கொரோனா ஊரடங்கு.. 80 கோடி மக்களுக்கு 5 கிலோ இலவச அரிசி..

நாட்டில் 80 கோடி ஏழை மக்களுக்கு இலவசமாக 5 கிலோ அரிசி, கோதுமை வழங்கப்படும் என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.


கொரோனா வைரஸ் பரவாமல் தடுப்பதற்காக இந்தியாவில் 21 நாள் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால், பல லட்சம் தொழிலாளர்கள் வேலையிழந்து தவிக்கின்றனர். இவர்களுக்கு பொருளாதார உதவிகள் அளிப்பது குறித்து, டெல்லியில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று சில அறிவிப்புகளை வெளியிட்டார்.
அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

நாட்டில் யாரும் பசியோடு இருக்கக் கூடாது என்பதில் மத்திய அரசு உறுதியாக உள்ளது. ஊரடங்கு உத்தரவால் நேரடியாக பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசு உதவி செய்யும். இதற்காக 1.70 லட்சம் கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அன்னயோஜனா திட்டத்தின் கீழ் சுமார் 80 கோடி ஏழை மக்களுக்கு 5 கிலோ அரிசி, கோதுமை குறைந்த விலையில் வழங்கப்படுகிறது. இத்துடன் இலவசமாக தலா 5 கிலோ கோதுமை, அரிசி வழங்கப்படும். இத்துடன் 1 கிலோ பருப்பும் இலவசமாக வழங்கப்படும். மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு வழங்கப்படும் வட்டியில்லா கடன்தொகை இரட்டிப்பாக்கி, ரூ.20 லட்சமாக வழங்கப்படும்.

மேலும், 8 லட்சத்து 69 ஆயிரம் விவசாயிகளுக்கு நேரடி பணபரிவர்த்தனை மூலம் ஏப்ரல் முதல் வாரத்தில் ரூ.2 ஆயிரம் உதவி வழங்கப்படும். அதே போல், முதியோர் ஓய்வூதியதாரர்களுக்கு 2 தவணகைளில் கூடுதலாக ரூ.1000 வழங்கப்படும். ஏழைகளுக்கு 3 மாதங்களுக்கு இலவசமாக காஸ் சிலிண்டர் வழங்கப்படும்.நூறு ஊழியர்களுக்கு குறைவாக உள்ள கம்பெனிகளில் பணியாற்றுவோருக்கான தொழிலாளர் வைப்பு நிதி சந்தா(பி.எப்)வில் கம்பெனி மற்றும் ஊழியரின் பங்கை மத்திய அரசே 3 மாதங்களுக்கு செலுத்தும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

எங்களுடைய தமிழ் செய்திகளை உங்கள் மெயில் இன்பாக்சில் பெறுவதற்கு இங்கே உங்கள் மெயில் ஐடியை பதிவு செய்யவும் : Tamil news RSS

OR You can install Google News on Android or iOS, and then access our edition https://news.google.com/publications/CAAqBwgKMP_rkQsw3YOnAw?oc=3&ceid=IN:ta through the app.

Advertisement
மேலும் செய்திகள்
india-accounts-for-46-of-world-s-new-covid-19-cases-quarter-of-deaths
ஒட்டுமொத்த கொரோனா பாதிப்பில் 46% இந்தியாவில் பதிவாகியுள்ளது – உலக சுகாதார நிறுவனம்
covid-deaths-due-to-oxygen-shortage-no-less-than-genocide-says-allahabad-high-court
ஆக்ஸிஷஜன் இல்லாமல் இறப்பது இனப்படுகொலைக்கு ஒப்பானது – நீதிமன்றம் காட்டம்!
rahul-gandhi-slams-modi
ஆக்சிஜன் இல்லாமல் இறக்கிறார்கள் உங்களுக்கு வீடு கேக்குதா? – மோடியை சாடிய ராகுல்!
woman-in-an-auto-rickshaw-carried-the-body-of-her-corona-dead-husband-in-uttar-pradesh
ஆம்புலன்சுக்கு அதிக பணம் கேட்டதால்.. கணவரின் சடலத்தை ஆட்டோவில் எடுத்துச் சென்ற மனைவி
corona-infection-confirmed-8-lions-hyderabad-zoo
இந்தியாவில் முதன்முறையாக 8 சிங்கங்களுக்கு கொரோனா!
pinarayi-son-in-law-will-get-a-chance-in-kerala-ministry
மருமகனுக்கு அமைச்சர் பதவி கொடுக்கும் பினராயி விஜயன்?!
bihar-extends-lockdown-until-may-2021
பீகாரில் மே 15 வரை ஊரடங்கு நீட்டிப்பு.. மந்திரி நிதிஷ்குமார் அறிவிப்பு..
rahul-gandhi-says-to-put-lockdown-all-over-india
கொரோனாவை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அவசியம்.. ராகுல் காந்தி அறிவிக்கை..
dont-do-ct-scan-says-by-aiims-director
லேசான அறிகுறி இருந்தால் சி.டி ஸ்கேன் செய்ய தேவையில்லை.. எய்ம்ஸ் இயக்குனர் தகவல்..
sonu-sood-gets-critically-ill-covid-patient-airlifted
விமான ஆம்புலன்ஸ் அனுப்பி கொரோனா நோயாளியின் உயிரை மீட்ட சோனுசூட்!
Tag Clouds