பாஜகவில் சேர்ந்ததும் வேட்பாளரான சிந்தியா.. மந்திரியாகும் வாய்ப்பு

மத்தியப் பிரதேசத்தில் காங்கிரசிலிருந்து விலகி, பாஜகவில் சேர்ந்த ஜோதிராதித்ய சிந்தியாவுக்கு உடனடியாக ராஜ்யசபா தேர்தலில் சீட் தரப்பட்டது.

மத்தியப் பிரதேசத்தில் முதலமைச்சர் கமல்நாத் தலைமையில் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. குவாலியர் சிந்தியா மன்னர் பரம்பரையில் வந்த ஜோதிராதித்ய சிந்தியா, தனக்கு முதல்வர் பதவி கேட்டு காங்கிரஸ் தலைமைக்கு நெருக்கடி கொடுத்து வந்தார். அதன்பிறகு, அவர் மாநில காங்கிரஸ் தலைவர் பதவியை எதிர்பார்த்தார். ஆனால், கமல்நாத் அவரை பொருட்படுத்தவே இல்லை.
வரும் 26ம் தேதி ம.பி.யில் 3 ராஜ்யசபா எம்பி இடங்களுக்கான தேர்தல் நடைபெறவுள்ளது. இதற்கிடையே, கமல்நாத் ஆட்சியைக் கவிழ்க்கும் முயற்சியில் பாஜக களம் இறங்கியது. இதையடுத்து, காங்கிரஸ் அதிருப்தி தலைவர் ஜோதிராதித்ய சிந்தியா பிரதமர் மோடியையும், உள்துறை அமைச்சர் அமித்ஷாவையும் சந்தித்துப் பேசினார். அதன்பிறகு, காங்கிரசிலிருந்து விலகுவதாகச் சோனியாவுக்கு அனுப்பிய கடிதத்தை வெளியிட்டார். இதையடுத்து, பெங்களூருவில் தங்க வைக்கப்பட்டிருந்த 22 காங்கிரஸ் அதிருப்தி எம்.எல்.ஏ.க்களும் தங்கள் பதவியை ராஜினாமா செய்வதாகவும், காங்கிரசிலிருந்து விலகுவதாகவும் அறிவித்தனர்.

இதன் தொடர்ச்சியாக, பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா தலைமையில் அக்கட்சியில் ஜோதிராதித்ய சிந்தியா சேர்ந்தார். அவருக்கு உடனடியாக ராஜ்யசபா தேர்தலில் போட்டியிட சீட் தரப்பட்டது. மொத்தம் 55 இடங்களுக்கு நடைபெறும் ராஜ்யசபா தேர்தலுக்கான முதல் பட்டியலை பாஜக வெளியிட்டது. அதில் சிந்தியா பெயர் இடம் பெற்றது. மேலும், அவர் எம்.பி.யானதும் மத்திய அமைச்சர் ஆக்கப்படுவார் என்று பாஜக வட்டாரங்களில் பேசப்படுகிறது.

மற்ற வேட்பாளர்கள் வருமாறு:
அசாமில் முன்னாள் காங்கிரஸ் தலைவர் புவனேஸ்வர் கலிதா, பீகாரில் விவேக் தாக்குர், குஜராத்தில் அபய் பரத்வாஜ், ரமீலாபென், ஜார்கண்டில் தீபக் பிரகாஷ், மணிப்பூரில் லேசிம்மா, மகாராஷ்டிராவில் உதயன்ராஜே போஸ்லே, ராஜஸ்தானில் ராஜேந்திர கெலாட் ஆகியோரும் கூட்டணிக் கட்சிகளைச் சேர்ந்த மத்திய அமைச்சர் ராம்தாஸ் அதவாலே, பிஸ்வாஜித் ஆகியோரும் அறிவிக்கப்பட்டுள்ளனர்.

எங்களுடைய தமிழ் செய்திகளை உங்கள் மெயில் இன்பாக்சில் பெறுவதற்கு இங்கே உங்கள் மெயில் ஐடியை பதிவு செய்யவும் : Tamil news RSS

OR You can install Google News on Android or iOS, and then access our edition https://news.google.com/publications/CAAqBwgKMP_rkQsw3YOnAw?oc=3&ceid=IN:ta through the app.

Advertisement
மேலும் செய்திகள்
india-accounts-for-46-of-world-s-new-covid-19-cases-quarter-of-deaths
ஒட்டுமொத்த கொரோனா பாதிப்பில் 46% இந்தியாவில் பதிவாகியுள்ளது – உலக சுகாதார நிறுவனம்
covid-deaths-due-to-oxygen-shortage-no-less-than-genocide-says-allahabad-high-court
ஆக்ஸிஷஜன் இல்லாமல் இறப்பது இனப்படுகொலைக்கு ஒப்பானது – நீதிமன்றம் காட்டம்!
rahul-gandhi-slams-modi
ஆக்சிஜன் இல்லாமல் இறக்கிறார்கள் உங்களுக்கு வீடு கேக்குதா? – மோடியை சாடிய ராகுல்!
woman-in-an-auto-rickshaw-carried-the-body-of-her-corona-dead-husband-in-uttar-pradesh
ஆம்புலன்சுக்கு அதிக பணம் கேட்டதால்.. கணவரின் சடலத்தை ஆட்டோவில் எடுத்துச் சென்ற மனைவி
corona-infection-confirmed-8-lions-hyderabad-zoo
இந்தியாவில் முதன்முறையாக 8 சிங்கங்களுக்கு கொரோனா!
pinarayi-son-in-law-will-get-a-chance-in-kerala-ministry
மருமகனுக்கு அமைச்சர் பதவி கொடுக்கும் பினராயி விஜயன்?!
bihar-extends-lockdown-until-may-2021
பீகாரில் மே 15 வரை ஊரடங்கு நீட்டிப்பு.. மந்திரி நிதிஷ்குமார் அறிவிப்பு..
rahul-gandhi-says-to-put-lockdown-all-over-india
கொரோனாவை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அவசியம்.. ராகுல் காந்தி அறிவிக்கை..
dont-do-ct-scan-says-by-aiims-director
லேசான அறிகுறி இருந்தால் சி.டி ஸ்கேன் செய்ய தேவையில்லை.. எய்ம்ஸ் இயக்குனர் தகவல்..
sonu-sood-gets-critically-ill-covid-patient-airlifted
விமான ஆம்புலன்ஸ் அனுப்பி கொரோனா நோயாளியின் உயிரை மீட்ட சோனுசூட்!
Tag Clouds

READ MORE ABOUT :