நாக்பூர் மருத்துவமனையில் கொரோனா நோயாளிகள் 5 பேர் தப்பியோட்டம்..

நாக்பூரில் உள்ள மருத்துவமனையில் கொரோனா வைரஸ் தொற்று உள்ளதாகச் சந்தேகிக்கப்பட்ட 5 நோயாளிகள் தப்பியோடி விட்டனர். அவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

சீனாவிலிருந்து கொரோனா வைரஸ் நோய் இன்று உலகம் முழுவதும் 124 நாடுகளுக்கு பரவியுள்ளது. சீனாவில் மட்டும் 3,200 பேர் உயிரிழந்துள்ளனர். 80,815 பேர் நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவிலும் இந்த கொரோனா வைரஸ் பரவியிருக்கிறது. இது வரை 84 பேருக்கு வைரஸ் தொற்று உள்ளதாகக் கண்டறியப்பட்டு, தனி வார்டுகளில் வைத்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், கொரோனா தொற்று உள்ளதாக சந்தேகிக்கப்படும் நோயாளிகளையும் தனி வார்டுகளில் வைத்து, பரிசோதனை செய்து வருகின்றனர். மகாராஷ்டிரா மாநிலம், நாக்பூரில் மாயோ மருத்துவமனையில் கொரோனா தொற்று பாதிப்பு உள்ளதாகச் சந்தேகிக்கப்பட்ட 5 நோயாளிகள் பரிசோதனையில் இருந்தனர். அவர்களில் ஒருவருக்கு மட்டும் நோய் தொற்று இல்லை என்பது உறுதி செய்யப்பட்டிருந்தது.

இதற்கிடையே, இந்த 5 பேரும் நேற்றிரவு மருத்துவமனையிலிருந்து தப்பிச் சென்று விட்டனர். இது பற்றி அறிந்ததும் அவர்களை போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர். இது குறித்து, சப்-இன்ஸ்பெக்டர் சூரியவன்ஷி கூறுகையில், இது மிகவும் சிக்கலான விஷயம். நாங்கள் மருத்துவமனைக்குச் சென்று கண்காணித்து வந்தோம் திடீரென அவர்களைக் காணவில்லை. அவர்கள் உணவு வாங்கச் சென்றுள்ளதாகச் சொன்னார்கள். ஆனால் அவர்கள் திரும்பி வரவில்லை. அவர்களைத் தேடிப் பிடித்து மருத்துவமனைக்குக் கொண்டு வந்து சேர்ப்போம் என்றார்.
இதே போல், கேரளாவின் ஆழப்புழாவில் உள்ள ஒரு மருத்துவமனையிலிருந்து கொரோனா பாதிக்கப்பட்ட அமெரிக்கத் தம்பதி தப்பியோடி விட்டனர். அவர்களைக் கொச்சி விமான நிலையத்தில் அதிகாரிகள் கண்டுபிடித்து, மீண்டும் மருத்துவமனையில் தனி வார்டில் அடைத்தனர்.

எங்களுடைய தமிழ் செய்திகளை உங்கள் மெயில் இன்பாக்சில் பெறுவதற்கு இங்கே உங்கள் மெயில் ஐடியை பதிவு செய்யவும் : Tamil news RSS

OR You can install Google News on Android or iOS, and then access our edition https://news.google.com/publications/CAAqBwgKMP_rkQsw3YOnAw?oc=3&ceid=IN:ta through the app.

Advertisement
மேலும் செய்திகள்
india-accounts-for-46-of-world-s-new-covid-19-cases-quarter-of-deaths
ஒட்டுமொத்த கொரோனா பாதிப்பில் 46% இந்தியாவில் பதிவாகியுள்ளது – உலக சுகாதார நிறுவனம்
covid-deaths-due-to-oxygen-shortage-no-less-than-genocide-says-allahabad-high-court
ஆக்ஸிஷஜன் இல்லாமல் இறப்பது இனப்படுகொலைக்கு ஒப்பானது – நீதிமன்றம் காட்டம்!
rahul-gandhi-slams-modi
ஆக்சிஜன் இல்லாமல் இறக்கிறார்கள் உங்களுக்கு வீடு கேக்குதா? – மோடியை சாடிய ராகுல்!
woman-in-an-auto-rickshaw-carried-the-body-of-her-corona-dead-husband-in-uttar-pradesh
ஆம்புலன்சுக்கு அதிக பணம் கேட்டதால்.. கணவரின் சடலத்தை ஆட்டோவில் எடுத்துச் சென்ற மனைவி
corona-infection-confirmed-8-lions-hyderabad-zoo
இந்தியாவில் முதன்முறையாக 8 சிங்கங்களுக்கு கொரோனா!
pinarayi-son-in-law-will-get-a-chance-in-kerala-ministry
மருமகனுக்கு அமைச்சர் பதவி கொடுக்கும் பினராயி விஜயன்?!
bihar-extends-lockdown-until-may-2021
பீகாரில் மே 15 வரை ஊரடங்கு நீட்டிப்பு.. மந்திரி நிதிஷ்குமார் அறிவிப்பு..
rahul-gandhi-says-to-put-lockdown-all-over-india
கொரோனாவை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அவசியம்.. ராகுல் காந்தி அறிவிக்கை..
dont-do-ct-scan-says-by-aiims-director
லேசான அறிகுறி இருந்தால் சி.டி ஸ்கேன் செய்ய தேவையில்லை.. எய்ம்ஸ் இயக்குனர் தகவல்..
sonu-sood-gets-critically-ill-covid-patient-airlifted
விமான ஆம்புலன்ஸ் அனுப்பி கொரோனா நோயாளியின் உயிரை மீட்ட சோனுசூட்!
Tag Clouds

READ MORE ABOUT :