சாதிவாரி கணக்கெடுப்பு.. பீகார் சட்டசபை தீர்மானம்..

சாதிவாரியாக மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டுமென்று மத்திய அரசை வலியுறுத்தி பீகார் சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

பீகாரில் முதல்வர் நிதிஷ்குமார் தலைமையில் ஐக்கிய ஜனதா தளம்- பாஜக கூட்டணி ஆட்சி நடைபெறுகிறது. இதனால், குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு(சிஏஏ) ஐக்கிய ஜனதா தளம் ஆதரவு தெரிவித்தது. அதனால், நிதிஷ்குமாருக்கு எதிராக அக்கட்சியைச் சேர்ந்த சிலரே கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து, நிதிஷ்குமார், சிஏஏ சட்டத்தால் யாருக்கும் பாதிப்பு வராது. அதைத் தொடர்ந்து மேற்கொள்ளப்படும் தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பு(என்பிஆர்), தேசிய குடிமக்கள் பதிவேடு(என்ஆர்சி) ஆகியவற்றிலும் யாருக்கும் பாதிப்பு வராதவாறு பார்த்துக் கொள்வோம் என்று கூறி வந்தார்.

எனினும், முக்கிய எதிர்க்கட்சியான லாலுவின் ஆர்ஜேடி, இது தொடர்பாகச் சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்ற வலியுறுத்தி வந்தது. இதையடுத்து, பீகாரில் என்.ஆர்.சியை அமல்படுத்த மாட்டோம் என்று அம்மாநிலச் சட்டசபையில் ஏகமானதாகத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும், கடந்த 2010ல் நடத்தப்பட்ட அதே கேள்விகளுடன் என்பிஆர் எடுக்கப்படும் என்றும், மத்திய அரசு புதிதாகத் தயாரித்துள்ள சர்ச்சைக்குரிய கேள்விகள் இடம்பெறாது என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இந்த தீர்மானங்களுக்குப் பீகாரில் பாஜகவின் எம்.எல்.ஏ.க்களே ஆதரவு தெரிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், இன்று(பிப்.27) அம்மாநிலச் சட்டசபையில் இன்னொரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதாவது, மக்கள் தொகை கணக்கெடுப்பின் போது, சாதி வாரியாக கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று மத்திய அரசை வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

எங்களுடைய தமிழ் செய்திகளை உங்கள் மெயில் இன்பாக்சில் பெறுவதற்கு இங்கே உங்கள் மெயில் ஐடியை பதிவு செய்யவும் : Tamil news RSS

OR You can install Google News on Android or iOS, and then access our edition https://news.google.com/publications/CAAqBwgKMP_rkQsw3YOnAw?oc=3&ceid=IN:ta through the app.

Advertisement
மேலும் செய்திகள்
india-accounts-for-46-of-world-s-new-covid-19-cases-quarter-of-deaths
ஒட்டுமொத்த கொரோனா பாதிப்பில் 46% இந்தியாவில் பதிவாகியுள்ளது – உலக சுகாதார நிறுவனம்
covid-deaths-due-to-oxygen-shortage-no-less-than-genocide-says-allahabad-high-court
ஆக்ஸிஷஜன் இல்லாமல் இறப்பது இனப்படுகொலைக்கு ஒப்பானது – நீதிமன்றம் காட்டம்!
rahul-gandhi-slams-modi
ஆக்சிஜன் இல்லாமல் இறக்கிறார்கள் உங்களுக்கு வீடு கேக்குதா? – மோடியை சாடிய ராகுல்!
woman-in-an-auto-rickshaw-carried-the-body-of-her-corona-dead-husband-in-uttar-pradesh
ஆம்புலன்சுக்கு அதிக பணம் கேட்டதால்.. கணவரின் சடலத்தை ஆட்டோவில் எடுத்துச் சென்ற மனைவி
corona-infection-confirmed-8-lions-hyderabad-zoo
இந்தியாவில் முதன்முறையாக 8 சிங்கங்களுக்கு கொரோனா!
pinarayi-son-in-law-will-get-a-chance-in-kerala-ministry
மருமகனுக்கு அமைச்சர் பதவி கொடுக்கும் பினராயி விஜயன்?!
bihar-extends-lockdown-until-may-2021
பீகாரில் மே 15 வரை ஊரடங்கு நீட்டிப்பு.. மந்திரி நிதிஷ்குமார் அறிவிப்பு..
rahul-gandhi-says-to-put-lockdown-all-over-india
கொரோனாவை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அவசியம்.. ராகுல் காந்தி அறிவிக்கை..
dont-do-ct-scan-says-by-aiims-director
லேசான அறிகுறி இருந்தால் சி.டி ஸ்கேன் செய்ய தேவையில்லை.. எய்ம்ஸ் இயக்குனர் தகவல்..
sonu-sood-gets-critically-ill-covid-patient-airlifted
விமான ஆம்புலன்ஸ் அனுப்பி கொரோனா நோயாளியின் உயிரை மீட்ட சோனுசூட்!
Tag Clouds

READ MORE ABOUT :