விஜய் சேதுபதியுடன் இணைய வழி விடுமோ காலம்.. இயக்குனர் சேரன் உருக்கம்..

When Will Start Vijay Sethupathi-Cherans film

by Chandru, Apr 6, 2020, 15:38 PM IST

ஆட்டோகிராப். வெற்றிக் கொடி கட்டு, பொற்காலம், தவமாய் தவமிருந்து என மறக்க முடியாத படங்களை இயக்கி அளித்த இயக்குனர் சேரன் கடைசியாகத் திரு மணம் என்ற படத்தை இயக்கினார். அவர் விஜய்சேதுபதியுடன் ஒரு படத்தில் இணைய இருப்பதாகத் தெரிவித்திருந்தார். ஆனால் விஜய்சேதுபதி தொடர்ச்சி யாக படங்களில் நடித்து வருவதால் சேரன் படத்துக்கு கால்ஷீட் ஒதுக்க முடியாத சூழல் உள்ளது இது குறித்து உருக்கமான பதிவை வெளியிட்டிருக்கிறார் சேரன்.


அதில், 'தவமாய் தவமிருந்து போன்ற ஒரு படைப்பாகத் தான் விஜய்சேதுபதி அவர்களோடு இணையும் படத்துக்காக முடித்து வைத்திருக்கும் திரைக் கதை. ஏனோ செய்து முடிக்க முடியாமல் தள்ளிக் கொண்டே போகிறது.. அண்ணன்களும் தங்கைகளும் கண்ணுக்குள் வைத்துப் பாதுகாக்கப்போகும் படம். வழி விடுமா காலம்' என்று குறிப்பிட்டுள்ளார்.

You'r reading விஜய் சேதுபதியுடன் இணைய வழி விடுமோ காலம்.. இயக்குனர் சேரன் உருக்கம்.. Originally posted on The Subeditor Tamil

More Cinema News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை