மகாராஷ்டிராவில் 67 ஆயிரம் பேருக்கு கொரோனா பாதிப்பு.. பலி 2179 ஆக உயர்வு..

Maharashtra records 2,487 new Covid-19 cases, state tally at 67,655

by எஸ். எம். கணபதி, Jun 1, 2020, 09:30 AM IST

நாட்டிலேயே அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் கொரோனா பாதிப்பு 67 ஆயிரம் பேரைத் தாண்டியது. இந்தியாவில் இது வரை ஒரு லட்சத்து 85 ஆயிரம் பேருக்கு மேல் கொரோனா பாதித்துள்ளது. இதில் அதிகபட்சமாக மகாராஷ்டிராவில்தான் நோய் பரவியிருக்கிறது. மகாராஷ்டிராவில் நேற்று மட்டும் புதிதாக 2487 பேருக்கு கொரோனா தொற்று அறியப்பட்டிருக்கிறது.


இதையடுத்து, கொரோனா பாதித்தவர் எண்ணிக்கை 67,655 ஆக அதிகரித்து விட்டது. கொரோனா பாதிப்பால் இம்மாநிலத்தில் 2197 பேர் பலியாகியுள்ளனர். மும்பையில் மட்டுமே 1287 பேர் பலியாகியுள்ளனர். மகாராஷ்டிராவுக்கு அடுத்து தமிழ்நாடு, டெல்லி மாநிலங்களில் அதிக நோய்ப் பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது.

You'r reading மகாராஷ்டிராவில் 67 ஆயிரம் பேருக்கு கொரோனா பாதிப்பு.. பலி 2179 ஆக உயர்வு.. Originally posted on The Subeditor Tamil

More India News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை