முன்பு இந்திய அணிக்கு கேப்டன்.. இப்போது பியூன் வேலை.. மாற்றுத்திறனாளியை விரட்டும் வறுமை!

இந்தியாவில் மற்ற விளையாட்டுகளைக் காட்டிலும் கிரிக்கெட்டுக்கு இருக்கும் மதிப்பு வேறு விளையாட்டுகளுக்கு கிடையாது என்பது அனைவரும் அறிந்தது. இந்திய கிரிக்கெட் பிளேயர்கள் அனைவரும் கோடிகளில் புரள்கின்றனர். அதுபோக பிசிசிஐ சார்பில் பல்வேறு வசதிகள் வேறு. முன்பைவிட ஐபிஎல் வந்த பிறகு இது இன்னுமும் அதிகமானது. ஆனால் இது அனைத்தையும் இந்திய ஆண்கள் அணியினர் மட்டுமே அனுபவிக்கின்றனர். மகளிர் அணியினரோ, மாற்றுத்திறனாளி அணிகளோ இதற்கு விதிவிலக்கு. இதில் விளையாடும் பல வீரர்கள் வாழ்வாதாரத்துக்காகக் கஷ்டப்படும் செய்திகளை அவ்வப்போது பார்த்து வருகிறோம்.

இந்திய மாற்றுத்திறனாளி கிரிக்கெட் அணியின் கேப்டனாக இருந்தவர் தினேஷ் குமார் செயின். ஹரியானாவைச் சேர்ந்த இவர் 2015 முதல் 2019 வரையிலான இந்திய அணியில் இடம்பிடித்திருந்தார். இதே காலகட்டத்தில் அணிக்கு கேப்டனாகவும் செயல்பட்டுள்ளார். 2015ல் நடந்த ஐந்து நாடுகள் டோர்னமெண்ட்டில் 4 போட்டிகளில் 8 விக்கெட்டுகள் எடுத்து அசத்தினார். இந்திய அணியில் விளையாடும் போது ஓரளவு குடும்பத்தைச் சமாளித்து வந்த தினேஷுக்கு அதன்பிறகு சமாளிக்க முடியவில்லை. போலியோவால் கால்கள் முடங்கியதால் இவருக்கு வேலை எதுவும் கிடைக்கவில்லை.இந்நிலையில் தான் தற்போது தேசிய ஊக்கமருந்து தடுப்பு நிறுவனத்தின் பியூன் வேலைக்கு விண்ணப்பித்துள்ளார் இந்த 35 வயதுக்காரர். ஆனால் இந்த வேலை கிடைக்குமா என்பதிலும் சந்தேகம் எழுந்துள்ளது.

இதற்கான காரணத்தைக் கூறும் அவர், ``நான் 12ம் வகுப்பு முடிந்ததில் இருந்து கிரிக்கெட் விளையாடுகிறேன். இந்தியாவுக்காக விளையாடி இருக்கிறேன். என் குடும்பத்தை காப்பாற்றுவதற்கு என் கையில் தற்போது பணம் இல்லை. தேசிய ஊக்கமருந்து தடுப்பு நிறுவனத்தில் தற்போது ஒரு வேலை மட்டுமே உள்ளது.சாதாரண மக்களுக்கு இந்த வேலைக்கான தகுதி 25 வயது. என்னைப் போன்ற மாற்றுத்திறனாளிகளுக்கு வயது வரம்பு 35. ஆம், இதுவே எனது கடைசி வாய்ப்பு. நான் பிறந்தபோதே என் கால்கள் போலியோவால் பாதிக்கப்பட்டுள்ளது. ஆனால் கிரிக்கெட் என்றுவந்துவிட்டால் ஒருபோதும் நான் ஒரு மாற்றுத்திறனாளி என்று நினைத்து இல்லை" எனக் குமுறும் தினேஷுக்கு இந்த வேலை கிடைத்தாலே வாழ முடியும் என்ற நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார்.

எங்களுடைய தமிழ் செய்திகளை உங்கள் மெயில் இன்பாக்சில் பெறுவதற்கு இங்கே உங்கள் மெயில் ஐடியை பதிவு செய்யவும் : Tamil news RSS

OR You can install Google News on Android or iOS, and then access our edition https://news.google.com/publications/CAAqBwgKMP_rkQsw3YOnAw?oc=3&ceid=IN:ta through the app.

Advertisement
மேலும் செய்திகள்
india-accounts-for-46-of-world-s-new-covid-19-cases-quarter-of-deaths
ஒட்டுமொத்த கொரோனா பாதிப்பில் 46% இந்தியாவில் பதிவாகியுள்ளது – உலக சுகாதார நிறுவனம்
covid-deaths-due-to-oxygen-shortage-no-less-than-genocide-says-allahabad-high-court
ஆக்ஸிஷஜன் இல்லாமல் இறப்பது இனப்படுகொலைக்கு ஒப்பானது – நீதிமன்றம் காட்டம்!
rahul-gandhi-slams-modi
ஆக்சிஜன் இல்லாமல் இறக்கிறார்கள் உங்களுக்கு வீடு கேக்குதா? – மோடியை சாடிய ராகுல்!
woman-in-an-auto-rickshaw-carried-the-body-of-her-corona-dead-husband-in-uttar-pradesh
ஆம்புலன்சுக்கு அதிக பணம் கேட்டதால்.. கணவரின் சடலத்தை ஆட்டோவில் எடுத்துச் சென்ற மனைவி
corona-infection-confirmed-8-lions-hyderabad-zoo
இந்தியாவில் முதன்முறையாக 8 சிங்கங்களுக்கு கொரோனா!
pinarayi-son-in-law-will-get-a-chance-in-kerala-ministry
மருமகனுக்கு அமைச்சர் பதவி கொடுக்கும் பினராயி விஜயன்?!
bihar-extends-lockdown-until-may-2021
பீகாரில் மே 15 வரை ஊரடங்கு நீட்டிப்பு.. மந்திரி நிதிஷ்குமார் அறிவிப்பு..
rahul-gandhi-says-to-put-lockdown-all-over-india
கொரோனாவை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அவசியம்.. ராகுல் காந்தி அறிவிக்கை..
dont-do-ct-scan-says-by-aiims-director
லேசான அறிகுறி இருந்தால் சி.டி ஸ்கேன் செய்ய தேவையில்லை.. எய்ம்ஸ் இயக்குனர் தகவல்..
sonu-sood-gets-critically-ill-covid-patient-airlifted
விமான ஆம்புலன்ஸ் அனுப்பி கொரோனா நோயாளியின் உயிரை மீட்ட சோனுசூட்!
Tag Clouds