ஷாகீன்பாக் போராட்டம் முடிவுக்கு வருமா? சுப்ரீம்கோர்ட் இன்று விசாரணை

டெல்லியில் ஷாகீன்பாக் பகுதியில் 50 நாட்களுக்கும் மேலாக நடைபெற்று வரும் போராட்டத்தை கலைக்க உத்தரவிடக் கோரி, தாக்கல் செய்யப்பட்ட மனுவை சுப்ரீம் கோர்ட் இன்று விசாரிக்க உள்ளது.

குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து நாடு முழுவதும் ஆங்காங்கே போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. டெல்லியில் ஷாகீன்பாக் என்ற பகுதியில் இஸ்லாமியப் பெண்கள், குழந்தைகள் என குடும்பத்தினருடன் சாலையில் அமர்ந்து 50 நாட்களுக்கும் மேலாக இரவுபகலாக போராடி வருகிறார்கள்.

டெல்லியில் கடந்த 8ம் தேதி சட்டமன்றத் தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தல் பிரச்சாரத்தில் ஷாகீன்பாக் போராட்டத்தை பாஜகவினர் கடுமையாக விமர்சித்து பேசினர்.

இதற்கிடையே, ஷாகீன்பாக் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர போலீசாருக்கு உத்தரவிடக் கோரி, டெல்லி ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இதை விசாரித்த ஐகோர்ட், சட்டம் ஒழுங்கை பராமரிக்க வேண்டியது காவல்துறை பொறுப்பு. நாங்கள் உத்தரவிட முடியாது என்று மனுவை தள்ளுபடி செய்தது.

இதையடுத்து, அமித்சஹானி என்ற வழக்கறிஞர் சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். அதில், ஷாகீன்பாக் பகுதியில் உள்ளவர்களை உடனடியாக அப்புறப்படுத்துமாறு காவல் துறைக்கு உத்தரவிட கோரியிருந்தார். இம்மனு நீதிபதிகள் எஸ்.கே.கவுல், கே.எம்.ஜோசப் ஆகியோர் முன்பாக கடந்த வாரம் விசாரணைக்கு வந்தது. வழக்கறிஞர் அமித்சஹானி வாதத்தை ஏற்ற நீதிபதிகள், அங்கு ஏதோ பிரச்னை இருக்கிறது. அது பற்றி ஆய்வு செய்ய வேண்டியுள்ளது. வரும் 10ம் தேதி இந்த வழக்கை விசாரிக்கிறோம் என்றனர்.

அதற்கு வழக்கறிஞர் அமித்சஹானி, அதற்குள் டெல்லி சட்டசபைத் தேர்தல் முடிந்து விடும் என்றார். நீதிபதிகள், நாங்களும் அதற்காகத்தான் சொல்கிறோம். இது தேர்தலுக்காக விசாரிக்க வேண்டியதல்ல. அது முடிந்த பிறகே விசாரிக்கலாம் என்று கூறி தள்ளி வைத்திருந்தனர்.
இந்நிலையில், இன்று இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வருகிறது.

எங்களுடைய தமிழ் செய்திகளை உங்கள் மெயில் இன்பாக்சில் பெறுவதற்கு இங்கே உங்கள் மெயில் ஐடியை பதிவு செய்யவும் : Tamil news RSS

OR You can install Google News on Android or iOS, and then access our edition https://news.google.com/publications/CAAqBwgKMP_rkQsw3YOnAw?oc=3&ceid=IN:ta through the app.

Advertisement
மேலும் செய்திகள்
india-accounts-for-46-of-world-s-new-covid-19-cases-quarter-of-deaths
ஒட்டுமொத்த கொரோனா பாதிப்பில் 46% இந்தியாவில் பதிவாகியுள்ளது – உலக சுகாதார நிறுவனம்
covid-deaths-due-to-oxygen-shortage-no-less-than-genocide-says-allahabad-high-court
ஆக்ஸிஷஜன் இல்லாமல் இறப்பது இனப்படுகொலைக்கு ஒப்பானது – நீதிமன்றம் காட்டம்!
rahul-gandhi-slams-modi
ஆக்சிஜன் இல்லாமல் இறக்கிறார்கள் உங்களுக்கு வீடு கேக்குதா? – மோடியை சாடிய ராகுல்!
woman-in-an-auto-rickshaw-carried-the-body-of-her-corona-dead-husband-in-uttar-pradesh
ஆம்புலன்சுக்கு அதிக பணம் கேட்டதால்.. கணவரின் சடலத்தை ஆட்டோவில் எடுத்துச் சென்ற மனைவி
corona-infection-confirmed-8-lions-hyderabad-zoo
இந்தியாவில் முதன்முறையாக 8 சிங்கங்களுக்கு கொரோனா!
pinarayi-son-in-law-will-get-a-chance-in-kerala-ministry
மருமகனுக்கு அமைச்சர் பதவி கொடுக்கும் பினராயி விஜயன்?!
bihar-extends-lockdown-until-may-2021
பீகாரில் மே 15 வரை ஊரடங்கு நீட்டிப்பு.. மந்திரி நிதிஷ்குமார் அறிவிப்பு..
rahul-gandhi-says-to-put-lockdown-all-over-india
கொரோனாவை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அவசியம்.. ராகுல் காந்தி அறிவிக்கை..
dont-do-ct-scan-says-by-aiims-director
லேசான அறிகுறி இருந்தால் சி.டி ஸ்கேன் செய்ய தேவையில்லை.. எய்ம்ஸ் இயக்குனர் தகவல்..
sonu-sood-gets-critically-ill-covid-patient-airlifted
விமான ஆம்புலன்ஸ் அனுப்பி கொரோனா நோயாளியின் உயிரை மீட்ட சோனுசூட்!
Tag Clouds