இலங்கை பெண்களுக்கு பத்மஸ்ரீ விருது அறிவிப்பு..

இலங்கையைச் சேர்ந்த வஜ்ரசித்ரசேனா, இந்திரா தசநாயகே ஆகியோருக்கு பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டிருக்கிறது.

குடியரசு தினவிழாவையொட்டி, பத்மவிருதுகள் நேற்று(ஜன.26) அறிவிக்கப்பட்டன. பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டவர்களில் 2 இலங்கை பெண்களும் அடங்குவார்கள். ஒருவர், வஜ்ர சித்ரசேனா என்ற 87 வயது நடனக் கலைஞர், சிங்களப் பெண். இவர் பாலே நடனத்தில் சிறந்து விளங்கியவர். அது மட்டுமல்ல, இந்தியா, ரஷ்யா, அமெரிக்கா போன்ற நாடுகளில் உள்ள நடனக் கலைகளை ஆய்வு செய்தவர். இந்தியாவில் ஒடிசி, கண்டிய நடனங்களை ஆய்வு செய்து வளர்த்தவர். இந்தியாவுக்கும், இலங்கைக்கும் இடையே கலாசார உறவுகள் வலுப்படுவதற்கு உதவியாக இருந்தார்.

அதே போல், மறைந்த பேராசிரியை இந்திரா தசநாயகே இந்தியாவில் பிறந்தவர். லக்னோ பல்லைக்கழகத்தில் பணியாற்றி விட்டு, இலங்கை சென்றவர், அங்கு களனி பல்கலைக்கழகத்தில் பணியாற்றினார். அங்கு இந்தி மொழியை அறிமுகம் செய்து அதன்மூலம் இந்தியாவுக்கும், இலங்கைக்கும் இடையே நட்புறவு அதிகரிக்க காரணமாக இருந்தவர். இவருக்கும் பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டிருக்கிறது.

இந்தியாவில் பத்மவிருதுகள் தோற்றுவிக்கப்பட்ட 1954ம் ஆண்டு முதல் இது வரை 272 வெளிநாட்டினரும் விருதுகளை பெற்றிருக்கிறார்கள். அவர்களில் வெளிநாடு வாழ் இந்தியரும் அடங்குவார்கள்.

எங்களுடைய தமிழ் செய்திகளை உங்கள் மெயில் இன்பாக்சில் பெறுவதற்கு இங்கே உங்கள் மெயில் ஐடியை பதிவு செய்யவும் : Tamil news RSS

OR You can install Google News on Android or iOS, and then access our edition https://news.google.com/publications/CAAqBwgKMP_rkQsw3YOnAw?oc=3&ceid=IN:ta through the app.

Advertisement
மேலும் செய்திகள்
india-accounts-for-46-of-world-s-new-covid-19-cases-quarter-of-deaths
ஒட்டுமொத்த கொரோனா பாதிப்பில் 46% இந்தியாவில் பதிவாகியுள்ளது – உலக சுகாதார நிறுவனம்
covid-deaths-due-to-oxygen-shortage-no-less-than-genocide-says-allahabad-high-court
ஆக்ஸிஷஜன் இல்லாமல் இறப்பது இனப்படுகொலைக்கு ஒப்பானது – நீதிமன்றம் காட்டம்!
rahul-gandhi-slams-modi
ஆக்சிஜன் இல்லாமல் இறக்கிறார்கள் உங்களுக்கு வீடு கேக்குதா? – மோடியை சாடிய ராகுல்!
woman-in-an-auto-rickshaw-carried-the-body-of-her-corona-dead-husband-in-uttar-pradesh
ஆம்புலன்சுக்கு அதிக பணம் கேட்டதால்.. கணவரின் சடலத்தை ஆட்டோவில் எடுத்துச் சென்ற மனைவி
corona-infection-confirmed-8-lions-hyderabad-zoo
இந்தியாவில் முதன்முறையாக 8 சிங்கங்களுக்கு கொரோனா!
pinarayi-son-in-law-will-get-a-chance-in-kerala-ministry
மருமகனுக்கு அமைச்சர் பதவி கொடுக்கும் பினராயி விஜயன்?!
bihar-extends-lockdown-until-may-2021
பீகாரில் மே 15 வரை ஊரடங்கு நீட்டிப்பு.. மந்திரி நிதிஷ்குமார் அறிவிப்பு..
rahul-gandhi-says-to-put-lockdown-all-over-india
கொரோனாவை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அவசியம்.. ராகுல் காந்தி அறிவிக்கை..
dont-do-ct-scan-says-by-aiims-director
லேசான அறிகுறி இருந்தால் சி.டி ஸ்கேன் செய்ய தேவையில்லை.. எய்ம்ஸ் இயக்குனர் தகவல்..
sonu-sood-gets-critically-ill-covid-patient-airlifted
விமான ஆம்புலன்ஸ் அனுப்பி கொரோனா நோயாளியின் உயிரை மீட்ட சோனுசூட்!
Tag Clouds