பாப்புலர் நிதி நிறுவன மோசடி சிபிஐ விசாரிக்க கேரள அரசு உத்தரவு

தமிழகம், கேரளா உள்பட பல்வேறு மாநிலங்களில் ₹ 2000 கோடிக்கும் மேல் மோசடி செய்த பாப்புலர் நிதி நிறுவனத்துக்கு எதிராக சிபிஐ விசாரிக்க கேரள அரசு உத்தரவிட்டுள்ளது.

கேரள மாநிலம் பத்தனம்திட்டாவில் கடந்த 50 வருடங்களுக்கு முன் தொடங்கப்பட்ட பாப்புலர் பைனான்ஸ் என்ற நிதி நிறுவனம் நாளடைவில் கேரளாவிலும், பின்னர் தமிழ்நாடு, கர்நாடகா, மகாராஷ்டிரா, ஹரியானா உட்பட மாநிலங்களிலும் கிளைகளை தொடங்கியது. மிக நம்பகமான நிதி நிறுவனம் எனப் பெயர் இருந்ததால் ஏராளமானோர் இந்த நிறுவனத்தில் முதலீடு செய்தனர். நகைக்கடன், பணப்பரிமாற்றம், நிரந்தர முதலீடு உட்படப் பல சேவைகளை இந்த நிறுவனம் வழங்கி வந்தது.

இந்நிலையில் கடந்த இரு மாதங்களுக்கு முன் இந்த நிறுவனத்தின் கேரளாவில் உள்ள கிளைகள் திடீரென மூடப்பட்டன. இதையடுத்து வாடிக்கையாளர்கள் போலீசில் புகார் செய்தனர். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணையை தொடங்கினர். சில நாட்களிலேயே அனைத்து கிளைகளும் அடுத்தடுத்து மூடப்பட்டன. இதன் உரிமையாளர்களான ராய் டேனியல், இவரது மனைவி பிரபா தாமஸ் மற்றும் அவர்களது 3 மகள்களும் தலைமறைவானார்கள். அவர்களை போலீசார் தேடி வந்தனர். வெளிநாட்டுக்குத் தப்பிக்க முயன்ற இவர்கள் 5 பேரும் பல்வேறு பகுதிகளில் வைத்து கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

இந்நிலையில் இவர்கள் மோசடி நடத்திய ₹2,000 கோடிக்கு மேல் பணத்தைப் பல வெளிநாடுகளில் முதலீடு செய்திருப்பதாகவும், எனவே இந்த வழக்கை சிபிஐ விசாரிக்க வேண்டும் என்று கூறி பல வாடிக்கையாளர்கள் கேரள உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இதையடுத்து இது தொடர்பாக முடிவைத் தெரிவிக்குமாறு கேரள உயர்நீதிமன்றம் கேரள அரசுக்கு நோட்டீஸ் அனுப்பியது. விசாரணையை சிபிஐயிடம் ஒப்படைக்கத் தயாராக இருப்பதாகக் கேரள அரசு தெரிவித்தது. இந்நிலையில் பாப்புலர் நிறுவன மோசடி குறித்து சிபிஐ விசாரிக்க இன்று கேரள அரசு உத்தரவிட்டுள்ளது.

எங்களுடைய தமிழ் செய்திகளை உங்கள் மெயில் இன்பாக்சில் பெறுவதற்கு இங்கே உங்கள் மெயில் ஐடியை பதிவு செய்யவும் : Tamil news RSS

OR You can install Google News on Android or iOS, and then access our edition https://news.google.com/publications/CAAqBwgKMP_rkQsw3YOnAw?oc=3&ceid=IN:ta through the app.

Advertisement
மேலும் செய்திகள்
india-accounts-for-46-of-world-s-new-covid-19-cases-quarter-of-deaths
ஒட்டுமொத்த கொரோனா பாதிப்பில் 46% இந்தியாவில் பதிவாகியுள்ளது – உலக சுகாதார நிறுவனம்
covid-deaths-due-to-oxygen-shortage-no-less-than-genocide-says-allahabad-high-court
ஆக்ஸிஷஜன் இல்லாமல் இறப்பது இனப்படுகொலைக்கு ஒப்பானது – நீதிமன்றம் காட்டம்!
rahul-gandhi-slams-modi
ஆக்சிஜன் இல்லாமல் இறக்கிறார்கள் உங்களுக்கு வீடு கேக்குதா? – மோடியை சாடிய ராகுல்!
woman-in-an-auto-rickshaw-carried-the-body-of-her-corona-dead-husband-in-uttar-pradesh
ஆம்புலன்சுக்கு அதிக பணம் கேட்டதால்.. கணவரின் சடலத்தை ஆட்டோவில் எடுத்துச் சென்ற மனைவி
corona-infection-confirmed-8-lions-hyderabad-zoo
இந்தியாவில் முதன்முறையாக 8 சிங்கங்களுக்கு கொரோனா!
pinarayi-son-in-law-will-get-a-chance-in-kerala-ministry
மருமகனுக்கு அமைச்சர் பதவி கொடுக்கும் பினராயி விஜயன்?!
bihar-extends-lockdown-until-may-2021
பீகாரில் மே 15 வரை ஊரடங்கு நீட்டிப்பு.. மந்திரி நிதிஷ்குமார் அறிவிப்பு..
rahul-gandhi-says-to-put-lockdown-all-over-india
கொரோனாவை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அவசியம்.. ராகுல் காந்தி அறிவிக்கை..
dont-do-ct-scan-says-by-aiims-director
லேசான அறிகுறி இருந்தால் சி.டி ஸ்கேன் செய்ய தேவையில்லை.. எய்ம்ஸ் இயக்குனர் தகவல்..
sonu-sood-gets-critically-ill-covid-patient-airlifted
விமான ஆம்புலன்ஸ் அனுப்பி கொரோனா நோயாளியின் உயிரை மீட்ட சோனுசூட்!
Tag Clouds