கைலாசா டாலரரை வெளியிட்ட நித்யானந்தா.. ஒரு டாலர் 11 கிராம் தங்கம்..

கைலாசா நாட்டுக்கான கரன்சியை வெளியிட்டு, கைலாசா ரிசர்வ் வங்கியை தொடங்கி வைத்துள்ளதாக சர்ச்சை சாமியார் நித்யானந்தா வீடியோ வெளியிட்டுள்ளார்.

தமிழ்நாட்டிலும், கர்நாடகாவிலும் பலாத்காரம் மற்றும் ஆட்கடத்தல் வழக்குகளில் சிக்கியவர் நித்யானந்தா சாமியார். நடிகை ரஞ்சிதாவுடன் ஆட்டம், மதுரை ஆதீன மடத்துக்குள் நுழைந்த விவகாரம், பெண்களை மயக்கி ஆசிரமத்தில் அடைத்து வைத்ததாக குற்றச்சாட்டு என்று பல்வேறு சர்ச்சைகளில் சிக்கி பிரபலமானவர்.

இப்படி நிறைய பிரச்னைகளில் சிக்கினாலும் நித்யானந்தாவுக்கு பல நாடுகளில் பக்தர்கள் இருக்கிறார்கள். கோடிக்கணக்கான சொத்துக்களையும் குவித்து வைத்திருக்கிறார். கர்நாடகாவில் வழக்கு விசாரணைக்கு நீதிமன்றத்தில் ஆஜராகாமல் தலைமறைவாக இருந்த நித்யானந்தாவை போலீசார் தேடி வந்தனர்.



கடந்த ஆண்டு நவம்பர் மாதத்தில் திடீரென சமூக ஊடகங்களில் நித்யானந்தா பேசும் வீடியோ வெளியானது. அதில் தான் தற்போது கைலாசா என்ற நாட்டை உருவாக்கி விட்டதாகவும், அங்குதான் குடியிருப்பதாகவும் அதில் அறிவித்திருந்தார். மேலும், கைலாசா அரசுக்காக ஒரு தனி இணையதளத்தையும் (www.kailaasa.org) அவர் ஏற்படுத்தினார்.

இதற்கு பின் அவரைப் பற்றி தமிழகத்தில் இருந்து சமூக ஊடகங்களில் விமர்சனங்கள் எழுவதும், அதற்கு அவர் கடுமையாக திட்டி வீடியோ வெளியிடுவதும் தொடர்கிறது. எனினும், நித்யானந்தா இருக்கும் இடத்தை அவர் பகிரங்கமாக அறிவிக்கவில்லை. ஆனால், அந்த இடம் ஈக்வடாரில் உள்ள ஒரு குட்டித் தீவு என்று போலீசார் கூறினர்.

இந்நிலையில், கடந்த வாரம் நித்யானந்தா ஒரு வீடியோ வெளியிட்டார். அதில் விநாயகர் சதூர்த்தியன்று(ஆக.22) கைலாசா நாட்டுக்கான கரன்சியை வெளியிடப் போவதாகவும், ரிசர்வ் வங்கியை அறிவிக்கப் போவதாகவும் கூறியிருந்தார்.

அதன்படி, இன்று கைலாசா டாலரை அறிமுகப்படுத்தி வீடியோ வெளியிட்டிருக்கிறார்.

அதில் அவர் பேசுகையில், கைலாசா நாட்டின் ஒரு டாலர் என்பது 11.66 கிராம் தங்கக் காசு. தமிழர்களின் வரலாற்றில் நாணயம் தங்கமாகவே இருக்கும். பொற்காசு என்பது தான் தமிழர்களின் நாணயம். அதே போல், ஒரு டாலர் என்பது 25 விதமாக அமைக்கப்பட்டிருக்கும். ஒரு டாலர் என்பது ஒரு தோலாவாக இருக்கும் என்று தெரிவித்துள்ளார்.

மேலும் தனது பேச்சில் தனம் என்பதற்கான பிற பெயர்களையும் அடுக்கியுள்ளார். வழக்கம் போல் வேதங்களைப் பற்றியும் பேசியிருக்கிறார். கைலாசாவின் ரிசர்வ் வங்கி கொள்கையையும் அவர் வெளியிட்டிருக்கிறார்.

எங்களுடைய தமிழ் செய்திகளை உங்கள் மெயில் இன்பாக்சில் பெறுவதற்கு இங்கே உங்கள் மெயில் ஐடியை பதிவு செய்யவும் : Tamil news RSS

OR You can install Google News on Android or iOS, and then access our edition https://news.google.com/publications/CAAqBwgKMP_rkQsw3YOnAw?oc=3&ceid=IN:ta through the app.

Advertisement
மேலும் செய்திகள்
india-accounts-for-46-of-world-s-new-covid-19-cases-quarter-of-deaths
ஒட்டுமொத்த கொரோனா பாதிப்பில் 46% இந்தியாவில் பதிவாகியுள்ளது – உலக சுகாதார நிறுவனம்
covid-deaths-due-to-oxygen-shortage-no-less-than-genocide-says-allahabad-high-court
ஆக்ஸிஷஜன் இல்லாமல் இறப்பது இனப்படுகொலைக்கு ஒப்பானது – நீதிமன்றம் காட்டம்!
rahul-gandhi-slams-modi
ஆக்சிஜன் இல்லாமல் இறக்கிறார்கள் உங்களுக்கு வீடு கேக்குதா? – மோடியை சாடிய ராகுல்!
woman-in-an-auto-rickshaw-carried-the-body-of-her-corona-dead-husband-in-uttar-pradesh
ஆம்புலன்சுக்கு அதிக பணம் கேட்டதால்.. கணவரின் சடலத்தை ஆட்டோவில் எடுத்துச் சென்ற மனைவி
corona-infection-confirmed-8-lions-hyderabad-zoo
இந்தியாவில் முதன்முறையாக 8 சிங்கங்களுக்கு கொரோனா!
pinarayi-son-in-law-will-get-a-chance-in-kerala-ministry
மருமகனுக்கு அமைச்சர் பதவி கொடுக்கும் பினராயி விஜயன்?!
bihar-extends-lockdown-until-may-2021
பீகாரில் மே 15 வரை ஊரடங்கு நீட்டிப்பு.. மந்திரி நிதிஷ்குமார் அறிவிப்பு..
rahul-gandhi-says-to-put-lockdown-all-over-india
கொரோனாவை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அவசியம்.. ராகுல் காந்தி அறிவிக்கை..
dont-do-ct-scan-says-by-aiims-director
லேசான அறிகுறி இருந்தால் சி.டி ஸ்கேன் செய்ய தேவையில்லை.. எய்ம்ஸ் இயக்குனர் தகவல்..
sonu-sood-gets-critically-ill-covid-patient-airlifted
விமான ஆம்புலன்ஸ் அனுப்பி கொரோனா நோயாளியின் உயிரை மீட்ட சோனுசூட்!
Tag Clouds