பீகார் பெண்ணுக்கு கொரோனா வைரஸ்..

பீகாரை சேர்ந்த பெண்ணுக்கு கொரோனா வைரஸ் அறிகுறிகள் தென்பட்டதால், சீனாவில் இருந்து அவரை அழைத்து வந்து அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்க முயற்சிக்கப்படுகிறது.

சீனாவில் ஹுபெய் மாகாண தலைநகர் உகான் நகரில் கொரோனா வைரஸ் நோய் தாக்குதல் கடந்த மாதம் கண்டறியப்பட்டது. இது ஒருவரிடம் இருந்து இன்னொருவருக்கு எளிதில் பரவக்கூடிய வைரஸ் என்பதால், அந்த நகரில் வேகமாக பரவியது. சீனாவிலேயே பல மாகாணங்களுக்கு இந்த தொற்று நோய் பரவியுள்ளது. இது வரை 80க்கும் மேற்பட்டவர்கள் இறந்துள்ளதாகவும், 3 ஆயிரம் பேர் வரை நோய் தொற்றுக்கு உள்ளாகியுள்ளதாகவும் கணக்கெடுக்கப்பட்டுள்ளது.

மேலும், சீனாவில் இருந்து வெளிநாடுகளுக்கு சென்ற பயணிகள் மூலமாக மற்ற நாடுகளுக்கும் பரவியுள்ளது. தற்போது, இந்த வைரஸ் தாக்குதல் தாய்லாந்து, வியட்நாம், சிங்கப்பூர், தென்கொரியா, தைவான், நேபாளம், பிரான்ஸ், அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளுக்கும் பரவியிருப்பதாக தெரிய வந்துள்ளது.

இதையடுத்து, ஜப்பான், அமெரிக்கா, பிரான்ஸ் போன்ற நாடுகள், சீனாவில் உள்ள தங்கள் நாட்டு பிரஜைகளை திருப்பி அழைத்து வர ஏற்பாடுகளை செய்துள்ளன. பல ஆயிரக்கணக்காேனார் தங்கள் நாடுகளுக்கு திரும்பி வருகின்றனர். இந்தியாவும் சீனாவில் தங்கி படிக்கும் மாணவர்கள் நாடு திரும்புவதற்கு உதவி வருகிறது. இதற்கென தனியாக ஒரு இலவச ெதாடர்பு எண்ணை அளித்துள்ளது. மேலும், இந்தியா திரும்புவோருக்கு தூதகரங்கள் மூலமாக அனைத்து உதவிகளையும் செய்து வருவதாக இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், பீகாரை சேர்ந்த பெண் ஒருவருக்கு சீனாவில் சாப்ரா நகரில் கொரோனா வைரஸ் அறிகுறிகள் கண்டுபிடிக்கப்பட்டதால் அங்குள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். அவரை பீகார் மாநிலம் பாட்னாவுக்கு அழைத்து வர ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அவர் பாட்னா அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்படுவார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே, ராஜஸ்தானை சேர்ந்த டாக்டர் ஒருவரும் சீனா சென்றிருந்த இடத்தில் கொரோனா வைரஸ் பாதிப்புக்கு உள்ளாகியிருக்கிறார். அவருக்கும் வைரஸ் நோய்க்கான அறிகுறிகள் தெரிய வந்துள்ளது. அவருக்கு நோய் பாதிப்பு உள்ளதா என்று அறிந்து சிகிச்சை அளிக்கப்படும் என்று சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

எங்களுடைய தமிழ் செய்திகளை உங்கள் மெயில் இன்பாக்சில் பெறுவதற்கு இங்கே உங்கள் மெயில் ஐடியை பதிவு செய்யவும் : Tamil news RSS

OR You can install Google News on Android or iOS, and then access our edition https://news.google.com/publications/CAAqBwgKMP_rkQsw3YOnAw?oc=3&ceid=IN:ta through the app.

Advertisement
மேலும் செய்திகள்
india-accounts-for-46-of-world-s-new-covid-19-cases-quarter-of-deaths
ஒட்டுமொத்த கொரோனா பாதிப்பில் 46% இந்தியாவில் பதிவாகியுள்ளது – உலக சுகாதார நிறுவனம்
covid-deaths-due-to-oxygen-shortage-no-less-than-genocide-says-allahabad-high-court
ஆக்ஸிஷஜன் இல்லாமல் இறப்பது இனப்படுகொலைக்கு ஒப்பானது – நீதிமன்றம் காட்டம்!
rahul-gandhi-slams-modi
ஆக்சிஜன் இல்லாமல் இறக்கிறார்கள் உங்களுக்கு வீடு கேக்குதா? – மோடியை சாடிய ராகுல்!
woman-in-an-auto-rickshaw-carried-the-body-of-her-corona-dead-husband-in-uttar-pradesh
ஆம்புலன்சுக்கு அதிக பணம் கேட்டதால்.. கணவரின் சடலத்தை ஆட்டோவில் எடுத்துச் சென்ற மனைவி
corona-infection-confirmed-8-lions-hyderabad-zoo
இந்தியாவில் முதன்முறையாக 8 சிங்கங்களுக்கு கொரோனா!
pinarayi-son-in-law-will-get-a-chance-in-kerala-ministry
மருமகனுக்கு அமைச்சர் பதவி கொடுக்கும் பினராயி விஜயன்?!
bihar-extends-lockdown-until-may-2021
பீகாரில் மே 15 வரை ஊரடங்கு நீட்டிப்பு.. மந்திரி நிதிஷ்குமார் அறிவிப்பு..
rahul-gandhi-says-to-put-lockdown-all-over-india
கொரோனாவை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அவசியம்.. ராகுல் காந்தி அறிவிக்கை..
dont-do-ct-scan-says-by-aiims-director
லேசான அறிகுறி இருந்தால் சி.டி ஸ்கேன் செய்ய தேவையில்லை.. எய்ம்ஸ் இயக்குனர் தகவல்..
sonu-sood-gets-critically-ill-covid-patient-airlifted
விமான ஆம்புலன்ஸ் அனுப்பி கொரோனா நோயாளியின் உயிரை மீட்ட சோனுசூட்!
Tag Clouds

READ MORE ABOUT :