நிர்பயா குற்றவாளிகள் 4 பேரும் அதிகாலையில் தூக்கிலிடப்பட்டனர்..

நிர்பயா பலாத்கார வழக்கில் குற்றவாளிகள் 4 பேரும் இன்று அதிகாலையில் தூக்கிலிடப்பட்டனர். திகார் சிறையிலேயே தூக்குத் தண்டனை நிறைவேற்றப்பட்டது.

டெல்லியில் கடந்த 2012ம் ஆண்டு டிசம்பர் 16ம் தேதி ஒரு கொடூரமான சம்பவம் நடந்தது. துணை மருத்துவம் படித்துக் கொண்டிருந்த மாணவி ஒருவரை ஓடும் பஸ்சில் 6 பேர் பலாத்காரம் செய்து தூக்கி வீசிவிட்டுச் சென்றனர். அந்த பெண்ணுக்குச் சிங்கப்பூர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளித்தும் உயிரிழந்தார். அந்த பெண்ணின் அடையாளத்தை மறைத்து, நிர்பயா என்று பெயரிடப்பட்டு கொலை வழக்கு விசாரிக்கப்பட்டது.

டெல்லி போலீசார் புலன் விசாரணை நடத்தி, பலாத்காரம் செய்த 6 பேரையும் கைது செய்தனர். அவர்களில் ஒருவன் சிறையில் தற்கொலை செய்து கொண்டான். இன்னொருவன் சிறுவன் என்பதால் 3 ஆண்டு சிறார் பாதுகாப்பு இல்லத்தில் வைக்கப்பட்டு, பின்னர் விடுதலை செய்யப்பட்டான்.

அந்த பெண்ணின் அடையாளம் மறைக்கப்பட்டு, நிர்பயா என்று பெயரிடப்பட்டு வழக்கு விசாரணை நடத்தப்பட்டது. வழக்கில் மற்ற குற்றவாளிகள் முகேஷ் சிங், வினய் சா்மா, அக்சய்குமார், பவன் குப்தா ஆகியோருக்கு மரண தண்டனை விதித்து டெல்லி நீதிமன்றம் தீர்ப்பளித்தது. அந்த தீர்ப்பை டெல்லி ஐகோர்ட் மற்றும் சுப்ரீம் கோர்ட் உறுதி செய்தன.

இதைத் தொடர்ந்து, தூக்குத் தண்டனை குற்றவாளிகள் தொடர்ந்து பல்வேறு மனுக்களை டெல்லி ஐகோர்ட் மற்றும் சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்து வந்தனர். இந்த மனுக்கள் அனைத்தும் நிராகரிக்கப்பட்டன. கடைசியாக, குற்றவாளி பவன்குப்தா தாக்கல் செய்த சீராய்வு மனுவை சுப்ரீம் கோர்ட் நேற்று (மார்ச்19) தள்ளுபடி செய்தது. அதே போல், பவன்குப்தா, அக்சய்குமார் தாக்கல் செய்த 2வது கருணை மனுக்களையும் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் நிராகரித்தார்.

இதன்பின், டெல்லி விசாரணை நீதிமன்றம், டெல்லி ஐகோர்ட், சுப்ரீம் கோர்ட் என மூவரின் சார்பில் வரிசையாக மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. கடைசியாக, இன்று அதிகாலை 2.30 மணிக்கு சுப்ரீம் கோர்ட்டும் மனுக்களை நிராகரித்தது.
இதையடுத்து, திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள முகேஷ்சிங், வினய்சர்மா, பவன்குப்தா, அக்சய்குமார் ஆகியோர் இன்று காலை 5.30 மணிக்குத் தூக்கிலிடப்பட்டனர். இது குறித்து டிஜிபி சந்தீப் கோயல் கூறுகையில், திகார் சிறை எண்-3ல் காலை 5.30 மணிக்கு 4 பேருக்கும் ஒரே சமயத்தில் தூக்குத் தண்டனை நிறைவேற்றப்பட்டது. உடனடியாக மருத்துவர்கள் உடல்களைப் பரிசோதித்து, அவர்கள் இறந்ததை உறுதி செய்தனர் என்றார். இறந்தவர்களின் உடல்களை வாங்குவதற்கு அவர்களின் உறவினர்கள் யாரும் வரவில்லை. இந்நிலையில், இறந்தவர்களின் உடல்களை தீனதயாள் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்குப் பிரேதப் பரிசோதனை செய்யப்பட்டு, மின் மயானத்தில் தகனம் செய்யப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

