கொரோனா காலத்திலும் பெட்ரோல் விலை உயர்வு ஏன்? மோடிக்கு சோனியா கேள்வி..

கொரோனா காலத்திலும் பெட்ரோல், டீசல் விலையை உயர்த்திக் கொண்டே இருப்பது ஏன்? என்று கேட்டு பிரதமருக்கு சோனியா காந்தி கடிதம் அனுப்பியுள்ளார்.பிரதமர் மோடி தலைமையில் பாஜக அரசு கடந்த 2014ம் ஆண்டில் முதன்முதலாகப் பொறுப்பேற்ற போது, சர்வதேசச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை 106 டாலராக இருந்தது. அப்போது இந்தியாவில் பெட்ரோல் விலை ரூ.71 ஆக இருந்தது. இப்போது சர்வதேசச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை 38 டாலராகச் சரிந்து விட்டது. ஆனால், இந்தியாவில் பெட்ரோல் விலை ரூ.80 ஆக உயர்ந்திருக்கிறது. காரணம், விலைக் குறைவை விடச் சுங்க வரியை மத்திய அரசு உயர்த்திக் கொண்டே செல்கிறது.


இந்நிலையில், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, பிரதமருக்கு ஒரு கடிதம் அனுப்பியுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:பெட்ரோல், டீசல் மீதான சுங்க வரிகளை மத்திய அரசு உயர்த்திக் கொண்டே செல்வதால், கடந்த சில நாட்களாக அவற்றின் விலை உயர்ந்துள்ளது. இதன் மூலம், 2 லட்சத்து 60 ஆயிரம் கோடி வருவாயை ஈட்ட மத்திய அரசு திட்டமிட்டிருக்கிறது. ஆனால், கொரோனா காலத்தில் ஏழை நடுத்தர வர்க்க மக்கள் வேலை இழந்து, வருவாய் இழந்து தவித்து வரும் நிலையிலும் இப்படி அரசு செய்வது சரியான அணுகுமுறையே அல்ல.

கடந்த 6 ஆண்டு பாஜக ஆட்சியில் பெட்ரோல், டீசல் மீது 12 முறை சுங்க வரி உயர்த்தப்பட்டிருக்கிறது. இதன் மூலம், பெட்ரோல் மீது 258 சதவீதமும், டீசல் மீது 828 சதவீதமும் வரி உயர்த்தப்பட்டிருக்கிறது. இதன் மூலம், மத்திய அரசு இந்த 6 ஆண்டுகளில் 18 லட்சம் கோடியை ஈட்டியிருக்கிறது. இந்த சூழலில், மக்களுக்கு இந்த வருவாயில் இருந்து ஏதாவது உதவி செய்ய வேண்டுமெனில், பெட்ரோல், டீசல் வரிகளை அரசு குறைக்க வேண்டும்.இவ்வாறு சோனியா காந்தி கூறியுள்ளார்.

எங்களுடைய தமிழ் செய்திகளை உங்கள் மெயில் இன்பாக்சில் பெறுவதற்கு இங்கே உங்கள் மெயில் ஐடியை பதிவு செய்யவும் : Tamil news RSS

OR You can install Google News on Android or iOS, and then access our edition https://news.google.com/publications/CAAqBwgKMP_rkQsw3YOnAw?oc=3&ceid=IN:ta through the app.

Advertisement
மேலும் செய்திகள்
india-accounts-for-46-of-world-s-new-covid-19-cases-quarter-of-deaths
ஒட்டுமொத்த கொரோனா பாதிப்பில் 46% இந்தியாவில் பதிவாகியுள்ளது – உலக சுகாதார நிறுவனம்
covid-deaths-due-to-oxygen-shortage-no-less-than-genocide-says-allahabad-high-court
ஆக்ஸிஷஜன் இல்லாமல் இறப்பது இனப்படுகொலைக்கு ஒப்பானது – நீதிமன்றம் காட்டம்!
rahul-gandhi-slams-modi
ஆக்சிஜன் இல்லாமல் இறக்கிறார்கள் உங்களுக்கு வீடு கேக்குதா? – மோடியை சாடிய ராகுல்!
woman-in-an-auto-rickshaw-carried-the-body-of-her-corona-dead-husband-in-uttar-pradesh
ஆம்புலன்சுக்கு அதிக பணம் கேட்டதால்.. கணவரின் சடலத்தை ஆட்டோவில் எடுத்துச் சென்ற மனைவி
corona-infection-confirmed-8-lions-hyderabad-zoo
இந்தியாவில் முதன்முறையாக 8 சிங்கங்களுக்கு கொரோனா!
pinarayi-son-in-law-will-get-a-chance-in-kerala-ministry
மருமகனுக்கு அமைச்சர் பதவி கொடுக்கும் பினராயி விஜயன்?!
bihar-extends-lockdown-until-may-2021
பீகாரில் மே 15 வரை ஊரடங்கு நீட்டிப்பு.. மந்திரி நிதிஷ்குமார் அறிவிப்பு..
rahul-gandhi-says-to-put-lockdown-all-over-india
கொரோனாவை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அவசியம்.. ராகுல் காந்தி அறிவிக்கை..
dont-do-ct-scan-says-by-aiims-director
லேசான அறிகுறி இருந்தால் சி.டி ஸ்கேன் செய்ய தேவையில்லை.. எய்ம்ஸ் இயக்குனர் தகவல்..
sonu-sood-gets-critically-ill-covid-patient-airlifted
விமான ஆம்புலன்ஸ் அனுப்பி கொரோனா நோயாளியின் உயிரை மீட்ட சோனுசூட்!
Tag Clouds