ஜோதிராதித்ய சிந்தியா பாஜகவில் சேர்ந்தார்.. காங்கிரஸ் வேஸ்ட் என்கிறார்

மத்தியப் பிரதேச காங்கிரஸ் அதிருப்தி எம்.எல்.ஏ.க்களுடன் கட்சியில் இருந்து விலகிய ஜோதிராதித்ய சிந்தியா, பாஜகவில் இணைந்தார்.

மத்தியப் பிரதேசத்தில் முதலமைச்சர் கமல்நாத் தலைமையில் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. குவாலியர் சிந்தியா மன்னர் பரம்பரையில் வந்த ஜோதிராதித்ய சிந்தியா, தனக்கு முதல்வர் பதவி கேட்டு காங்கிரஸ் தலைமைக்கு நெருக்கடி கொடுத்து வந்தார். அதன்பிறகு, அவர் மாநில காங்கிரஸ் தலைவர் பதவியை எதிர்பார்த்தார். ஆனால், கமல்நாத் அவரை பொருட்படுத்தவே இல்லை.
கடந்த சில மாதங்களுக்கு முன்பே சிந்தியா, அதிருப்தி எம்.எல்.ஏ.க்களுடன் விலகி விடக் கூடும் என்று பேச்சு அடிபட்டது. ஆனால், காங்கிரஸ் தலைவர் பதவியிலிருந்து ராகுல்காந்தி விலகிய பிறகு, இடைக்காலத் தலைவராக உள்ள சோனியாகாந்தி பெயரளவில்தான் செயல்பட்டு வருகிறார். அவர் ம.பி. உட்கட்சிப் பூசலுக்குத் தீர்வு காண முயற்சிக்கவில்லை. இதை பாஜக நன்றாகப் பயன்படுத்திக் கொண்டது.
வரும் 26ம் தேதி ம.பி.யில் 3 ராஜ்யசபா எம்பி இடங்களுக்கான தேர்தல் நடைபெறவுள்ளது. இதற்கிடையே, கமல்நாத் ஆட்சியைக் கவிழ்க்கும் முயற்சியில் பாஜக தீவிரமாக இறங்கியுள்ளது. பாஜக ஏற்பாட்டில் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் 19 பேர், பெங்களூருக்குச் சென்று, அங்குள்ள ரிசார்ட் ஒன்றில் தங்க வைக்கப்பட்டனர். காங்கிரஸ் அதிருப்தி தலைவர் ஜோதிராதித்ய சிந்தியா நேற்று காலை பிரதமர் மோடியையும், உள்துறை அமைச்சர் அமித்ஷாவையும் சந்தித்துப் பேசினார். அதன்பிறகு, காங்கிரசிலிருந்து விலகுவதாகச் சோனியாவுக்கு அனுப்பிய கடிதத்தை வெளியிட்டார்.

அடுத்த ஒரு மணி நேரத்தில், பெங்களூருவில் தங்க வைக்கப்பட்டிருந்த 19 காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களும் தங்கள் பதவியை ராஜினாமா செய்வதாகவும், காங்கிரசிலிருந்து விலகுவதாகவும் அறிவித்தனர். நேற்றிரவு மேலும் 3 காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமாவை அறிவித்தனர். 22 எம்.எல்.ஏ.க்கள் விலகுவதால், கமல்நாத் ஆட்சி கவிழ்வது உறுதியானது.

இந்நிலையில், பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டாவை ஜோதிராதித்ய சிந்தியா இன்று(மார்ச்11) டெல்லியில் சந்தித்து முறைப்படி பாஜகவில் இணைந்தார். அப்போது சிந்தியா கூறுகையில், என் வாழ்க்கையில் 2 முக்கியமான திருப்பங்களைச் சந்தித்திருக்கிறேன். ஒன்று எனது தந்தையார் திடீரென மரணம் அடைந்தது. இன்னொன்று, இப்போது அரசியலில் புதிய பாதையை நான் தேர்ந்தெடுத்தது. காங்கிரஸ் கட்சி முன்பிருந்த காங்கிரசைப் போல் இல்லை. அந்த கட்சியிலிருந்தால் எந்த பணியையும் செய்ய முடியாது என்றார்.

எங்களுடைய தமிழ் செய்திகளை உங்கள் மெயில் இன்பாக்சில் பெறுவதற்கு இங்கே உங்கள் மெயில் ஐடியை பதிவு செய்யவும் : Tamil news RSS

OR You can install Google News on Android or iOS, and then access our edition https://news.google.com/publications/CAAqBwgKMP_rkQsw3YOnAw?oc=3&ceid=IN:ta through the app.

Advertisement
மேலும் செய்திகள்
india-accounts-for-46-of-world-s-new-covid-19-cases-quarter-of-deaths
ஒட்டுமொத்த கொரோனா பாதிப்பில் 46% இந்தியாவில் பதிவாகியுள்ளது – உலக சுகாதார நிறுவனம்
covid-deaths-due-to-oxygen-shortage-no-less-than-genocide-says-allahabad-high-court
ஆக்ஸிஷஜன் இல்லாமல் இறப்பது இனப்படுகொலைக்கு ஒப்பானது – நீதிமன்றம் காட்டம்!
rahul-gandhi-slams-modi
ஆக்சிஜன் இல்லாமல் இறக்கிறார்கள் உங்களுக்கு வீடு கேக்குதா? – மோடியை சாடிய ராகுல்!
woman-in-an-auto-rickshaw-carried-the-body-of-her-corona-dead-husband-in-uttar-pradesh
ஆம்புலன்சுக்கு அதிக பணம் கேட்டதால்.. கணவரின் சடலத்தை ஆட்டோவில் எடுத்துச் சென்ற மனைவி
corona-infection-confirmed-8-lions-hyderabad-zoo
இந்தியாவில் முதன்முறையாக 8 சிங்கங்களுக்கு கொரோனா!
pinarayi-son-in-law-will-get-a-chance-in-kerala-ministry
மருமகனுக்கு அமைச்சர் பதவி கொடுக்கும் பினராயி விஜயன்?!
bihar-extends-lockdown-until-may-2021
பீகாரில் மே 15 வரை ஊரடங்கு நீட்டிப்பு.. மந்திரி நிதிஷ்குமார் அறிவிப்பு..
rahul-gandhi-says-to-put-lockdown-all-over-india
கொரோனாவை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அவசியம்.. ராகுல் காந்தி அறிவிக்கை..
dont-do-ct-scan-says-by-aiims-director
லேசான அறிகுறி இருந்தால் சி.டி ஸ்கேன் செய்ய தேவையில்லை.. எய்ம்ஸ் இயக்குனர் தகவல்..
sonu-sood-gets-critically-ill-covid-patient-airlifted
விமான ஆம்புலன்ஸ் அனுப்பி கொரோனா நோயாளியின் உயிரை மீட்ட சோனுசூட்!
Tag Clouds