ஊரடங்கு மீண்டும் நீட்டிப்பு.. மே 18க்கு முன் அறிவிப்பு.. பிரதமர் மோடி பேச்சு..

கொரோனா ஊரடங்கு மீண்டும் நீட்டிக்கப்படும் என்றும், 4வது ஊரடங்கு மாறுபட்டதாக இருக்கும். அதன் புதிய விதிகள் குறித்து மே 18ம் தேதிக்கு முன்பு அறிவிக்கப்படும் என்றும் பிரதமர் மோடி தெரிவித்தார்.கொரோனா பரவாமல் தடுப்பதற்காக நாடு முழுவதும் கடந்த மார்ச் 24ம் தேதி பொது முடக்கம் அறிவிக்கப்பட்டது. முதலில் ஏப்.14ம் தேதி வரையும், பின் மே3ம் தேதி வரையும், தற்போது மே 17 வரையும் நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், பிரதமர் மோடி நேற்று முன் தினம்(மே11) மாநில முதல்வர்களுடன் வீடியோ கான்பரன்சில் நீண்ட நேரம் விவாதித்தார்.


இதன் தொடர்ச்சியாக, நேற்றிரவு 8 மணியளவில் அவர் தொலைக்காட்சியில் தோன்றி மக்களிடையே உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:ஒரு வைரஸ் நோய் உலகத்தையே உருக்குலைத்து விட்டது. உலக வரலாற்றில் இது வரை இப்படி ஒரு பொது முடக்கத்தை நாம் சந்தித்ததே இல்லை. கொரோனா வைரஸ் நோயுடன் கடந்த 4 மாதங்களாக உலகமே போராடி வருகிறது. 4 மாதத்தில் 30 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் இந்நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த வைரஸ் நமக்குச் சுயச்சார்பை கற்றுத் தந்துள்ளது. நாம் வெளிநாடுகளை நம்பாமல் சுயமாகச் செயல்பட வேண்டிய அவசியத்தை உணர வைத்திருக்கிறது. ஆரம்பத்தில் மருத்துவப் பாதுகாப்பு கருவிகளையும்(பி.பி.இ.), என்.95 முகக் கவசங்களையும் பெற முடியாமல் இருந்தோம். ஆனால், இப்போது நாமே 2 லட்சம் மருத்துவப் பாதுகாப்பு கருவிகளையும், 2 லட்சம் என்.95 கவசங்களையும் உற்பத்தி செய்யும் நிலைக்கு வந்துவிட்டோம். அது மட்டுமல்ல, உயிர்காக்கும் மருந்துகளை உலகத்திற்கு வழங்கும் வகையில் இந்தியா இருக்கிறது.

கொரோனாவை எதிர்த்து நாம் போராடி வரும் இந்த சூழலில், பொது முடக்கத்தை நீட்டிக்க வேண்டியிருக்கிறது. இது தொடர்பாக மாநில அரசுகளின் ஆலோசனைகளைப் பெற்று, மக்களுக்கு ஊரடங்கு நீட்டிப்பின் புதிய விதிகளைத் தெரிவிப்போம். இந்த ஊரடங்கு மாறுபட்டதாக இருக்கும். இதன் புதிய கட்டுப்பாடுகள் குறித்து மே 18ம் தேதிக்கு முன்பாக தெரிவிக்கப்படும்.இவ்வாறு பிரதமர் மோடி கூறினார்.

எங்களுடைய தமிழ் செய்திகளை உங்கள் மெயில் இன்பாக்சில் பெறுவதற்கு இங்கே உங்கள் மெயில் ஐடியை பதிவு செய்யவும் : Tamil news RSS

OR You can install Google News on Android or iOS, and then access our edition https://news.google.com/publications/CAAqBwgKMP_rkQsw3YOnAw?oc=3&ceid=IN:ta through the app.

Advertisement
மேலும் செய்திகள்
india-accounts-for-46-of-world-s-new-covid-19-cases-quarter-of-deaths
ஒட்டுமொத்த கொரோனா பாதிப்பில் 46% இந்தியாவில் பதிவாகியுள்ளது – உலக சுகாதார நிறுவனம்
covid-deaths-due-to-oxygen-shortage-no-less-than-genocide-says-allahabad-high-court
ஆக்ஸிஷஜன் இல்லாமல் இறப்பது இனப்படுகொலைக்கு ஒப்பானது – நீதிமன்றம் காட்டம்!
rahul-gandhi-slams-modi
ஆக்சிஜன் இல்லாமல் இறக்கிறார்கள் உங்களுக்கு வீடு கேக்குதா? – மோடியை சாடிய ராகுல்!
woman-in-an-auto-rickshaw-carried-the-body-of-her-corona-dead-husband-in-uttar-pradesh
ஆம்புலன்சுக்கு அதிக பணம் கேட்டதால்.. கணவரின் சடலத்தை ஆட்டோவில் எடுத்துச் சென்ற மனைவி
corona-infection-confirmed-8-lions-hyderabad-zoo
இந்தியாவில் முதன்முறையாக 8 சிங்கங்களுக்கு கொரோனா!
pinarayi-son-in-law-will-get-a-chance-in-kerala-ministry
மருமகனுக்கு அமைச்சர் பதவி கொடுக்கும் பினராயி விஜயன்?!
bihar-extends-lockdown-until-may-2021
பீகாரில் மே 15 வரை ஊரடங்கு நீட்டிப்பு.. மந்திரி நிதிஷ்குமார் அறிவிப்பு..
rahul-gandhi-says-to-put-lockdown-all-over-india
கொரோனாவை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அவசியம்.. ராகுல் காந்தி அறிவிக்கை..
dont-do-ct-scan-says-by-aiims-director
லேசான அறிகுறி இருந்தால் சி.டி ஸ்கேன் செய்ய தேவையில்லை.. எய்ம்ஸ் இயக்குனர் தகவல்..
sonu-sood-gets-critically-ill-covid-patient-airlifted
விமான ஆம்புலன்ஸ் அனுப்பி கொரோனா நோயாளியின் உயிரை மீட்ட சோனுசூட்!
Tag Clouds