAw?oc=3&ceid=IN:ta through the app.

Advertisement
மேலும் செய்திகள்
india-accounts-for-46-of-world-s-new-covid-19-cases-quarter-of-deaths
ஒட்டுமொத்த கொரோனா பாதிப்பில் 46% இந்தியாவில் பதிவாகியுள்ளது – உலக சுகாதார நிறுவனம்
covid-deaths-due-to-oxygen-shortage-no-less-than-genocide-says-allahabad-high-court
ஆக்ஸிஷஜன் இல்லாமல் இறப்பது இனப்படுகொலைக்கு ஒப்பானது – நீதிமன்றம் காட்டம்!
rahul-gandhi-slams-modi
ஆக்சிஜன் இல்லாமல் இறக்கிறார்கள் உங்களுக்கு வீடு கேக்குதா? – மோடியை சாடிய ராகுல்!
woman-in-an-auto-rickshaw-carried-the-body-of-her-corona-dead-husband-in-uttar-pradesh
ஆம்புலன்சுக்கு அதிக பணம் கேட்டதால்.. கணவரின் சடலத்தை ஆட்டோவில் எடுத்துச் சென்ற மனைவி
corona-infection-confirmed-8-lions-hyderabad-zoo
இந்தியாவில் முதன்முறையாக 8 சிங்கங்களுக்கு கொரோனா!
pinarayi-son-in-law-will-get-a-chance-in-kerala-ministry
மருமகனுக்கு அமைச்சர் பதவி கொடுக்கும் பினராயி விஜயன்?!
bihar-extends-lockdown-until-may-2021
பீகாரில் மே 15 வரை ஊரடங்கு நீட்டிப்பு.. மந்திரி நிதிஷ்குமார் அறிவிப்பு..
rahul-gandhi-says-to-put-lockdown-all-over-india
கொரோனாவை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அவசியம்.. ராகுல் காந்தி அறிவிக்கை..
dont-do-ct-scan-says-by-aiims-director
லேசான அறிகுறி இருந்தால் சி.டி ஸ்கேன் செய்ய தேவையில்லை.. எய்ம்ஸ் இயக்குனர் தகவல்..
sonu-sood-gets-critically-ill-covid-patient-airlifted
விமான ஆம்புலன்ஸ் அனுப்பி கொரோனா நோயாளியின் உயிரை மீட்ட சோனுசூட்!
Tag Clouds