விஐபிக்களை வீழ்த்த ஸ்வப்னா கொடுத்த சூப்பர் பரிசு என்ன தெரியுமா?

திருவனந்தபுரம் தங்கக் கடத்தல் வழக்கில் முக்கிய குற்றவாளியான ஸ்வப்னா சுரேஷ் விஐபிகளை வீழ்த்த கிலோவுக்கு ₹2,000 விலையுள்ள பேரீச்சம்பழத்தைப் பெட்டி பெட்டியாகக் கொடுத்தது தெரிய வந்துள்ளது.திருவனந்தபுரம் தூதரகம் வழியாகத் தங்கம் கடத்திய வழக்கில் கைது செய்யப்பட்ட ஸ்வப்னா சுரேஷ் அரசியல் பிரமுகர்கள், அதிகாரிகள் உள்பட விஐபிகளை வீழ்த்தி காரியம் சாதிப்பதில் பலே கில்லாடியாக இருந்துள்ளார் எனத் தெரியவந்துள்ளது. இவர் திருவனந்தபுரத்தில் ஐக்கிய அரபு அமீரக தூதரகத்தில் பணிபுரிந்தபோது அசைக்க முடியாத மிகச் செல்வாக்கு உள்ளவராகத் திகழ்ந்து வந்தார். இவரைக் கேட்காமல் தூதரகத்தில் யாரும் எதுவும் செய்ய முடியாது என்ற நிலை இருந்தது. தூதரகத்தில் மட்டுமில்லாமல் கேரள அரசில் அமைச்சர்கள் உள்பட முக்கிய பிரமுகர்கள் இடையேயும் இவருக்கு பெரும் செல்வாக்கு இருந்தது.

பல முக்கிய ஐஏஎஸ், ஐபிஎஸ் உட்பட அதிகாரிகளையும் தனது கைக்குள் வைத்திருந்தார். இவர்கள் துபாய் உள்பட ஐக்கிய அரபு அமீரக நாடுகளுக்குச் சென்றால் அங்கு அவர்களுக்குத் தேவையான அனைத்து செலவுகளையும் இவர் கவனித்துக் கொள்வார். இதனால் இவர் என்ன கோரிக்கையை முன்வைத்தாலும் அதிகாரிகள் செய்ய ரெடியாக இருந்தனர். தங்கக் கடத்தல் மோசடி மட்டுமில்லாமல் அரசின் பல திட்டங்களிலும் இவர் கமிஷன் பெற்று வந்ததும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

இந்நிலையில் அரசியல் பிரமுகர்கள் உட்பட முக்கிய அதிகாரிகளை ஸ்வப்னா எப்படி வீழ்த்தினார் எனத் தெரிய வந்துள்ளது. ஏற்கனவே துபாயில் இருந்து கடந்த 3 வருடங்களுக்கு முன் பள்ளி மாணவர்களுக்காக என்று கூறி 17 ஆயிரம் கிலோ பேரீச்சம்பழம் கொண்டுவரப்பட்டது. இவை கொண்டுவரப்பட்ட பார்சல்களிலும் தங்கம் கடத்தப்பட்டிருக்கலாம் எனச் சந்தேகம் எழுந்துள்ளது.

இந்நிலையில் அரசியல் பிரமுகர்கள், அதிகாரிகள் உள்பட விஐபிகளை வீழ்த்துவதற்காக ஸ்வப்னா சுரேஷ் மிக உயர்ரக பேரீச்சம் பழத்தைக் கொடுத்து வந்துள்ளார். இதற்குக் கிலோ 2000 ரூபாய்க்கு மேல் இருக்கும். பெட்டி பெட்டியாக இதுபோன்ற உயர்ரக பேரீச்சம்பழத்தைக் கொடுத்துத் தான் விஐபிகளை இவர் தனது வலைக்குள் சிக்க வைத்துள்ளார் என என்ஐஏவின் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

எங்களுடைய தமிழ் செய்திகளை உங்கள் மெயில் இன்பாக்சில் பெறுவதற்கு இங்கே உங்கள் மெயில் ஐடியை பதிவு செய்யவும் : Tamil news RSS

OR You can install Google News on Android or iOS, and then access our edition https://news.google.com/publications/CAAqBwgKMP_rkQsw3YOnAw?oc=3&ceid=IN:ta through the app.

Advertisement
மேலும் செய்திகள்
india-accounts-for-46-of-world-s-new-covid-19-cases-quarter-of-deaths
ஒட்டுமொத்த கொரோனா பாதிப்பில் 46% இந்தியாவில் பதிவாகியுள்ளது – உலக சுகாதார நிறுவனம்
covid-deaths-due-to-oxygen-shortage-no-less-than-genocide-says-allahabad-high-court
ஆக்ஸிஷஜன் இல்லாமல் இறப்பது இனப்படுகொலைக்கு ஒப்பானது – நீதிமன்றம் காட்டம்!
rahul-gandhi-slams-modi
ஆக்சிஜன் இல்லாமல் இறக்கிறார்கள் உங்களுக்கு வீடு கேக்குதா? – மோடியை சாடிய ராகுல்!
woman-in-an-auto-rickshaw-carried-the-body-of-her-corona-dead-husband-in-uttar-pradesh
ஆம்புலன்சுக்கு அதிக பணம் கேட்டதால்.. கணவரின் சடலத்தை ஆட்டோவில் எடுத்துச் சென்ற மனைவி
corona-infection-confirmed-8-lions-hyderabad-zoo
இந்தியாவில் முதன்முறையாக 8 சிங்கங்களுக்கு கொரோனா!
pinarayi-son-in-law-will-get-a-chance-in-kerala-ministry
மருமகனுக்கு அமைச்சர் பதவி கொடுக்கும் பினராயி விஜயன்?!
bihar-extends-lockdown-until-may-2021
பீகாரில் மே 15 வரை ஊரடங்கு நீட்டிப்பு.. மந்திரி நிதிஷ்குமார் அறிவிப்பு..
rahul-gandhi-says-to-put-lockdown-all-over-india
கொரோனாவை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அவசியம்.. ராகுல் காந்தி அறிவிக்கை..
dont-do-ct-scan-says-by-aiims-director
லேசான அறிகுறி இருந்தால் சி.டி ஸ்கேன் செய்ய தேவையில்லை.. எய்ம்ஸ் இயக்குனர் தகவல்..
sonu-sood-gets-critically-ill-covid-patient-airlifted
விமான ஆம்புலன்ஸ் அனுப்பி கொரோனா நோயாளியின் உயிரை மீட்ட சோனுசூட்!
Tag Clouds

READ MORE ABOUT :