தலைநகரை மாற்ற எதிர்ப்பு,ஆந்திராவில் பந்த்..வெறிச்சோடிய அமராவதி

ஆந்திராவில் தலைநகரை மாற்றுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, அமராவதி மற்றும் சுற்றுப்புறங்களில் பந்த் நடக்கிறது.

ஆந்திராவில் சந்திரபாபு நாயுடு ஆட்சியின் போது, அம்மாநிலத்தின் புதிய தலைநகராக அமராவதியை உருவாக்குவதற்கு திட்டமிடப்பட்டது. இதற்காக, தலைநகர் மண்டல வளர்ச்சி ஆணையம்(சிஆர்டிஏ) ஏற்படுத்தப்பட்டு, மிகப் பிரம்மாண்டமாக சட்டசபை வளாகம் கட்டப்பட்டு வந்தது.

இதற்கு பின்னர், புதிதாக பொறுப்பேற்றுள்ள ஜெகன்மோகன் அரசு அந்த திட்டத்தை ரத்து செய்ய முடிவெடுத்தது. இதற்கு அமராவதி மட்டுமின்றி சுற்றியுள்ள மாவட்டங்களை சேர்ந்த மக்களும் கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்களை நடத்தினர். தெலுங்கு தேசம் கட்சியும் மாநிலம் முழுவதும் போராட்டம் நடத்தியது. எனினும், ஜெகன் அரசு தனது முடிவை மாற்றிக் கொள்ளவில்லை.

இந்நிலையில், ஆந்திர சட்டசபையில் நேற்று(ஜன.20) 2 புதிய சட்டமசோதாக்கள் செய்யப்பட்டன. அதன்படி, அமராவதியை தலைநகராக்கும் திட்டம் ரத்து செய்யப்படுகிறது. இதற்கான சிஆர்டிஏ அமைப்பும் கலைக்கப்படுகிறது. மேலும், புதிதாக 3 தலைநகர்களை அமைக்கும் திட்டத்திற்கும் அனுமதியளிக்கப்பட்டது. இதன்படி, அமராவதியில் சட்டசபை மட்டும் இருக்கும். ராஜ்பவன், தலைமைச் செயலகம், அனைத்து துறை தலைமை அலுவலகங்கள் ஆகியவை விசாகப்பட்டினத்தில் இயங்கும். நீதிமன்றங்கள் அனைத்தும் கர்னூல் நகரில் இயங்கும் என அறிவிக்கப்பட்டது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து நடத்தப்பட்ட போராட்டங்களில் போலீசார் தடியடி நடத்தினர். இயைடுத்து, அமராவதி கூட்டு நடவடிக்கை குழு சார்பில் அமராவதி பகுதியில் இன்று பந்த் நடத்தப்படுகிறது. அமராவதி மற்றும் சுற்றியுள்ள 29 கிராமங்களிலும் கடைகள் அடைக்கப்பட்டிருக்கின்றன. மேலும், அமராவதியில் வாகனங்கள் குறைவாகவே இயங்குகின்றன. இதனால், கிராமங்கள் வெறிச்சோடி காணப்படுகின்றன.

எங்களுடைய தமிழ் செய்திகளை உங்கள் மெயில் இன்பாக்சில் பெறுவதற்கு இங்கே உங்கள் மெயில் ஐடியை பதிவு செய்யவும் : Tamil news RSS

OR You can install Google News on Android or iOS, and then access our edition https://news.google.com/publications/CAAqBwgKMP_rkQsw3YOnAw?oc=3&ceid=IN:ta through the app.

Advertisement
மேலும் செய்திகள்
guarantee-signature-required-mudra-loan-increase-to-20-lakhs-who-will-get-it
கியாரண்டி கையெழுத்தே தேவையில்... முத்ரா லோன்... 20 லட்சமாக உயர்வு... யார் யாருக்கு கிடைக்கும்?
a-trainee-ias-officer-a-thousand-lies-fortunately-people-escaped
ஒரு பயிற்சி ஐ.ஏ.எஸ் அதிகாரியும்... ஆயிரம் பொய்களும்... நல்ல வேளை மக்கள் தப்பிச்சாங்க!
students-who-did-not-wear-double-braids-teachers-who-took-scissors-in-hand-officials-who-suspended-them-in-action
இரட்டை ஜடை போடாத மாணவிகள்... கத்தரியை கையில் எடுத்த ஆசிரியர்கள்... அதிரடியாக சஸ்பெண்ட் செய்த அதிகாரிகள்
bir-mohammed-caught-in-pocso-panchayat-held-in-jamaat
போக்சோவில் சிக்கிய பீர் முகமது... ஜமாத்தில் நடந்த கட்டி வைத்து நடந்த பஞ்சாயத்து
gitari-film-actress-who-entered-wayanad-landslide
வயநாடு நிலச்சரிவு... பரபரவென களத்தில் இறங்கிய கிடாரி பட நடிகை... நீளும் உதவிக்கரங்கள்...
can-nirmala-sitharaman-be-mocked-turbulent-weather-in-coimbatore
தயாநிதி மாறனின் பிராமணர்கள் மொழி.. நிர்மலா சீதாராமனை கேலி செய்யலாமா? கோவையில் கொந்தளித்த வானதி
india-accounts-for-46-of-world-s-new-covid-19-cases-quarter-of-deaths
ஒட்டுமொத்த கொரோனா பாதிப்பில் 46% இந்தியாவில் பதிவாகியுள்ளது – உலக சுகாதார நிறுவனம்
covid-deaths-due-to-oxygen-shortage-no-less-than-genocide-says-allahabad-high-court
ஆக்ஸிஷஜன் இல்லாமல் இறப்பது இனப்படுகொலைக்கு ஒப்பானது – நீதிமன்றம் காட்டம்!
rahul-gandhi-slams-modi
ஆக்சிஜன் இல்லாமல் இறக்கிறார்கள் உங்களுக்கு வீடு கேக்குதா? – மோடியை சாடிய ராகுல்!
woman-in-an-auto-rickshaw-carried-the-body-of-her-corona-dead-husband-in-uttar-pradesh
ஆம்புலன்சுக்கு அதிக பணம் கேட்டதால்.. கணவரின் சடலத்தை ஆட்டோவில் எடுத்துச் சென்ற மனைவி
Tag Clouds