தொழிலாளர்கள் சிறப்பு ரயில்... எதிர்க்கட்சி மாநிலங்கள் மீது பியூஸ் கோயல் குற்றச்சாட்டு..

மேற்கு வங்கம், ராஜஸ்தான், சட்டீஸ்கர், ஜார்கண்ட் மாநில அரசுகள், தங்கள் மாநில தொழிலாளர்களைத் திருப்பி அழைப்பதற்குச் சிறப்பு ரயில்களை அனுமதிக்க மறுக்கின்றன என்று ரயில்வே அமைச்சர் பியூஸ் கோயல் குற்றம்சாட்டினார்.நாடு முழுவதும் கொரோனா பரவாமல் தடுப்பதற்காகப் பிரதமர் மோடி, கடந்த மார்ச் 24ம் தேதியன்று நள்ளிரவு முதல் பொது ஊரடங்கை அறிவித்தார். திடீரென ஊரடங்கு அறிவித்ததால், பஸ், ரயில் உள்ளிட்ட எந்த போக்குவரத்து வசதியும் இல்லாமல் புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் அவதியடைந்தனர். வேலையும் இழந்து சாப்பிடவும் வழியில்லாமல் லட்சக்கணக்கான தொழிலாளர்கள், 1000 கி.மீ. தூரத்திற்கு நடக்கத் தொடங்கினர்.


இதனால், மத்திய அரசின் மீது கடும் விமர்சனங்கள் எழுந்தன. இதையடுத்து தொழிலாளர்கள் தங்கள் சொந்த மாநிலங்களுக்குத் திரும்புவதற்குச் சிறப்பு ரயில்களை விட மத்திய அரசு முடிவெடுத்தது. ஆனால், ஒரே நாளில் பல ஆயிரம் பேர் தங்கள் மாநிலங்களுக்குத் திரும்பினால், அவர்கள் அனைவரையும் கொரோனா சோதனைக்கு உட்படுத்தி, தனிமையில் வைத்து சோறு போடுவது கஷ்டம் என்று பல மாநில அரசுகள், அந்த ரயில்களை மொத்தமாக அனுமதிக்க மறுத்து வருகின்றன.

இந்நிலையில், மத்திய ரயில்வே அமைச்சர் பியூஸ் கோயல் கூறியதாவது:
மேற்கு வங்கம், ராஜஸ்தான், சட்டீஸ்கர், ஜார்கண்ட் ஆகிய மாநில அரசுகள், தங்கள் மாநிலத் தொழிலாளர்களைச் சொந்த ஊருக்கு அனுப்புவதற்கான சிறப்பு ரயில்களை அனுமதிக்க மறுக்கின்றன. இது மிகவும் கவலை அளிக்கிறது.மேற்கு வங்க அரசு 2 ரயில்களை மட்டுமே அனுமதித்தது. அதன்பிறகு, உள்துறை அமைச்சர் அமித்ஷா கடிதம் எழுதிய பிறகு மேலும் 8 ரயில்களை அனுமதிப்பதாக மம்தா பானர்ஜி அரசு அறிவித்தது. ஆனால், இது வரை 5 ரயில்களை மட்டுமே அனுமதித்துள்ளது.

மேற்குவங்க அரசு, ஒரு மாதத்தில் 105 ரயில்களை அனுமதிப்பதற்குப் பதிலாக ஒரே நாளில் 105 ரயில்களை அனுமதிக்க வேண்டும். மாநில அரசுகள் அனைத்து சிறப்பு ரயில்களையும் உடனடியாக இயக்க அனுமதிக்க வேண்டும்.
இவ்வாறு பியூஸ் கோயல் கூறினார்.

எங்களுடைய தமிழ் செய்திகளை உங்கள் மெயில் இன்பாக்சில் பெறுவதற்கு இங்கே உங்கள் மெயில் ஐடியை பதிவு செய்யவும் : Tamil news RSS

OR You can install Google News on Android or iOS, and then access our edition https://news.google.com/publications/CAAqBwgKMP_rkQsw3YOnAw?oc=3&ceid=IN:ta through the app.

Advertisement
மேலும் செய்திகள்
india-accounts-for-46-of-world-s-new-covid-19-cases-quarter-of-deaths
ஒட்டுமொத்த கொரோனா பாதிப்பில் 46% இந்தியாவில் பதிவாகியுள்ளது – உலக சுகாதார நிறுவனம்
covid-deaths-due-to-oxygen-shortage-no-less-than-genocide-says-allahabad-high-court
ஆக்ஸிஷஜன் இல்லாமல் இறப்பது இனப்படுகொலைக்கு ஒப்பானது – நீதிமன்றம் காட்டம்!
rahul-gandhi-slams-modi
ஆக்சிஜன் இல்லாமல் இறக்கிறார்கள் உங்களுக்கு வீடு கேக்குதா? – மோடியை சாடிய ராகுல்!
woman-in-an-auto-rickshaw-carried-the-body-of-her-corona-dead-husband-in-uttar-pradesh
ஆம்புலன்சுக்கு அதிக பணம் கேட்டதால்.. கணவரின் சடலத்தை ஆட்டோவில் எடுத்துச் சென்ற மனைவி
corona-infection-confirmed-8-lions-hyderabad-zoo
இந்தியாவில் முதன்முறையாக 8 சிங்கங்களுக்கு கொரோனா!
pinarayi-son-in-law-will-get-a-chance-in-kerala-ministry
மருமகனுக்கு அமைச்சர் பதவி கொடுக்கும் பினராயி விஜயன்?!
bihar-extends-lockdown-until-may-2021
பீகாரில் மே 15 வரை ஊரடங்கு நீட்டிப்பு.. மந்திரி நிதிஷ்குமார் அறிவிப்பு..
rahul-gandhi-says-to-put-lockdown-all-over-india
கொரோனாவை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அவசியம்.. ராகுல் காந்தி அறிவிக்கை..
dont-do-ct-scan-says-by-aiims-director
லேசான அறிகுறி இருந்தால் சி.டி ஸ்கேன் செய்ய தேவையில்லை.. எய்ம்ஸ் இயக்குனர் தகவல்..
sonu-sood-gets-critically-ill-covid-patient-airlifted
விமான ஆம்புலன்ஸ் அனுப்பி கொரோனா நோயாளியின் உயிரை மீட்ட சோனுசூட்!
Tag Clouds