மகனின் தேர்வுக்காக வியக்க வைத்த தந்தையின் பேரன்பு.. நெகிழ்ந்து உதவிய ஆனந்த் மஹிந்திரா!

மத்தியப் பிரதேச மாநிலம் தார் மாவட்டம், மனவார் தேசில் என்ற குக்கிராமத்தைச் சேர்ந்தவர் தினக்கூலி தொழிலாளி சோபாராம். இவருடைய மகன் அசீஸ், பத்தாம் வகுப்புத் தேர்வில் மூன்று பாடங்களில் தேர்ச்சி பெறவில்லை. இதையடுத்து தேர்ச்சி பெறாத பாடங்களின் தேர்வை மீண்டும் எழுத, ரூக் ஜனா நாகின் என்ற கல்வித் திட்டத்தின் மூலம் விண்ணப்பித்தவருக்கு, கடந்த செவ்வாய்க்கிழமை தேர்வு நடந்துள்ளது. ஆனால் தேர்வு மையம் இவர்களின் கிராமத்துக்கு அருகில் இல்லாமல், கிராமத்தில் இருந்து 106 கி. மீ. தொலைவில் தார் நகரத்திலிருந்தது. ஊரடங்கால் போக்குவரத்து வசதிகள் இல்லாததால் அசீஸ் தேர்வு எழுத முடியாத நிலை ஏற்பட்டது.

இந்த விஷயம் சோபாராமுக்கு தெரியவர, மகனைத் தேர்வு எழுத வைக்க 106 கி. மீ. தூரத்தில் சைக்கிள் சென்று தார் நகரத்துக்கு சென்று மகனை தேர்வெழுத வைத்தார். நண்பரிடம் 500 ரூபாய்க் கடன் வாங்கிக்கொண்டும், தனது கிராமத்தில் இருந்து சைக்கிளில் பயணம் செய்திருந்தார். தேர்வு எழுதி முடித்துவிட்டு மீண்டும் அவர்கள் சைக்கிள் பயணத்தை ஆரம்பித்தபோது, விஷயம் அறிந்து அரசு அதிகாரிகள், அவர்கள் சொந்த ஊருக்குத் திரும்பிச் செல்ல போக்குவரத்து வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்தனர். தன் மகனுக்கு வாழ்க்கை கிடைக்க வேண்டும் என்பதற்காக சோபாராம் செய்த செயல் குறித்து அம்மாநில முதல்வர் கமல்நாத் உட்படப் பலர் நெகிழ்ந்து பாராட்டியிருந்தனர்.

இந்த தந்தையின் பாச செயல் பிரபல தொழிலதிபர் ஆனந்த் மஹிந்தராவுக்கு தெரியவர இப்போது சோபாராமுக்கு உதவ அவர் முன்வந்துள்ளார். ``இவர் ஒரு வீரதீரமான பெற்றோர்.தன் குழந்தைக்காக பெரிய கனவு காண்பவர். இது போன்ற செயல்கள் தான் ஒரு தேசத்தின் வளர்ச்சிக்கு பெரிய எரிசக்தியாக இருக்கும். எங்கள் அறக்கட்டளை சோபாராம் மகனின் கல்வி செலவை முழுமையாக ஏற்கும்" என்று நெகிழ்வாக பதிவிட்டுள்ளார்.

எங்களுடைய தமிழ் செய்திகளை உங்கள் மெயில் இன்பாக்சில் பெறுவதற்கு இங்கே உங்கள் மெயில் ஐடியை பதிவு செய்யவும் : Tamil news RSS

OR You can install Google News on Android or iOS, and then access our edition https://news.google.com/publications/CAAqBwgKMP_rkQsw3YOnAw?oc=3&ceid=IN:ta through the app.

Advertisement
மேலும் செய்திகள்
india-accounts-for-46-of-world-s-new-covid-19-cases-quarter-of-deaths
ஒட்டுமொத்த கொரோனா பாதிப்பில் 46% இந்தியாவில் பதிவாகியுள்ளது – உலக சுகாதார நிறுவனம்
covid-deaths-due-to-oxygen-shortage-no-less-than-genocide-says-allahabad-high-court
ஆக்ஸிஷஜன் இல்லாமல் இறப்பது இனப்படுகொலைக்கு ஒப்பானது – நீதிமன்றம் காட்டம்!
rahul-gandhi-slams-modi
ஆக்சிஜன் இல்லாமல் இறக்கிறார்கள் உங்களுக்கு வீடு கேக்குதா? – மோடியை சாடிய ராகுல்!
woman-in-an-auto-rickshaw-carried-the-body-of-her-corona-dead-husband-in-uttar-pradesh
ஆம்புலன்சுக்கு அதிக பணம் கேட்டதால்.. கணவரின் சடலத்தை ஆட்டோவில் எடுத்துச் சென்ற மனைவி
corona-infection-confirmed-8-lions-hyderabad-zoo
இந்தியாவில் முதன்முறையாக 8 சிங்கங்களுக்கு கொரோனா!
pinarayi-son-in-law-will-get-a-chance-in-kerala-ministry
மருமகனுக்கு அமைச்சர் பதவி கொடுக்கும் பினராயி விஜயன்?!
bihar-extends-lockdown-until-may-2021
பீகாரில் மே 15 வரை ஊரடங்கு நீட்டிப்பு.. மந்திரி நிதிஷ்குமார் அறிவிப்பு..
rahul-gandhi-says-to-put-lockdown-all-over-india
கொரோனாவை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அவசியம்.. ராகுல் காந்தி அறிவிக்கை..
dont-do-ct-scan-says-by-aiims-director
லேசான அறிகுறி இருந்தால் சி.டி ஸ்கேன் செய்ய தேவையில்லை.. எய்ம்ஸ் இயக்குனர் தகவல்..
sonu-sood-gets-critically-ill-covid-patient-airlifted
விமான ஆம்புலன்ஸ் அனுப்பி கொரோனா நோயாளியின் உயிரை மீட்ட சோனுசூட்!
Tag Clouds

READ MORE ABOUT :