கொரோனா பரிசோதனைக்கு ஒரு லட்சம் கருவிகள்.. முதல்வர் பழனிசாமி தகவல்

கொரோனா வைரஸ் இருக்கிறதா என 30 நிமிடத்தில் பரிசோதனை செய்வதற்கு உதவும் ஒரு லட்சம் கருவிகள்(ரேபிட் டெஸ்டிங் கிட்ஸ்) விரைவில் வந்து சேரும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.தமிழகத்தில் இது வரை 584 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டிருக்கிறது. 5 பேர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில், ஊரடங்கு உள்ளிட்ட கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து மாவட்டக் கலெக்டர்களுடன் வீடியோ கான்பரன்ஸ் மூலம் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று ஆலோசனை நடத்தினார்.


இதைத் தொடர்ந்து அவர் செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:இந்தியாவில் கொரோனாவின் வீரியம் படிப்படியாக அதிகரிப்பதால், கொரோனா தடுப்புப் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. இது வரை விமான நிலையங்களில் 2 லட்சத்து 10,538 பயணிகள் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். தமிழகத்தில் மேலும் 21 இடங்களில் பரிசோதனை மேற்கொள்ள அனுமதி கோரப்பட்டுள்ளது. தற்போது தமிழகத்தில் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் 3,371 வென்டிலேட்டர்கள் உள்ளன. கொரோனா பரிசோதனையை அதிகப்படுத்தும் பொருட்டு, 30 நிமிடங்களில் பரிசோதனை செய்யக் கூடிய ஒரு லட்சம் (ரேபிட் டெஸ்ட் கிட்ஸ்) கருவிகள் வாங்குவதற்கு ஆர்டர் கொடுக்கப்பட்டுள்ளது. விரைவில் இவை வந்து சேரும். இவற்றின் மூலம், அதிகமானோருக்கு கொரோனா அறிகுறி உள்ளதா என விரைந்து பரிசோதனை மேற்கொள்ளப்படும்.

தமிழகத்தில் மொத்தம் 38 மையங்கள் மூலம் பரிசோதனை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். சென்னையில் நடமாடும் காய்கறிக் கடைகள் திட்டத்தைச் செயல்படுத்தவுள்ளோம். அத்தியாவசியப் பொருட்களை முடிந்த அளவு வீடுகளுக்கே சென்று வழங்க மாவட்ட நிர்வாகங்கள் நடவடிக்கை எடுக்கும்.
இவ்வாறு எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.

எங்களுடைய தமிழ் செய்திகளை உங்கள் மெயில் இன்பாக்சில் பெறுவதற்கு இங்கே உங்கள் மெயில் ஐடியை பதிவு செய்யவும் : Tamil news RSS

OR You can install Google News on Android or iOS, and then access our edition https://news.google.com/publications/CAAqBwgKMP_rkQsw3YOnAw?oc=3&ceid=IN:ta through the app.

Advertisement
மேலும் செய்திகள்
prime-minister-light-house-plan-chennai
பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்
singarach-chennai-2-0-football-ground-laid-foundation
“சிங்காரச் சென்னை 2.0” செயற்கை புல் கால்பந்து மைதானம்
new-restriction-imposed-from-tomorrow
இதெல்லாம் நாளை இருக்காது தெரியுமா? – புதிய கட்டுப்பாடுகள் என்ன?
stalin-request-to-private-hospitals
மக்களை காக்க தனியார் மருத்துவமனைகள் முன்வரவேண்டும் – ஸ்டாலின் வலியுறுத்தல்
high-court-judge-advice-to-dmk
ஏன் இப்படி செய்கிறார்கள்? - திமுகவினருக்கு அறிவுறுத்திய சென்னை உயர்நீதிமன்றம நீதிபதி
local-trains-doesn-t-function-from-tomorrow
புறநகர் ரயில்களில் அனுமதியில்லை – தெற்கு ரயில்வே அறிவிப்பு!
eps-and-ops-fight-for-opposition-assembly-leader-post
எதிர்கட்சித்தலைவர் யார் – அதிமுகவில் முட்டி மோதும் ஓ.பி.எஸ் – இ.பி.எஸ்!
the-boy-who-spent-rs-12-lakh-on-an-online-game
ஒரு வருடத்தில் அப்பாவின் ரூ.12 லட்சம் செலவு – போலீசில் சிக்கிய சிறுவன்… என்ன நடந்தது தெரியுமா…?
stalin-going-to-take-oath-on-friday
ஆட்சி அமைக்க உரிமை கோரினார் ஸ்டாலின் – நாளை மறுநாள் பதவி ஏற்பு!
elder-brother-who-killed-younger-brother-in-family-dispute
தம்பியை கொன்ற அண்ணன் – அதிர்ச்சி காரணம்…!
Tag Clouds