கஞ்சா போதையில் ரகளை செய்த வாலிபர் அடித்துக்கொலை

கேரள மாநிலம் காசர்கோடு அருகே உள்ள மஞ்சேஸ்வரம் பகுதியைச் சேர்ந்தவர் கிருபாகரன் (29). ஒரு தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்த இவர் கஞ்சாவுக்கு அடிமையானவர். அடிக்கடி கஞ்சா போதையில் அப்பகுதியில் ரகளையில் ஈடுபடுவது வழக்கம். நேற்று இரவும் வழக்கம்போல இவர் கஞ்சா போதையில் வந்துள்ளார். ஒரு கையில் கத்தரிக்கோலுடன் பக்கத்து வீட்டுக்குள் நுழைந்த கிருபாகரன், அங்கிருந்த ஜிதேஷ் என்ற வாலிபரைச் சரமாரியாகக் குத்தினார். இதில் அதிர்ச்சியடைந்த அந்த வீட்டினர் கிருபாகரனை அடிக்க பாய்ந்தனர்.

இதையடுத்து அந்த வீட்டை விட்டு வெளியே ஓடிய அவர், பக்கத்து வீட்டில் நுழைந்து அங்கிருந்த உமேஷ் (28) என்ற வாலிபரையும் குத்தினார். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இது குறித்து அறிந்ததும் அங்கு ஊர் மக்கள் திரண்டனர். அவர்கள் கிருபாகரனைப் பிடிக்க முயன்றனர். ஆனால் அவர் தன்னிடமிருந்த கத்தரிக்கோலால் அப்பகுதியினரையும் குத்த பாய்ந்தார். இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதியினர் கிருபாகரன் மீது கல்வீசித் தாக்கினர். கையில் கிடைத்த தடி மற்றும் ஆயுதங்களால் தாக்கினர். இதில் பலத்த காயமடைந்த கிருபாகரன் அங்கேயே ரத்தவெள்ளத்தில் சாய்ந்தார்.

இதையடுத்து ஊர்மக்களே அவரை ஒரு ஆம்புலன்சில் ஏற்றி காசர்கோடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் சிகிச்சை பலனளிக்காமல் அவர் இறந்தார். இதுகுறித்து மஞ்சேஸ்வரம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர். வாலிபரை ஊர் மக்கள் அடித்துக் கொன்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதற்கிடையே கிருபாகரன் கத்தரிக்கோலால் குத்தியதில் படுகாயமடைந்த உமேஷ் மற்றும் ஜிதேஷ் இருவரும் சிகிச்சைக்காக காசர்கோடு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

எங்களுடைய தமிழ் செய்திகளை உங்கள் மெயில் இன்பாக்சில் பெறுவதற்கு இங்கே உங்கள் மெயில் ஐடியை பதிவு செய்யவும் : Tamil news RSS

OR You can install Google News on Android or iOS, and then access our edition https://news.google.com/publications/CAAqBwgKMP_rkQsw3YOnAw?oc=3&ceid=IN:ta through the app.

Advertisement
மேலும் செய்திகள்
india-accounts-for-46-of-world-s-new-covid-19-cases-quarter-of-deaths
ஒட்டுமொத்த கொரோனா பாதிப்பில் 46% இந்தியாவில் பதிவாகியுள்ளது – உலக சுகாதார நிறுவனம்
covid-deaths-due-to-oxygen-shortage-no-less-than-genocide-says-allahabad-high-court
ஆக்ஸிஷஜன் இல்லாமல் இறப்பது இனப்படுகொலைக்கு ஒப்பானது – நீதிமன்றம் காட்டம்!
rahul-gandhi-slams-modi
ஆக்சிஜன் இல்லாமல் இறக்கிறார்கள் உங்களுக்கு வீடு கேக்குதா? – மோடியை சாடிய ராகுல்!
woman-in-an-auto-rickshaw-carried-the-body-of-her-corona-dead-husband-in-uttar-pradesh
ஆம்புலன்சுக்கு அதிக பணம் கேட்டதால்.. கணவரின் சடலத்தை ஆட்டோவில் எடுத்துச் சென்ற மனைவி
corona-infection-confirmed-8-lions-hyderabad-zoo
இந்தியாவில் முதன்முறையாக 8 சிங்கங்களுக்கு கொரோனா!
pinarayi-son-in-law-will-get-a-chance-in-kerala-ministry
மருமகனுக்கு அமைச்சர் பதவி கொடுக்கும் பினராயி விஜயன்?!
bihar-extends-lockdown-until-may-2021
பீகாரில் மே 15 வரை ஊரடங்கு நீட்டிப்பு.. மந்திரி நிதிஷ்குமார் அறிவிப்பு..
rahul-gandhi-says-to-put-lockdown-all-over-india
கொரோனாவை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அவசியம்.. ராகுல் காந்தி அறிவிக்கை..
dont-do-ct-scan-says-by-aiims-director
லேசான அறிகுறி இருந்தால் சி.டி ஸ்கேன் செய்ய தேவையில்லை.. எய்ம்ஸ் இயக்குனர் தகவல்..
sonu-sood-gets-critically-ill-covid-patient-airlifted
விமான ஆம்புலன்ஸ் அனுப்பி கொரோனா நோயாளியின் உயிரை மீட்ட சோனுசூட்!
Tag Clouds

READ MORE ABOUT :