கொரோனா பாதிப்பு.. படேல் சிலையை விற்க ஓ.எல்.எக்ஸ்.சில் விளம்பரம்.. குஜராத் போலீசார் வழக்கு...

கொரோனா தடுப்புக்காக மருத்துவமனை கட்டவும், மருத்துவக் கருவிகள் வாங்குவதற்கும் பணம் தேவை என்று கூறி, படேல் சிலையை ரூ.30 ஆயிரம் கோடிக்கு விற்பதாக ஓ.எல்.எக்ஸ்.சில் விளம்பரம் செய்யப்பட்டிருக்கிறது. இது தொடர்பாக, குஜராத் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.


குஜராத்தில் கேவடியா பகுதியில் நர்மதா ஆற்றங்கரையில் சர்தார் வல்லபாய் படேல் சிலை உள்ளது. உலகிலேயே மிக உயரமான இந்த சிலையைக் கடந்த 2018ம் ஆண்டு பிரதமர் மோடி திறந்து வைத்தார். இந்த சிலையைக் காண்பதற்குத் தினமும் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வருகின்றனர். தற்போது உலகம் முழுவதும் கொரோனா பரவியிருக்கிறது. இந்தியாவில் 4067 பேருக்கு இந்நோய் பரவியுள்ள நிலையில், நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கொரோனா தொற்றைக் கண்டறிய போதிய அளவில் மருத்துவ உபகரணங்களும், மருத்துவமனை வசதிகளும் இல்லை என்று பேசப்பட்டு வருகிறது.


இந்நிலையில், குஜராத்தில் ஒருவர் ஓ.எல்.எக்ஸ் ஆன்லைன் விற்பனை தளத்தில் ஒரு விளம்பரம் செய்திருக்கிறார். அதில், கொரோனா சோதனைக்கான மருத்துவக் கருவிகள் வாங்குவதற்கும், மருத்துவமனைகள் கட்டுவதற்கும் பணம் தேவைப்படுகிறது என்றும், இதனால் ரூ.30 ஆயிரம் கோடிக்கு படேல் சிலை விற்கப்படுகிறது என்றும் கூறப்பட்டிருக்கிறது. இது பற்றி ஒரு பத்திரிகையில் செய்தி வெளியானது.இதையடுத்து, குஜராத் போலீசார் ஒரு எப்.ஐ.ஆர் பதிவு செய்துள்ளனர். இ.பி.கோ, தகவல் தொழில்நுட்பச் சட்டம் மற்றும் தொற்றுநோய் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, குற்றவாளியை போலீசார் தேடி வருகின்றனர்.

எங்களுடைய தமிழ் செய்திகளை உங்கள் மெயில் இன்பாக்சில் பெறுவதற்கு இங்கே உங்கள் மெயில் ஐடியை பதிவு செய்யவும் : Tamil news RSS

OR You can install Google News on Android or iOS, and then access our edition https://news.google.com/publications/CAAqBwgKMP_rkQsw3YOnAw?oc=3&ceid=IN:ta through the app.

Advertisement
மேலும் செய்திகள்
india-accounts-for-46-of-world-s-new-covid-19-cases-quarter-of-deaths
ஒட்டுமொத்த கொரோனா பாதிப்பில் 46% இந்தியாவில் பதிவாகியுள்ளது – உலக சுகாதார நிறுவனம்
covid-deaths-due-to-oxygen-shortage-no-less-than-genocide-says-allahabad-high-court
ஆக்ஸிஷஜன் இல்லாமல் இறப்பது இனப்படுகொலைக்கு ஒப்பானது – நீதிமன்றம் காட்டம்!
rahul-gandhi-slams-modi
ஆக்சிஜன் இல்லாமல் இறக்கிறார்கள் உங்களுக்கு வீடு கேக்குதா? – மோடியை சாடிய ராகுல்!
woman-in-an-auto-rickshaw-carried-the-body-of-her-corona-dead-husband-in-uttar-pradesh
ஆம்புலன்சுக்கு அதிக பணம் கேட்டதால்.. கணவரின் சடலத்தை ஆட்டோவில் எடுத்துச் சென்ற மனைவி
corona-infection-confirmed-8-lions-hyderabad-zoo
இந்தியாவில் முதன்முறையாக 8 சிங்கங்களுக்கு கொரோனா!
pinarayi-son-in-law-will-get-a-chance-in-kerala-ministry
மருமகனுக்கு அமைச்சர் பதவி கொடுக்கும் பினராயி விஜயன்?!
bihar-extends-lockdown-until-may-2021
பீகாரில் மே 15 வரை ஊரடங்கு நீட்டிப்பு.. மந்திரி நிதிஷ்குமார் அறிவிப்பு..
rahul-gandhi-says-to-put-lockdown-all-over-india
கொரோனாவை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அவசியம்.. ராகுல் காந்தி அறிவிக்கை..
dont-do-ct-scan-says-by-aiims-director
லேசான அறிகுறி இருந்தால் சி.டி ஸ்கேன் செய்ய தேவையில்லை.. எய்ம்ஸ் இயக்குனர் தகவல்..
sonu-sood-gets-critically-ill-covid-patient-airlifted
விமான ஆம்புலன்ஸ் அனுப்பி கொரோனா நோயாளியின் உயிரை மீட்ட சோனுசூட்!
Tag Clouds