மகாத்மா காந்தி நினைவிடத்தில் பிரதமர் மோடி, சோனியா அஞ்சலி..

by எஸ். எம். கணபதி, Jan 30, 2020, 15:06 PM IST

மகாத்மா காந்தி நினைவிடத்தில் பிரதமர் நரேந்திர மோடி, பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் மலரஞ்சலி செலுத்தினர். சோனியா காந்தி, மன்மோகன்சிங், அத்வானி உள்ளிட்டோரும் மரியாதை செலுத்தினர்.

மகாத்மா காந்தியின் 73 வது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி, டெல்லி ராஜ்கோட்டில் உள்ள அவரது நினைவிடத்தில் பிரதமர் மோடி, மலர் தூவி மரியாதை செலுத்தினார். இதே போல், மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத்சிங், ராணுவ தலைமை அதிகாரி பிபின் ராவத் மற்றும் முப்படை தளபதிகள் மரியாதை செய்தனர்.

காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங், பாஜக மூத்த தலைவர் எல்.கே.அத்வானி உள்ளிட்டோரும் ராஜ்கோட் சென்று மகாத்மா காந்தி நினைவிடத்தில் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.

You'r reading மகாத்மா காந்தி நினைவிடத்தில் பிரதமர் மோடி, சோனியா அஞ்சலி.. Originally posted on The Subeditor Tamil

More India News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை