ஐதராபாத். டிச. 6:
கடந்த நவம்பர் மாதம் 27-ம் தேதி பெண் கால்நடை மருத்துவர் திஷா (பெயர் மாற்றப்படுள்ளது) நான்கு பேரால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு பின்னர் எரித்து கொல்லப்பட்டார். இந்த சம்வம் நாடுமுழுவ தும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. மகளிர் அமைப்பினர். அரசியல் பிரமுகர்கள், மருத்துவர்கள். மருத்துவ மாணவ, மாணவிகள்.
![Hyderabad Lady Dr Rape case 2.jpg](https://images.thesubeditor.com/newsarea_images/2019/12/6122019blobid1575628078610.jpg)
![Hyderabad Lady Dr Rape case.jpg](https://images.thesubeditor.com/newsarea_images/2019/12/6122019blobid1575628112417.jpg)
இந்த சம்பவம் தொடர்பாக முகமது ஆரிப், சிவா,சென்ன கேசவலு, நவீன் ஆகிய நான்கு பேரகளை தெலங்கானா போலீசார் கைது செய்தனர், அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு வந்த நிலையில் 4 பேரையும் இன்று அதிகாலை சம்பவம் நடந்த இடத்துக்கு போலீஸார் அழைத்து வந்து குற்ற சம்பவம் எப்படி நடத்தப்பட்டது என்பது குறித்து விசாரணை நடத்தினர்.
அப்போது போலீஸாரை தாக்கிவிட்டு குற்றவாளிகள் 4 பேரும் தப்ப முயன்றனர். இதையடுத்து அவர்களை போலீசார் என்கவுன்ட்டரில் சுட்டுக் கொன்றனர். பின்னர் அவர்களின் உடல் சத்நகர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. இந்த அதிரடி சம்பவத்தின்போது 3 போலீசார் காயம் அடந்தனர்.
![Hyderabad Lady Dr Rape case 1.jpg](https://images.thesubeditor.com/newsarea_images/2019/12/6122019blobid1575628132111.jpg)