அயோத்தியில் ராமர்கோயில் கட்டுவதற்கு புதிய அறக்கட்டளை.. பிரதமர் மோடி தகவல்

அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்கு அறக்கட்டளை அமைக்கப்பட்டுள்ளது என்று பிரதமர் மோடி, மக்களவையில் தெரிவித்தார்.

அயோத்தியில் பாபர் மசூதி இடிக்கப்பட்ட பிறகு அந்த சர்ச்சைக்குரிய இடம் தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு நடைபெற்று வந்தது. சமீபத்தில் அந்த வழக்கில் இறுதி தீர்ப்பு வழங்கப்பட்டது. அதில், அந்த இடத்தில் ராமர் கோயில் கட்டலாம் என்றும் அதற்கு பதிலாக வேறொரு பகுதியில் பாபர் மசூதி கட்ட 5 ஏக்கர் நிலம் வழங்க வேண்டும் என்றும் மத்திய அரசுக்கு உத்தரவிட்டது. மேலும், ராமர்கோயிலை கட்டுவதற்கு தனி அறக்கட்டளை அமைக்கவும் உத்தரவிடப்பட்டது.

இந்நிலையில், மக்களவையில் இன்று(பிப்.5) காலை பிரதமர் மோடி கூறியதாவது:
இன்று வரலாற்று சிறப்புவாய்ந்த, மிக முக்கியமான தகவல் ஒன்றை கூற வந்துள்ளேன். கோடிக்கணக்கான மக்களை போல் என் உள்ளத்திற்கும் மகிழ்ச்சி தரும், அதே சமயம் இதை அறிவிப்பதற்கு எனக்கு கிடைத்த வரம் என்றும் சொல்வேன்.
அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்கு ஒரு திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது. இதை நிறைவேற்றுவதற்கு ஸ்ரீராமஜென்மபூமி தீர்த்த ஷேத்திர அறக்கட்டளை என்ற அறக்கட்டளை அமைக்கப்பட்டுள்ளது. இந்த அறக்கட்டளையிடம் 67.703 ஏக்கர் நிலம் ஒப்படைக்கப்படும்.

அதே போல், சுப்ரீம் கோர்ட் தீர்ப்பின்படி சன்னி முஸ்லிம் வாரியத்திடம் 5 ஏக்கர் நிலத்தை ஒப்படைக்க உத்தரப்பிரதேச அரசு ஒப்புக் கொண்டுள்ளது.

இவ்வாறு பிரதமர் மோடி தெரிவித்தார். அவரது அறிவிப்பை பாஜக மற்றும் கூட்டணி கட்சியின் உறுப்பினர்கள் மேஜையைத் தட்டி வரவேற்றனர்.

எங்களுடைய தமிழ் செய்திகளை உங்கள் மெயில் இன்பாக்சில் பெறுவதற்கு இங்கே உங்கள் மெயில் ஐடியை பதிவு செய்யவும் : Tamil news RSS

OR You can install Google News on Android or iOS, and then access our edition https://news.google.com/publications/CAAqBwgKMP_rkQsw3YOnAw?oc=3&ceid=IN:ta through the app.

Advertisement
மேலும் செய்திகள்
india-accounts-for-46-of-world-s-new-covid-19-cases-quarter-of-deaths
ஒட்டுமொத்த கொரோனா பாதிப்பில் 46% இந்தியாவில் பதிவாகியுள்ளது – உலக சுகாதார நிறுவனம்
covid-deaths-due-to-oxygen-shortage-no-less-than-genocide-says-allahabad-high-court
ஆக்ஸிஷஜன் இல்லாமல் இறப்பது இனப்படுகொலைக்கு ஒப்பானது – நீதிமன்றம் காட்டம்!
rahul-gandhi-slams-modi
ஆக்சிஜன் இல்லாமல் இறக்கிறார்கள் உங்களுக்கு வீடு கேக்குதா? – மோடியை சாடிய ராகுல்!
woman-in-an-auto-rickshaw-carried-the-body-of-her-corona-dead-husband-in-uttar-pradesh
ஆம்புலன்சுக்கு அதிக பணம் கேட்டதால்.. கணவரின் சடலத்தை ஆட்டோவில் எடுத்துச் சென்ற மனைவி
corona-infection-confirmed-8-lions-hyderabad-zoo
இந்தியாவில் முதன்முறையாக 8 சிங்கங்களுக்கு கொரோனா!
pinarayi-son-in-law-will-get-a-chance-in-kerala-ministry
மருமகனுக்கு அமைச்சர் பதவி கொடுக்கும் பினராயி விஜயன்?!
bihar-extends-lockdown-until-may-2021
பீகாரில் மே 15 வரை ஊரடங்கு நீட்டிப்பு.. மந்திரி நிதிஷ்குமார் அறிவிப்பு..
rahul-gandhi-says-to-put-lockdown-all-over-india
கொரோனாவை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அவசியம்.. ராகுல் காந்தி அறிவிக்கை..
dont-do-ct-scan-says-by-aiims-director
லேசான அறிகுறி இருந்தால் சி.டி ஸ்கேன் செய்ய தேவையில்லை.. எய்ம்ஸ் இயக்குனர் தகவல்..
sonu-sood-gets-critically-ill-covid-patient-airlifted
விமான ஆம்புலன்ஸ் அனுப்பி கொரோனா நோயாளியின் உயிரை மீட்ட சோனுசூட்!
Tag Clouds