அமராவதி விவகாரம்.. ஆந்திர சட்டமேலவையை கலைக்க ஜெகன் முடிவு..

ஆந்திர சட்டமேலவையை கலைக்க ஜெகன்மோகன் ரெட்டி அரசு யோசித்து வருகிறது.

ஆந்திராவில் கடந்த ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி அமோக வெற்றி பெற்று, ஜெகன்மோகன் ரெட்டி முதலமைச்சரானார். தெலுங்குதேசம் கட்சி படுதோல்வியுற்றது. அக்கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடு, எதிர்க்கட்சித் தலைவராக உள்ளார்.

சந்திரபாபு நாயுடு ஆட்சியின் போது, ஆந்திர மாநிலத்தின் புதிய தலைநகராக அமராவதியை உருவாக்குவதற்கு திட்டமிடப்பட்டது. இதற்காக, தலைநகர் மண்டல வளர்ச்சி ஆணையம்(சிஆர்டிஏ) ஏற்படுத்தப்பட்டு, மிகப் பிரம்மாண்டமாக சட்டசபை வளாகம் கட்டப்பட்டு வந்தது.

இந்நிலையில் ஜெகன் அரசு, அமராவதி திட்டத்தை ரத்து செய்ய முடிவெடுத்தது. புதிதாக 3 தலைநகர்களை அமைக்கவும் திட்டமிடப்பட்டது. இதன்படி, அமராவதியில் சட்டசபை மட்டும் இருக்கும். ராஜ்பவன், தலைமைச் செயலகம், அனைத்து துறை தலைமை அலுவலகங்கள் ஆகியவை விசாகப்பட்டினத்தில் இயங்கும். நீதிமன்றங்கள் அனைத்தும் கர்னூல் நகரில் இயங்கும். இந்த மூன்றுமே தலைநகர்களாக அமைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

அமராவதி திட்டத்தை ரத்து செய்யவும், 3 தலைநகர் உருவாக்கவும் 2 சட்டமசோதாக்களை ஜெகன் அரசு சட்டசபையில் நிறைவேற்றியது. இதைத் தொடர்ந்து, அந்த மசோதாக்கள், சட்டமேலவைக்கு அனுப்பப்பட்டன. சட்டமேலவையில் தெலுங்குதேசம் உறுப்பினர்கள்தான் மெஜாரிட்டியாக உள்ளனர். மேலவை தலைவரான எம்.ஏ.ஷெரீப் அந்த கட்சியைச் சேர்ந்தவர். இதனால், 2 மசோதாக்களையும் ஆளும்கட்சியால் நிறைவேற்ற முடியவில்லை. அப்படி நிறைவேற்றாமல் திருப்பி அனுப்பினால், சட்டசபையில் மீண்டும் அதை வலியுறுத்தி நிறைவேற்றலாம்.

ஆனால், மேலவை தலைவர் எம்.ஏ.ஷெரீப் அப்படி செய்யாமல், தெலுங்கு தேசம் கட்சி உறுப்பினர்களின் வேண்டுகோளை ஏற்று அந்த 2 மசோதாக்களையும் தேர்வுக் குழு ஆய்வுக்கு அனுப்பினார். அந்த குழுவில் பரிசீலித்து மேலவைக்கு திருப்பி வருவதற்கு பல நாட்களாகும்.

இதனால், முதலமைச்சர் ஜெகன்மோகன் கடும்கோபம் அடைந்தார். இதையடுத்து, சட்டசபையில் நேற்று(ஜன.23) அவர் கூறியதாவது:
சட்டமேலவை தலைவர் அந்த மசோதாக்களை தேர்வுக் குழுவுக்கு அனுப்பியது விதிகளுக்கு முரணானது. மக்கள் நலனுக்காக எடுக்கப்படும் நல்ல முடிவுகளையும், சட்டங்களையும் மெஜாரிட்டி அரசால் நிறைவேற்ற விடாமல் செய்ய முடியுமா? சட்டத்தின் மீது ஆலோசனைகளை கூறுவதற்குத்தான் சட்டமேலவை.
நாட்டில் உள்ள 28 மாநிலங்களில் 6 மாநிலங்களில் மட்டுமே சட்டமேலவை உள்ளது. மேலவை இருக்க வேண்டுமென்ற கட்டாயம் கிடையாது. இந்த மேலவைக்கு ஆண்டுக்கு ரூ.60 கோடி செலவாகிறது. எனவே, மேலவை நமக்கு தேவையா என்று யோசிக்க வேண்டிய கட்டாயம் வந்து விட்டது. இது பற்றி, வரும் 27ம் தேதி நாம் முடிவு செய்வோம்.
இவ்வாறு ஜெகன்மோகன் ரெட்டி கூறியுள்ளார்.

எனவே, வரும் 27ம் தேதியே சட்டமேலவையை கலைப்பதற்கான மசோதா, சட்டமன்றத்தில் கொண்டு வரப்படலாம் எனத் தெரிகிறது. தமிழ்நாட்டில் எம்.ஜி.ஆர். ஆட்சியில் இருந்த போது நடிகை வெண்ணிறை ஆடை நிர்மலாவுக்கும் மேலவை உறுப்பினர் தேர்தலில் அதிமுக சார்பில் சீட் வழங்கினார். வெண்ணிற ஆடை நிர்மலா ஏற்கனவே கடனாளியாகி திவால் நோட்டீஸ் கொடுத்திருந்தார். அப்படி மஞ்சள் நோட்டீஸ் கொடுத்தவர்கள் தேர்தலில் போட்டியிடும் தகுதியை இழந்து விடுவார்கள். அதனடிப்படையில், நிர்மலா போட்டியை எதிர்த்து வழக்கு போடப்பட்டது. இதற்கு பின்னர், எம்.ஜி.ஆர் சட்டமேலவையை கலைக்கும் முடிவுக்கு வந்தார். அதன்படி, அந்த அவை கலைக்கப்பட்டது. தற்போது தமிழகத்தில் சட்டமேலவை கிடையாது.

எங்களுடைய தமிழ் செய்திகளை உங்கள் மெயில் இன்பாக்சில் பெறுவதற்கு இங்கே உங்கள் மெயில் ஐடியை பதிவு செய்யவும் : Tamil news RSS

OR You can install Google News on Android or iOS, and then access our edition https://news.google.com/publications/CAAqBwgKMP_rkQsw3YOnAw?oc=3&ceid=IN:ta through the app.

Advertisement
மேலும் செய்திகள்
india-accounts-for-46-of-world-s-new-covid-19-cases-quarter-of-deaths
ஒட்டுமொத்த கொரோனா பாதிப்பில் 46% இந்தியாவில் பதிவாகியுள்ளது – உலக சுகாதார நிறுவனம்
covid-deaths-due-to-oxygen-shortage-no-less-than-genocide-says-allahabad-high-court
ஆக்ஸிஷஜன் இல்லாமல் இறப்பது இனப்படுகொலைக்கு ஒப்பானது – நீதிமன்றம் காட்டம்!
rahul-gandhi-slams-modi
ஆக்சிஜன் இல்லாமல் இறக்கிறார்கள் உங்களுக்கு வீடு கேக்குதா? – மோடியை சாடிய ராகுல்!
woman-in-an-auto-rickshaw-carried-the-body-of-her-corona-dead-husband-in-uttar-pradesh
ஆம்புலன்சுக்கு அதிக பணம் கேட்டதால்.. கணவரின் சடலத்தை ஆட்டோவில் எடுத்துச் சென்ற மனைவி
corona-infection-confirmed-8-lions-hyderabad-zoo
இந்தியாவில் முதன்முறையாக 8 சிங்கங்களுக்கு கொரோனா!
pinarayi-son-in-law-will-get-a-chance-in-kerala-ministry
மருமகனுக்கு அமைச்சர் பதவி கொடுக்கும் பினராயி விஜயன்?!
bihar-extends-lockdown-until-may-2021
பீகாரில் மே 15 வரை ஊரடங்கு நீட்டிப்பு.. மந்திரி நிதிஷ்குமார் அறிவிப்பு..
rahul-gandhi-says-to-put-lockdown-all-over-india
கொரோனாவை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அவசியம்.. ராகுல் காந்தி அறிவிக்கை..
dont-do-ct-scan-says-by-aiims-director
லேசான அறிகுறி இருந்தால் சி.டி ஸ்கேன் செய்ய தேவையில்லை.. எய்ம்ஸ் இயக்குனர் தகவல்..
sonu-sood-gets-critically-ill-covid-patient-airlifted
விமான ஆம்புலன்ஸ் அனுப்பி கொரோனா நோயாளியின் உயிரை மீட்ட சோனுசூட்!
Tag Clouds