பலாத்கார குற்றவாளிகளுக்குக் குற்றம் நடந்து 2,650 நாள்களுக்குப் பிறகு தூக்குத் தண்டனை நிறைவேற்றப்பட்டிருக்கிறது. அதிகாலையிலேயே திகார் சிறைக்கு வெளியே ஏராளமான மக்கள் திரண்டிருந்தனர். குற்றவாளிகளுக்குத் தூக்கு நிறைவேற்றப்பட்டதும், மக்கள் கைகளைத் தட்டி வரவேற்பு தெரிவித்தனர். மகளிர் அமைப்பினரும், இது, வருங்காலத்தில் பாலியல் குற்றங்களில் ஈடுபடுபவர்களுக்கு கடும் எச்சரிக்கையை ஏற்படுத்தும். பெண்களுக்குப் பாதுகாப்பு அளிக்கும் என்று தெரிவித்தனர்.

நிர்பயாவின் தாய் ஆஷாதேவி கூறுகையில், நீண்ட சட்டப் போராட்டத்திற்குப் பின்னர், நிர்பயாவுக்கு நீதி கிடைத்துள்ளது. இது அனைத்து பெண்களுக்குமான நீதியாகும் என்றார்.

எங்களுடைய தமிழ் செய்திகளை உங்கள் மெயில் இன்பாக்சில் பெறுவதற்கு இங்கே உங்கள் மெயில் ஐடியை பதிவு செய்யவும் : Tamil news RSS

OR You can install Google News on Android or iOS, and then access our edition https://news.google.com/publications/CAAqBwgKMP_rkQsw3YOnAw?oc=3&ceid=IN:ta through the app.

Advertisement
மேலும் செய்திகள்
india-accounts-for-46-of-world-s-new-covid-19-cases-quarter-of-deaths
ஒட்டுமொத்த கொரோனா பாதிப்பில் 46% இந்தியாவில் பதிவாகியுள்ளது – உலக சுகாதார நிறுவனம்
covid-deaths-due-to-oxygen-shortage-no-less-than-genocide-says-allahabad-high-court
ஆக்ஸிஷஜன் இல்லாமல் இறப்பது இனப்படுகொலைக்கு ஒப்பானது – நீதிமன்றம் காட்டம்!
rahul-gandhi-slams-modi
ஆக்சிஜன் இல்லாமல் இறக்கிறார்கள் உங்களுக்கு வீடு கேக்குதா? – மோடியை சாடிய ராகுல்!
woman-in-an-auto-rickshaw-carried-the-body-of-her-corona-dead-husband-in-uttar-pradesh
ஆம்புலன்சுக்கு அதிக பணம் கேட்டதால்.. கணவரின் சடலத்தை ஆட்டோவில் எடுத்துச் சென்ற மனைவி
corona-infection-confirmed-8-lions-hyderabad-zoo
இந்தியாவில் முதன்முறையாக 8 சிங்கங்களுக்கு கொரோனா!
pinarayi-son-in-law-will-get-a-chance-in-kerala-ministry
மருமகனுக்கு அமைச்சர் பதவி கொடுக்கும் பினராயி விஜயன்?!
bihar-extends-lockdown-until-may-2021
பீகாரில் மே 15 வரை ஊரடங்கு நீட்டிப்பு.. மந்திரி நிதிஷ்குமார் அறிவிப்பு..
rahul-gandhi-says-to-put-lockdown-all-over-india
கொரோனாவை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அவசியம்.. ராகுல் காந்தி அறிவிக்கை..
dont-do-ct-scan-says-by-aiims-director
லேசான அறிகுறி இருந்தால் சி.டி ஸ்கேன் செய்ய தேவையில்லை.. எய்ம்ஸ் இயக்குனர் தகவல்..
sonu-sood-gets-critically-ill-covid-patient-airlifted
விமான ஆம்புலன்ஸ் அனுப்பி கொரோனா நோயாளியின் உயிரை மீட்ட சோனுசூட்!
Tag Clouds

READ MORE ABOUT :